Viral Video: விண்வெளியில் சேட்டிலைட் எடுத்த செல்ஃபி….

2013 ஆம் ஆண்டில், ‘செல்ஃபி’ என்ற வார்த்தை  ஆக்ஸ்போர்டு அகராதிகளின் ‘word of the year’ ஆகும். முந்தைய ஆண்டுகளில் இந்த கருத்து புதியதாக இருந்தது. ஆனால் அப்போதிருந்து, இந்த வார்த்தையும் செல்ஃபி புகைப்படங்களும் நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட வார்த்தையாகவும் அங்கமாகவும் ஆகி விட்டது.  நாம் எந்த இடத்திற்கு போனாலும், அங்கிருக்கும் இயற்கை சூழ்நிலையில்  செல்ஃபி எடுத்து கொள்ளும் பழக்கம் பலருக்கு உள்ளது. குடும்ப விழாக்களின் போது, செல்ஃபியைக் கிளிக் செய்யாதவர்கள் யாராவது உண்டா என்ன. நாம் … Read more

US Independence Day: பைடனுக்கு புடின் வாழ்த்து சொல்ல மாட்டார் – ஏன் தெரியுமா?

அமெரிக்க சுதந்திர தினமான இன்று, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவிக்க மாட்டார் என, தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக, அமெரிக்கா – ரஷ்யா இடையேயான உறவு கடந்த சில மாதங்களாகவே சுமுகமாக இல்லை. உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல முறை வலியுறுத்தியும், அவர் போரை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த … Read more

உலகின் மிகப்பெரிய நீர் அல்லியை கண்டறிந்த அறிவியலாளர்கள்..!

உலகின் மிகப்பெரிய நீர் அல்லியை அறிவியலாளர்கள் இனம்கண்ட நிலையில், அது நீரில் வளரும் டைம் லேப்ஸ் காட்சிகள் வெளியாகியுள்ளது. விக்டோரியா பொலிவியானா என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை நீர் அல்லியின் இலைகள், 3 மீட்டருக்கும் மேல் வளரக்கூடியது என்றும், அதிக அளவிலான எடையை கூட தாங்கும் தன்மையுடையது என்றும் தாவரவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். Source link

இத்தாலியில் கடும் வெப்பத்தால் திடீரென உருகிய பனிமலை – 6 பேர் பலி, 8 பேர் படுகாயம்..!

இத்தாலியின் ஆல்ப்ஸ் பனிமலை தொடரில் உள்ள மார்மலோடா சிகரத்தில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதில், 6 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர். இத்தாலியில் கடும் கோடை வெப்பம் நிலவிவருவதால், இந்த பனி சிகரம் திடீரென உருகி இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த எதிர்பாராத இயற்கை பேரழிவில் மலையேறும் குழுவை சேர்ந்தவர்கள் சிக்கினார்கள். இதுவரை 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆபத்தான நிலையில் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் மீட்புப்பணி … Read more

ஆஸ்திரேலியாவில் எஞ்சின் பழுதால் 21 பணியாளர்களுடன் கடற்கரையில் சிக்கிய சரக்கு கப்பல்.!

ஆஸ்திரேலியாவில் இடைவிடாது கனமழை பெய்து வரும் நிலையில், 21 பணியாளர்களுடன் நின்ற சரக்கு கப்பல் எஞ்சின் பழுது காரணமாக சிட்னி கடற்கரை பகுதியில் சிக்கிக்கொண்டது. பலத்த சூறை காற்றுக்கிடையே சரக்கு கப்பல் கரைப்பகுதிக்கு அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ள நிலையில், மீண்டும் கடல் பகுதிக்கு கப்பலை மீட்டுச்செல்லும் பணியில் இரு இழுவை கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. Source link

இலங்கையில் கடும் நெருக்கடி: எரிபொருள் வாங்க வருவோரை தாக்கும் ராணுவம், வீடியோ வைரல்

எரிபொருள் நெருக்கடியால் இலங்கை முடக்கப்படும் நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வரும் நிலையில்,  எரிபொருள் வாங்க வருவோரை ராணுவம் கொண்டு அடக்கும் முறை கையாளப்பட்டு வருகிறது. அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத அளவிற்கு உள்ள இலங்கை அரசால், எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டை முடக்க அதிகாரபூர்வமாக தீர்மானிக்க முடியவில்லை என்றாலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக  இந்த வாரம் நாடு ஊரடங்கை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு நெருக்கடி நாட்டை பாதித்துள்ள … Read more

பிரிட்டிஷ் கிராண்ட் ஃப்ரி போட்டியில் கார்கள் ஒன்றோடொன்று மோதல்… தலைக்கீழாக கவிழ்ந்து நெருப்பு பொறிகளுடன் உருக்குலைந்த கார்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று தொடங்கிய பிரிட்டிஷ் கிராண்ட் ஃப்ரி கார் பந்தயத்தின் முதல் நாளிலேயே சீன வீரர் ஹோவ் குவான்யுவின் கார் பயங்கர விபத்தில் சிக்கியது. ஓடுபாதையில் வேகமாக வந்து கொண்டிருந்த போது கார்கள் ஒன்றோடு ஒன்று மோத, ஹோவ் குவான்யுவின் கார் நிலைத்தடுமாறி தலைக்கீழாக கவிழ்ந்தது. நெருப்பு பொறிகள் பறக்க அந்த கார்  பார்வையாளர்கள் தடுப்பு வேலி மீது மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஹொவ் குவான்யு சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். … Read more

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சென்ற மினி பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு!

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தலிபான்கள் சென்ற மினி பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தலிபான் 207 அல் பரூக் கார்ப்ஸ் பிரிவை சேர்ந்த பலர் படுகாயமடைந்த நிலையில், தாக்குதல் தொடுத்த மர்ம நபர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், வீரர்கள், பொதுமக்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்ததாகவும் ஹெராத் மாகாண போலீசார் கூறியுள்ளனர். Source link

உயிரியல் பூங்காவிற்கு வந்துள்ள வெள்ளை காண்டாமிருகங்கள்.. ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து கண்டுகளிப்பு!

40 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவில் இருந்து மொசாம்பிக் நாட்டில் உள்ள ஜின்னாவே உயிரியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள 19 வெள்ளை காண்டாமிருகங்களை பொதுமக்கள் கண்டு ரசித்து மகிழ்ந்து வருகின்றனர். ஆயிரத்து 600 கிலோமீட்டர் தூரம் வரை டிரக்கில் அவை பயணித்து வந்திருப்பதாக பாதுகாவலர் ஒருவர் தெரிவித்தார். வன விலங்குகளை மீட்டெடுப்பதுடன், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியாகவும் அவை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக பாதுகாவலர் ஒருவர் தெரிவித்தார்.  Source link

போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்

கடந்த நான்கு மாத காலங்களாக ரஷ்யா உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில்,  முக்கிய திருப்பு முனையாக, உக்ரேனிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3), லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ராணுவ ரீதியாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரமான லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரக்கணக்கான கடுமையான சண்டையைத் தொடர்ந்து உக்ரைன் படைகள் பின்வாங்கியது.  ரஷ்ய பாதுகாப்பு  அமைச்சர் செகேய் ஷோய்கு,  நேற்றே,  லிசிசான்ஸ்க் நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்தார். எனினும்  கோரிக்கையை உக்ரைன் அதிபர் … Read more