உக்ரைனில் நீளும் போர்… பட்டினியை ஒழிக்கும் சர்வதேச முயற்சியை தடம் புரள செய்யும்: ஐ.நா.வில் இந்தியா பேச்சு

நியூயார்க், சர்வதேச உணவு பாதுகாப்பு நெருக்கடி பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த உயர்மட்ட சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் முதன்மை செயலாளர் சினேகா துபே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, கொரோனா பெருந்தொற்று மற்றும் நடந்து வரும் உக்ரைன் போர் உள்ளிட்ட மோதல்கள் பொதுமக்களின் வாழ்க்கையை, குறிப்பிடும்படியாக வளர்ந்து வரும் நாடுகளில் வெகுவாக பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால், எரிபொருள் உள்ளிட்ட ஆற்றல் துறை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. அதனுடன், … Read more

இலங்கை அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு!

நாளை நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், தான் நேசிக்கும் நாட்டின் நலனுக்காக விலகுவதாக கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் அழகபெருமவை வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, மகிந்த ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த டலஸ் அழகப்பெரும, ஜனதா விமுக்தி … Read more

3வது சுற்றிலும் ரிஷி சுனக் முன்னிலை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக நடந்த மூன்றாம் சுற்று ஓட்டெடுப்பில் இந்தியாவை பூர்வீகமாக உடைய முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், அதிக ஓட்டுகளுடன் முன்னிலையில் உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பழமைவாத கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால், பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் விலகினார். புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை அவர் காபந்து பிரதமராக … Read more

மற்ற நாடுகளை விட இலங்கைக்கு அதிகமாக கடன் வழங்கிய இந்தியா

கொழும்பு, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு அதிகமாக கடன் வழங்கியது இந்தியாதான் என்று தெரிய வந்துள்ளது. இதை இலங்ைக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதிவரை, இலங்கைக்கு மொத்தம் 96 கோடியே 88 லட்சம் டாலர் (ரூ.7 ஆயிரத்து 750 கோடி) வெளிநாட்டு கடன் கிடைத்துள்ளது. இதில், இந்தியா மட்டும் 37 கோடியே 69 லட்சம் டாலர் (ரூ.3 ஆயிரத்து 15 கோடி) கடன் … Read more

UK politics: பிரதமர் ரேஸில் முந்தி செல்லும் ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு காலக்கட்டத்தில், கேளிக்கை விருந்தில் பங்கேற்றது, பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒருவக்கு முக்கிய பதவிகொடுத்தது ஆகியவை சர்ச்சைகளை ஏற்படுத்தியது. போரிஸ் ஜான்சனுக்கு, அவரது கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினமாஅ செய்யத் தொடங்கினர். இதை அடுத்து, கடந்த 7-ந் தேதி போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். எனவே புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறை … Read more

இலங்கை அதிபர் தேர்தல்: பின்வாங்கினார் சஜித் பிரேமதாசா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் இருந்து விலகிக்கொள்வதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருடைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள அவர், அதிபர் … Read more

இலங்கையில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை: ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் கண்டனம்

கொழும்பு, அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த போராட்டங்களால் தற்போது அரசியலில் புயல் வீசிவருகிறது. எதிர்ப்புச் சூடு தாளாமல் மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். ஆனால் அவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இலங்கையில் அவசரநிலையை பிறப்பிப்பதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் நேற்று … Read more

ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்து பார்த்ததாக அமெரிக்கா தகவல்

ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைபர்சோனிக் ஏவுகணையை சோதித்து பார்த்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. Raytheon தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்த ஏவுகணையை சோதித்து பார்த்ததாகவும், 2013 முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி என்றும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. HAWC வகை வான் சாதனங்களை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்க பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இவ்வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் வளிமண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை … Read more

மாலத்தீவில் இருந்து சென்ற கோத்தபயவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு

சிங்கப்பூர், சொந்த நாட்டில் எதிர்ப்பு உச்சமடைந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பியோடினார். ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால், சிங்கப்பூரை கடந்த வியாழக்கிழமை சென்றடைந்தார். அங்கிருந்தபடியே வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேயை அனுமதித்ததற்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு நெருப்பு கொழுந்துவிடத் தொடங்கியுள்ளது. அவரது வருகைக்கு எதிராக ஓர் ஆன்லைன் மனுவை உருவாக்கியுள்ள தொழிலதிபர் ரேமண்ட், கோத்தபய மீது சிங்கப்பூர் போலீசில் பணமோசடி புகாரும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். அவரது ஆன்லைன் … Read more

மிரட்டுது மார்க்பர்க் வைரஸ் | Dinamalar

நியூயார்க்: புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘மார்க்பர்க்’ வைரஸ் வவ்வால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவிலுள்ள கானாவில் இருவர் ‘மார்க்பர்க்’ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்திருப்பதாகவும், இதன் பாதிப்பு எபோலா வைரசை போன்று கடுமையாக இருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இறந்த இருவருக்கும் மார்க்பர்க் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் செனகலில் உள்ள ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்ய வேண்டியுள்ளது. இவர்களுக்கு … Read more