ரஷ்ய வானத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி: வீடியோ வைரல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியை, மாஸ்கோவில் வானத்தில் பறக்கவிட்ட வீடியோவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை அமிர்த பெருவிழாவாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அமிர்த பெருவிழா, ஹர்கர்திரங்கா இயக்கத்தை கொண்டாடும் வகையில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம், மாஸ்கோவில் வானில் இந்திய தேசியக்கொடியை பறக்க விட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. விமானத்தில் பாராசூட் … Read more

பாக்.,கில் டிரக் – பஸ் மோதல்: 13 பேர் பலி

லாகூர்: பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் டிரக்கும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.ரஹீம் யார் கான் மாவட்டத்தில், கரும்பு லோடு ஏற்றி வந்த டிரக் மீது எதிர்திசையில் 18 பேருடன் வந்த பஸ் மோதியது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. லாகூர்: பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் டிரக்கும், பஸ்சும் … Read more

பாக்., வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய இந்திய வீரர்கள்| Dinamalar

வாகா: பாகிஸ்தான் சுதந்திர தினம் இன்று(ஆக.,14) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வாகா எல்லையில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு , இந்திய வீரர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். வாகா: பாகிஸ்தான் சுதந்திர தினம் இன்று(ஆக.,14) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வாகா எல்லையில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு , இந்திய வீரர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள … Read more

பட்டொளி வீசிய பாகிஸ்தான் கொடி; பாஜக ஆளும் மாநிலத்தில்..பரபரப்பு!

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் – சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா என்ற பெயரில் நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரத்துக்கு கொண்டாட்டங்கள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்கும் வகையில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் பயணிகள் மற்றும் பயணிகள் கொண்டு வரும் … Read more

எகிப்து தேவாலயத்தில் தீ: 41 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். கெய்ரோவின் இம்பாபாவில் உள்ள மக்கள் அதிகம் பேர் கூடியிருந்த தேவாலயத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதில் 41 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதல் கட்ட விசாரணையில், மின்சார கசிவு காரணமாக … Read more

DART Mission: பூமியை அழிவில் இருந்து காக்க நாசா மேற்கொள்ளும் DART மிஷன்!

பூமியை நோக்கி சிறுகோள் வருவதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன. சிறுகோள் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது அதன் திசையில் எந்த மாற்றமும் இல்லை என்றால் பூமிக்கு பேரழிவு நிச்சயம். எனவே சிறுகோள் பூமியை தாக்காமல் விலகி செல்லும் வகையில், அதன் திசையை மாற்ற, நாசா கடந்த ஆண்டு DART மிஷனை அறிமுகப்படுத்தியது. அடுத்த மாதம் 26ம் தேதி இந்த விண்கலம் சிறுகோளை தாக்கி அதன் திசையை மாற்ற உள்ளது. சிறுகோள் தாக்குதலில் இருந்து பூமியைப் பாதுகாக்க, … Read more

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து விலகல்

டோக்கியோ: காயம் காரணமாக உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து விலகி உள்ளார். ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஆக., 21ம் தேதி உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து விலகுவதாக காமன்வெல்த் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அறிவித்து உள்ளார். காமன்வெல்த் காலிறுதிப் போட்டியில் இடது காலில் காயம் ஏற்பட்டது. ஐதராபாத் திரும்பியவுடன் ஸ்கேன் செய்ததில், இடது காலில் லேசான … Read more

இந்தியாவிற்கு இலங்கை துரோகம் செய்துள்ளது: ராமதாஸ்| Dinamalar

கொழும்பு: சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அனுமதி அளித்து இந்தியாவிற்கு துரோகம் செய்துள்ளது என ராமதாஸ் கூறினார். சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் வரும் 16 ம் தேதி அம்பன்தோட்டா துறைமுகம் வருகிறது.இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும் எனவும் இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து … Read more

’வென்டிலேட்டர் அகற்றம்; எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பேசுகிறார்’ – தகவல்

நியூயார்க்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருக்கும் அவருக்கு வென்டிலேட்டர் அகற்றப்பட்டுவிட்டதாகவும், அவர் மருத்துவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடந்த இடமான சவுதாக்கா மையத்தின் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதேபோல் சல்மான் ருஷ்டியின் முகவர் ஆண்ட்ரூ வில்லியும் இத்தகவலை உறுதிசெய்து வாஷிங்டன் போஸ்ட் நாளேடுக்கு பேட்டியளித்துள்ளார். நடந்தது என்ன? எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, இந்திய நேரப்படி கடந்த … Read more

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல்: சகிப்புத்தன்மையின்மையின் விளைவா?

நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். இந்தத் தாக்குதலில், படுகாயமடைந்த சல்மான் ருஷ்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ள சல்மான் ருஷ்டியால் தற்போது பேச முடிந்தாலும், அவர் ஒரு கண் பார்வையை இழக்கும் அபாயம் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 75 வயதான ஒரு எழுத்தாளர் மீது இவ்வளவு கோபம் ஏன்? கொலை செய்யத்துணியும் அளவுக்கு, அவர் … Read more