இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம்; துபாய் முழுதும் பொருத்தப்பட்டது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் துபாய் : பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், துபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், ‘வெண்டிங்’ இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், ‘டெலிவரி’ ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்.குடும்பத்தினருக்கு பணத்தை சேமிப்பதற்காக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்றுவேளை … Read more

இதுவரை வெளிவராத மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் படம்: அரச குடும்பம் வெளியீடு

லண்டன், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். மறுநாளில் நாட்டின் மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். ராணியின் மறைவால் அரச முறை துக்கம் கடைப்பிடிப்பது பற்றி பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “மாட்சிமை தங்கிய ராணியின் மறைவையடுத்து, அவரது இறுதிச்சடங்குக்கு பின்னர் மேலும் ஒரு வாரம் அரச துக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது மன்னர் விருப்பம். அரச துக்கம், அரச குடும்பத்தினரால், பணியாளர்களால், படையினரால் கடைபிடிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது. இதையொட்டி … Read more

ராணியின் இறுதி சடங்குக்கு முன்பு ஓட்டலில் இசை நிகழ்ச்சி – சர்ச்சையில் சிக்கிய ஜஸ்டீன் ட்ரூடோ

ஒட்டாவா, இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடல் நலக்குறைவால் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். அவரின் இறுதி சடங்கு லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவும் ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்றார். இந்த நிலையில் ராணியின் இறுதி சடங்குக்கு முன்பாக ஜஸ்டீன் ட்ரூடோ லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பியானே வாசித்தபடி மகிழ்ச்சியாக பாடல் பாடும் … Read more

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறோம் – இந்தியா உறுதி

கொழும்பு, இலங்கை வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்கிறது. இலங்கைக்கு இந்தியா கடன் மற்றும் நிதி உதவிகளை அளித்துள்ளது. இலங்கைக்கு அதிகமான நிதி உதவி அளித்த நாடு இந்தியாவே ஆகும். ஆனால், இலங்கைக்கு இந்தியா இனிமேல் நிதி உதவி அளிக்காது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் நேற்று மறுப்பு தெரிவித்தது. இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கை மக்கள் சந்தித்து வரும் பொருளாதார சிக்கலில் இருந்து … Read more

பிரிட்டன் மன்னர் சார்லஸ் முன் காத்திருக்கும் சவால்கள்| Dinamalar

லண்டன்:பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் லண்டனில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், 1,000 ஆண்டுகள் பழமையும், பெருமையும் வாய்ந்த அரசாட்சியை வழிநடத்தி செல்வதில் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு, சர்வதேச தலைவர்களும், பிரிட்டன் மக்களும் திரண்டு வந்து நேற்று முன் தினம் பிரியாவிடை அளித்தனர்.லண்டனின் விண்ட்ஸர் அரண்மனையில் உள்ள கல்லறையில் ராணியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 1,000 ஆண்டுகள் பழமையான பிரிட்டன் … Read more

ரஷ்யாவுடன் இணையும்உக்ரைன் பிராந்தியங்கள்| Dinamalar

கீவ், ரஷ்ய ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள், அந்நாட்டுடன் இணைய உள்ளன. இதற்காக மக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு விரைவில் துவங்க உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், போரை தீவிரப்படுத்தும் வகையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு … Read more

பிரிட்டன் ராணியை அவமதித்தாராகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?| Dinamalar

லண்டன், :மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல பாப் பாடகரான ‘குவீனின்’ பாடலை பாடி, லண்டன் ஹோட்டலில் பார்ட்டியில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, கடந்த 8ம் தேதி காலமானார்.அவரது உடல் நேற்று முன் தினம் லண்டனில் அடக்கம் செய்யப்பட்டது. ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பல்வேறு நாட்டு தலைவர்களும் லண்டன் வந்திருந்தனர். வட அமெரிக்க நாடான … Read more

செப்டம்பர் 19 என்றாலே பீதியில் உறையும் மெக்சிகோ மக்கள்… காரணம் இதுதான்!

உலகின் ஏதாவதொரு பகுதியில் அவ்வப்போது பூமி அதிர்வதும். அதன் விளைவாக நிலநடுக்கம் ஏற்படுவுதும் தற்போது வழக்கமான நிகழ்வு ஆகிவிட்டது. சீனா, தைவான், பப்புவா நியூ கினியா என வரிசையாக பல்வேறு நாடுகளில் அண்மையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு -காஷ்மீரின் லடாக் பகுதியிலும் சில தினங்களுக்கு முன்பு நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதனால் விளைவாக பெரிய அளவில் உயிர்சேதம் இல்லை என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், கட்டடங்கள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் தங்களது உறைவிடங்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. … Read more

கோஹினூரில் இருந்து க்ரீஸ் வரை : பிரிட்டனில் உள்ள பிற நாட்டு கலைப் பொருட்கள்

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, கடந்த 2 வாரங்களாக, அவர் குறித்த செய்திகளே உலகம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தன. அவர் குறித்த செய்திகள் வெளியான அதே சமயம், பிரிட்டனில் உள்ள பிற நாடுகளின் விலை மதிப்பில்லா கலைப்பொருட்களை திரும்பத் தர வேண்டும் என்ற குரல்கள் பரவலாக எழுந்துள்ளன. கோஹினூர் வைரம் ராணி இறந்த சில மணி நேரங்களிலேயே அவரது கிரீடத்தில் உள்ள கோஹினூர் வைரத்தைத் திருப்பித் தர வேண்டுமென இந்தியா முழுவதிலும் இருந்து பலர் சமூக … Read more

மாயா..! – குளோனிங் மூலம் உருவான உலகின் முதல் ஓநாய் – சீன விஞ்ஞானிகள் அசத்தல்!

குளோனிங் தொழில்நுட்பம் மூலம் ஆர்க்டிக் வகை ஓநாயை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்து உள்ளனர். சீனாவைச் சேர்ந்த சினோஜீன் பயோ டெக்னாலஜி நிறுவனம், ஆர்க்டிக் ஓநாய் ஒன்றை குளோனிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த ஓநாய்க்கு “மாயா” என்று பெயரிடப்பட்டு உள்ளது. உலகில் குளோனிங் முறையில் பிறந்த முதல் ஓநாய் இதுவே ஆகும். பெய்ஜிங் ஆய்வகத்தில் கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி பிறந்த இந்த ஓநாய் 100 நாட்களை கடந்து … Read more