இங்கிலாந்தின் பல பகுதிகளில் வறட்சி- அதிகாரப்பூர்வமாக அறிவித்த அரசாங்கம்

லண்டன், இங்கிலாந்து நாட்டில் வரலாறு காணாத வெப்பம் நிலவி வருகிறது. 1935 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் திகழ்கிறது. ஜூலை மாதத்தில் மழை பொழிவு மிகவும் குறைவு என இங்கிலாந்து வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலையில் வறட்சி நிலவியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் ஆறு இதுவரை இல்லாத அளவுக்கு வறண்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தின் தெற்கு, … Read more

ஹோட்டலை விட்டு வர வேண்டாம் கோத்தபயவுக்கு போலீஸ் அறிவுரை| Dinamalar

பாங்காக்:’ஹோட்டலில் தங்கிஉள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியே வர வேண்டாம்’ என தாய்லாந்து போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்துக்கு சென்றதால் வெகுண்டு எழுந்த மக்கள், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதை முன்கூட்டியே அறிந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பி மாலத்தீவுக்கு சென்றார். பின், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார். அங்கு ‘விசா’ காலம் முடிந்ததால், … Read more

நாட்டு எல்லையில் சீனாவின் போர் விமானங்கள் – தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்

பீஜிங், தைவான்-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையால் தற்போது இந்த மோதல் பூதகரமாக வெடித்துள்ளது. கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றதால் ஆத்திரமடைந்த சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சியை தொடங்கியது. கடந்த 4-ந்தேதி தொடங்கிய இந்த போர்ப்பயிற்சி 8-ந்தேதியுடன் முடிவுக்கு வரும் சீனா ராணுவம் அறிவித்திருந்த நிலையில், 8-ந்தேதியை தாண்டியும் தைவான் எல்லையோரத்தில் சீனா … Read more

"ரஷியா தொடர்ச்சியாக அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது" – ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கீவ், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது ராணுவ தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போர் காரணமாக இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனின் தெற்கு பகுதியில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ‘சாப்போரிஷியா’ அமைந்துள்ளது. இந்த பகுதியை உக்ரைன் மீது … Read more

சீனாவிடம் இருந்து வாங்கிய 6 விமானங்களை பயன்படுத்த முடியாத நிலையில் நேபாளம்! சீனாவுக்கு வட்டி கட்டி வரும் நிலை

காத்மாண்டு, நேபாள அரசு வாங்கிய சீன விமானங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் அந்நாட்டுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 2012இல், நேபாள விமான கழகம் (என்ஏசி) சீனாவின் விமான நிறுவன கழகத்துடன் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.அதன்படி, 2014ஆம் வருடம் 2 MA60 ரக விமானங்கள் மற்றும் 4 Y12 இ ரக விமானங்கள் நேபாளம் வந்தன, பின்னர் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் இந்த விமானங்களை திறம்பட கையாள விமானிகள் இல்லாமலும், லாபம் வராத நிலையிலும் இந்த … Read more

நியூயார்க் | எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டார்

நியூயார்க்: பிரபல புதின எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க் நகரில் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகப் புகழ் பெற்ற புதின எழுத்தாளர் சர் அகமது சல்மான் ருஷ்டி. மும்பையில் பிறந்தவர். அவருக்கு வயது 75. ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ படைப்புக்காக புக்கர் பரிசை வென்றவர். 1988-ல் வெளிவந்த இவரது ‘தி சாட்டனிக் வெர்சஸ்’ படைப்பு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த படைப்புக்காக … Read more

பிரிட்டனில் வரலாறு காணாத கடும் வறட்சி: பாலைவனமானது தேம்ஸ் நதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் :’பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள், மற்றும் லண்டன் நகரம் கடும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட துவங்கியது. தேம்ஸ் நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது. இதையடுத்து பிரிட்டன் அரசு தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்தது. கடும் … Read more

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – புதிதாக 2,009 பேருக்கு தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக … Read more

சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவில் பிரபல சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது மர்ம நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சல்மான் ருஷ்டி. பிரபலமான எழுத்தாளராகிய, இவர் 1980 களில் எழுதிய,” சாத்தானின் வேதங்கள்’ என்ற நூல், சர்வதேச அளவில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி, அவருக்கு எதிராக, கடும் போராட்டங்கள் நடந்தன. பயங்கரவாதிகளின் மிரட்டலால், வெளிநாடுகளில் பதுங்கி … Read more

கொரோனா குறித்து வடகொரிய அதிபர் அதிர்ச்சி தகவல்..! என்ன சொன்னார் தெரியுமா..?

அவ்வப்போது பல அதிரடி முடிவுகளை எடுத்து உலக நாடுகளை அலற விடுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன். தற்போது கொரோனா குறித்து தனது கருத்தை தெரிவித்து அனைவரயும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59.33 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு … Read more