பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸை நியமித்தார் ராணி 2ம் எலிசபெத்..!

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸை அந்நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்துள்ளார். போரீஸ் ஜான்சன் பதவி விலகல் முடிவை அடுத்து, கன்சர்வேடிவ் கட்சியில் புதிய பிரதமரை தேர்வு செய்ய நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிதியமைச்சரான ரிசி சுனக்கை தோற்கடித்து லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து ஸ்காட்லாந்து சென்று ராணியை நேரில் சந்தித்து லிஸ் டிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது புதிய அரசை அமைக்கும்படி லிஸ் டிரஸை ராணி கேட்டுக் கொண்டதாகவும், … Read more

வட கொரியாவிடம் ஆயுதங்கள் வாங்கி குவிக்க ரஷ்ய முடிவு| Dinamalar

மாஸ்கோ: உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா , வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா போர் நடத்தி வருகிறது. போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.இந்நிலையில் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிட ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியது, உக்ரைனுடன் போர் நடத்தி வரும் ரஷ்யா ஈரான் தயாரித்த டிரோன்களை வாங்கி பயன்படுத்தியது. தற்போது … Read more

கத்திக்குத்து கொலையாளி உடல் மீட்பு| Dinamalar

வெல்டன்:கனடாவில் தொடர் கத்திக் குத்து சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் இருவரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவின் சாஸ்கத்செவான் மாகாணத்தில், நேற்று முன்தினம் வெவ்வேறு இடங்களில், கத்திக்குத்து சம்பவங்கள் நடந்தன. இதில், 10 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தில், டேமியன் சேன்டர்சன், 31, அவருடைய சகோதரர் மைல்ஸ் சேன்டர்சன், 30, ஈடுபட்டதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர்.இந்நிலையில், கத்திக் குத்து சம்பவம் நடந்த ஒரு இடத்துக்கு அருகே, புதரில் இருந்து டேமியன் சேன்டர்சனின் உடல் நேற்று … Read more

ஹின்னம்னார் சூறாவளிகரையை கடந்தது| Dinamalar

சியோல்:சக்தி வாய்ந்த சூறாவளியான, ‘ஹின்னம்னார்’ தென் கொரியாவில் நேற்று கரையை கடந்தது. அப்போது, 3 அடி உயரத்துக்கு தேங்கும் அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கியது; சாலைகள் பெரும் சேதம் அடைந்தன; 66 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின; ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.கிழக்காசிய நாடான தென் கொரிய கடற்பகுதியில், ‘ஹின்னம்னார்’ என்ற சூறாவளி மையம் கொண்டது. அந்நாடு இதுவரை கண்டிராத சக்தி வாய்ந்த சூறாவளியாக உருவானது. இந்நிலையில் அது நேற்று சொகுசு விடுதிகள் அடங்கிய சுற்றுலா தலமான … Read more

சீன நிலநடுக்கத்தில் 65 பேர் பலி| Dinamalar

பீஜிங், தென்மேற்கு சீனாவில், நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், 65 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நம் அண்டை நாடான சீனாவின் சிசுவான் மாகாணத்தில், நேற்று முன்தினம், 6.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு, அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.மலைகள் அதிகம் உள்ள சிசுவானின் லுாடிங் பகுதியில், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பாறைகள் விழுந்ததில், வீடுகள், சாலைகள் கடும் சேதமடைந்துள்ளன.தன்னாட்சி … Read more

சீன நிலநடுக்கம்: உயிரிழப்பு 46 ஆக அதிகரிப்பு

பெய்ஜிங்: சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது. லூடிங் நகரத்தை மையமாகக் கொண்டு பூமிக்கடியில் 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 46 பேர் பலியாகினர். 16 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது. … Read more

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு..!

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய பகுதியில் லூடிங் கவுண்டி பகுதியில் நேற்று மதியம் 12.55 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துவிழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.8 என பதிவாகியுள்ளது. இந்த இடர்பாடுகளில் சிக்கி பலர் பாதிப்பாடைந்துள்ளனர். இதுவரை இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆக உள்ளது. இந்த நிலநடுக்கமானது மேலும் சில பகுதிகளில் உணரப்பட்டது. … Read more

இருளில் மூழ்கிய குடியிருப்புகள்… துண்டிக்கப்பட்ட சாலைகள்… தென்கொரியாவை புரட்டிப்போட்ட புயல்!

கனமழை, வெள்ளம், புயல், பூகம்பம், எரிமலை வெடிப்பு, காட்டுத் தீ என ஏதாவதொரு இயற்கை சீற்றத்தை உலக நாடுகள் அவ்வபோது எதிர்கொண்டுதான் வருகின்றன. இவற்றின் வரிசையில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் சில தினங்களுக்கு முன் சக்தி வாய்ந்த சூறாவளி புயல் உருவாகி இருந்தது. ஹன்னம்னோர் என்று பெயரிட்ட இப்புயல் சீனாவின் கிழக்குப் பகுதி, ஜப்பான் மற்றஉம் தென்கொரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதன்படியே, இந்திய நேரப்படி இன்று அதிகாலை தென் கொரியாவினன் தெற்கு கடற்கரை … Read more

ஒரே இரவில் உலகின் 25வது பணக்காரர் ஆன நபர்… நடந்தது என்ன!

அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமா எனவும், கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என பழமொழிகளை பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்கக் கூடும். அமெரிக்காவில் இதுபோன்ற  நிகழ்வு ஒன்று நடந்தது. திடீரென்று அவர் மொபைலில்  வந்த  மெசேஜை பார்த்ததும் அவர் ஒன்றுமே புரியாமல் திகைத்துப் போனார். அவரது வங்கிக் கணக்கில் சுமார் 3400 பில்லியன் ரூபாய்  வரவு வைக்கப்பட்ட தகவலை பார்த்து, கிட்டத் தட்ட மயங்கி விழுந்து விட்டார் எனலாம். இந்த பரிவர்த்தனையின் மூலம், அவர் ஒரே … Read more

‘வடகொரியாவிடம் இருந்து பீரங்கி குண்டுகள், ஏவுகணைகளை வாங்கும் ரஷ்யா’

வாஷிங்டன்: வடகொரியாவிடமிருந்து லட்சக்கணக்கான எண்ணிக்கையில் பீரங்கி குண்டுகளையும், ஏவுகணைகளையும் ரஷ்யா வாங்குகிறது என்று அமெரிக்காவிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் நியூயார் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘லட்சக்கணக்கான எண்ணிக்கையில் பீரங்கி குண்டுகளையும், ஏவுகணைகளையும் வடகொரியாவிடமிருந்து ரஷ்யா வாங்கவுள்ளது. இவை அணைத்தும் கடல் வழியாக வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், எதிர்காலத்திலும் இம்மாதிரியான ஆயுதங்களை வடகொரியாவிடமிருந்து வாங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போருக்குப் பின் வடகொரியா, ஈரான் உடனான உறவை ரஷ்யா வலுப்படுத்தி … Read more