தங்கம் வென்றார் ஜெரிமி: காமன்வெல்த் பளுதூக்குதலில் அசத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுங்கா (67 கிலோ) தங்கம் வென்றார். இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான பளுதுாக்குதல் 67 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் ஜெரிமி லால்ரின்னுங்கா பங்கேற்றார். ‘ஸ்னாட்ச்’ பிரிவில் அதிகபட்சமாக 140 கிலோ துாக்கிய இவர், ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் அதிகபட்சமாக 160 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக 300 கிலோ பளுதுாக்கிய இவர், காமன்வெல்த் … Read more

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர் – யார் இந்த ரிஷி சுனக்?

பிரிட்டன் பிரதமர் தேர்தல் ஒரு வழியாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து பிரதமர் தேர்தல் வழக்கத்தை விட இந்தியாவில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதற்குக் காரணம் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரான ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச்  சேர்ந்தவர் என்பதே. ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் போரிஸ் ஜான்சன் தலைமை மீது அதிருப்தி எழுந்தநிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தாலும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக தனது பதவியை ராஜினாமா செய்து அவரது அரசுக்கு முடிவுரையைத் தொடங்கி வைத்தவர் ரிஷி … Read more

நேற்று இலங்கை… இன்று ஈராக்… தொடரும் மக்கள் போராட்டம்!

ஈராக்கில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற தேர்தலில் அல்-சதரின் கட்சி 73 இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்பதுடன், அதிக வாக்குகளை பெற்ற கட்சி என்ற பெருமையையும் பெற்று திகழ்ந்தது. எனினும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் யார் ஆட்சிப் பொறுப்பு ஏற்பது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனிடையே, முகமது அல்-சூடானி ஈராக்கின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஷியா பிரிவு தலைவரான அல்-சதருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பிரதமராக … Read more

இலங்கையில் சீன கப்பல்: உறுதி செய்தது ராணுவம்| Dinamalar

கொழும்பு:இலங்கை அம்பந்தோட்டை துறைமுகத்தில், சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான தகவலை, இலங்கை ராணுவம் உறுதி செய்தது. நம் அண்டை நாடான சீனாவின் உளவு கப்பல், இலங்கை துறைமுகத்துக்கு விரைவில் வரப் போவதாக, சமீபத்தில் செய்தி வெளியானது. நம் நாட்டின் கடலோர மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளாவை உளவு பார்ப்பதற்காக, இந்தக் கப்பல் அனுப்பப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உஷாராக இருக்கும்படி, இந்த மாநிலங்களை மத்திய அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில், சீன … Read more

பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 320 ஆக உயர்வு..!

கராச்சி, பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த மாகாணத்தில் மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. அந்நாடு முழுவதும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பலுசிஸ்தானில் சுமார் 13,000 வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக முழ்கியுள்ளன. கராச்சி மற்றும் சிந்து மாகாணத்தில் மழை வெள்ளத்திற்கு 70 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

பலூசிஸ்தானில் கால்பந்து போட்டியில் எறிகுண்டு தாக்குதல்; 3 பேர் காயம்

குவெட்டா, பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பலூசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் விமான நிலைய சாலையில் அமைந்த துர்பத் ஸ்டேடியத்தில் கால்பந்து போட்டி ஒன்று நேற்று நடந்து கொண்டு இருந்தது. இதில், வீரர்களின் விளையாட்டை காண ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், திடீரென கால்பந்து போட்டி நடந்த ஸ்டேடியத்திற்கு அருகே வெடிசத்தம் கேட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். இதில், எறிகுண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டு உள்ளது என … Read more

ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றாரா? பரபரப்பு தகவல்

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான பின்லேடனை, கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்கா சுட்டுக்கொன்றது. சர்வதேச அளவில் பயங்கரவாதியாக அறியப்பட்ட பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒசாமா பின்லேடனினின் சகோதரர்களான பாக்ரி மற்றும் ஷாஃபீக்கிடம் இருந்து இ சார்லஸ் நடத்தி வரும் அறக்கட்டளை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை … Read more

பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி; அமெரிக்க உதவியை நாடியது

லாகூர், ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியால் அந்த நாடு மக்களின் போராட்டத்தில் சிக்கி உருக்குலைந்து போயுள்ளது. இறக்குமதி ஆக கூடிய பொருட்களை வாங்க கூட போதிய நிதிவசதி இல்லாத சூழலால், உணவு, எரிபொருள், உரம் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது. கிடைக்கும் பொருட்களையும் கூட வாங்க மக்கள் மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில் கூட நீண்ட வரிசையில் நின்று பெற்று … Read more

பண மோசடி வழக்கு: நேரில் ஆஜராகும்படி பிரதமருக்கு நீதிமன்றம் சம்மன்!

பண மோசடி குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, பாகிஸ்தான் பிரதமா் ஷெபாஸ் ஷெரீஃப், அவரது மகன் ஹம்ஸா ஷெரீஃப் ஆகியோருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அவரது மகன்கள் ஹம்ஸா, சுலைமான் ஆகியோா் சுமாா் 1,600 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கடந்த 2020 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக அந்நாட்டின் கூட்டாட்சி விசாரணை ஆணையம் வழக்கு பதிவு செய்து … Read more

எரிகற்கள் மழையா…? ஆச்சரியம் அடைந்த மக்கள்; வைரலான வீடியோ

நியூயார்க், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வானில் எரிகற்கள் மழை பொழிவது போன்ற காட்சிகள் ஏற்பட்டன. இதனால், மக்கள் ஆச்சரியமடைந்தனர். ஆனால், அது சீன ராக்கெட்டின் மீதமுள்ள கழிவுகள் என தெரிய வந்துள்ளது. இதுபற்றி சீன விண்வெளி கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 23 டன் எடை கொண்ட, மார்ச்-5பி ஒய் 3 என்ற ராக்கெட் கடந்த 24ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது என தெரிவித்து உள்ளது. சீன ராக்கெட்டின் கழிவுகள், இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது. அவை, … Read more