Video: அமெரிக்காவில் 4 இந்தியர்கள் கடத்தல்… 2 நாள்களுக்கு பின் உடல்கள் கண்டெடுப்பு!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், மெர்சிட் கவுண்டி என்ற இடத்தில், இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த அரூஹி தேரி என்ற 8 மாத குழந்தை, அதன் தாயார் ஜஸ்லீன் காவ் (27), தந்தை ஜஸ்தீப் சிங் (36), உறவினர் அமந்தீப் சிங் (39)ஆகியோர் கடந்த திங்கட்கிழமை அன்று (அக். 3) ஒருவரால் கடத்தப்பட்டுள்ளனர்.  அவர்களை துப்பாக்கி முனையில் வீட்டிலிருந்து ஒருவர், கடத்திச்செல்லும் சிசிடிவி காணொலி போலீசாரால் வெளியிடப்பட்டது. இந்த காணொலி வெளியாக … Read more

அடுத்தாண்டு ஜூன் 3ம் தேதி பிரிட்டன் மன்னர் முடிசூட்டு விழா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, முதுமை காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார்.இதையடுத்து, பிரிட்டன் அரச குடும்பத்து வழக்கப்படி, மூன்றாம் சார்லஸ் மன்னரானார்.கடந்த மாதம்,செப்., 10ம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற விழாவில், மன்னராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான ஆவணத்தில் மூன்றாம் சார்லஸ் கையெழுத்திட்டார். பின்னர் அவர் … Read more

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா..? புதிய ஆதாரம் வெளியீடு

லண்டன், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்து இருக்கிறது. இதுபற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2018-ம் ஆண்டு, மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தில் பனிக்கட்டியின் (மூடுபனி) மேற்பரப்பு தாழ்வதையும், உயர்வதையும் கண்டறிந்து, அதன் அடியில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம் … Read more

உக்ரைனில் இருந்து சிறுத்தைகளை மீட்டு தர மத்திய அரசுக்கு ஆந்திர டாக்டர் கோரிக்கை

லண்டன், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எலும்பியல் மருத்துவரான கிரிகுமார் பாட்டீல் உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் டான்பாஸ் மாகாணத்தில் உள்ள செவரோடோனெட்ஸ்க்கி நகரில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை விலைக்கு வாங்கி வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார். இந்த சூழலில்தான் கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது. போர் காரணமாக உக்ரைனில் வசித்து … Read more

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை புகார்: விசாரணைக்காக இன்று நேபாளம் திரும்புகிறார் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானே

காத்மாண்டு, நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார். இந்த நிலையில் தான் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நண்பர் … Read more

தென்கொரியாவை நோக்கி கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணை வீச்சு!

சியோல், வட கொரியா கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பான் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ஏவுகணையை ஏவியது.வடகொரியா பரிசோதித்த ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தது. 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வட கொரிய ஏவுகணை இதுவாகும். இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியது. வடகொரியாவுக்கு … Read more

இந்திய இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலி: குழந்தைகளை பாதுகாக்க WHO எச்சரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் சிரப்கள் தொடர்பாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்துகளில் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. நச்சுத்தன்மை வாய்ந்த அந்த ராசாயனங்கள் ஆபத்தானவை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காம்பியாவில் அடையாளம் காணப்பட்ட நான்கு மருந்துகள், கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்துகின்றன. இந்த மருந்தை குடித்த 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இருப்பதால், மருத்துவ எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று WHO வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய டைரக்டர் … Read more

ஈகுவடார் சிறையில் கலவரம் 15 கைதிகள் பலி

குய்ட்டோ, தென்அமெரிக்க நாடான ஈகுவடாரில் உள்ள சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் சிறைகளில் தொடர்ந்து அசாதாரண சூழல் நீடிக்கிறது. குறிப்பாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் ஈகுவடாரின் லடசுங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளில் இருதரப்பினருக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது சற்று நேரத்தில் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கைதிகள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அதை தொடர்ந்து … Read more

வளர்ப்பு சிறுத்தையை மீட்க ஆந்திர டாக்டர் உருக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்-போர் நடந்து வரும் உக்ரைனில் இருக்கும் தன் வளர்ப்பு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை மீட்க உதவும்படி, மத்திய அரசுக்கு, ஆந்திராவை பூர்வீகமாக உடைய டாக்டர் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் துவங்கிய இந்தப் போர் தற்போதும் நீடித்து வருகிறது.போர் துவங்கியபோது, உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் இருந்த பலர் வெளியேற்றப்பட்டனர். அப்போது, டாக்டர் கிதிகுமார் பாட்டீல் என்பவர் மற்றொரு ஐரோப்பிய … Read more

ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கூந்தலை வெட்டி எதிர்ப்பு தெரிவித்த சுவீடன் பெண் எம்.பி.| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டராஸ்பரக்: ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து ஐரோப்பிய பாரளுமன்ற கூட்டத்தில் சுவீடன் பெண் எம்.பி. தனது கூந்தலை வெட்டி எதிர்ப்பை பதிவு செய்தார். ஈரான் நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடுமையான தண்டனை உண்டு. இந்நிலையில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான … Read more