முந்தைய கடனைத் திருப்பிச் செலுத்த மீண்டும் கடன்வாங்கும் பாகிஸ்தான்

முந்தைய கடனைத் திருப்பிச் செலுத்த மீண்டும் கடன்வாங்கும் மோசமான சுழலில் பாகிஸ்தான் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துனியா டெய்லி நாளிதழில் ஆயாஸ் அமீர் என்பவர் எழுதிய கட்டுரையில், திறமையற்ற  ஆட்சியாளர்கள் அனைவரும் சிக்கலைத் தீர்க்கக் கடன் வாங்குவது, அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த மீண்டும் கடன் வாங்குவது என்கிற செயல்களையே செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இனிமேல் கடன் வழங்க யாரும் முன்வர மாட்டார் என்கிற நிலைக்குப் பாகிஸ்தானை இந்தக் கடன் சுழல் கொண்டு சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  Source link

பாகிஸ்தானில் காகிதத் தட்டுப்பாடு; பாடப்புத்தகங்கள் வழங்குவதில் சிக்கல்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர் கொண்டு வருகிறது. இந்நிலையில், பணவீக்கம் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக பாகிஸ்தானில் தற்போது காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாடு காகித … Read more

கருகலைப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்… புரட்சி பெண்கள் அதிர்ச்சி!

அமெரிக்கா முழுவதும் கருக்கலைப்பு சட்டப்படி செல்லும் என கடந்த 1973 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அமெரிக்காவில் கிட்டதட்ட அரை நூற்றாண்டாக கருகலைப்புக்கு சட்டரீதியான அங்கீகாரம் இருந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் மசோதாக்களை மாகாண அரசுகள் அண்மை காலமாக நிறைவேற்றி வருகின்றன. குறிப்பாக குடியரசு கட்சி ஆளும் டெக்சாஸ் உள்ளிட்ட கிட்டதட்ட 20 மாகாணங்களில் கருகலைப்புக்கு கடந்த ஆண்டு இறுதியில் தடை … Read more

நிலவின் தூசி, கரப்பான்பூச்சிகள் ஏலம் விற்பனையை நிறுத்திய நாசா

நிலவின் தூசி மற்றும் கரப்பான்பூச்சிகள் ஏலம் விற்பனையை நாசா நிறுத்தியுள்ளது. அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட பாறைத்துகள்களில் இருந்து கிடைத்த சுமார் 40 மில்லி கிராம் நிலவு தூசி மற்றும் அதுதொடர்பான ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட கரப்பான் பூச்சிகள், 4 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் பாஸ்டனை சேர்ந்த நிறுவனம் அறிவித்திருந்தது. Source link

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட 2-வது கட்ட நிவாரண பொருட்கள் இலங்கையை சென்றடைந்தது..!

கொழும்பு, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம். முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக … Read more

அமெரிக்காவில் 130 பயணிகளுடன் தரையிறங்கியபோது தீப்பிடித்த விமானம்..!

அமெரிக்காவின் மியாமியில் 140 பேருடன் தரையிறங்கிய விமானத்தில் தீப்பிடித்ததில் பயணிகள் மூவர் காயமடைந்தனர். டொமினிக்கன் குடியரசில் இருந்து வந்த விமானத்தில் 130 பயணியரும், விமானிகள் பணியாளர்கள் 10 பேரும் இருந்தனர். மியாமி பன்னாட்டு விமான நிலையத்தில் மாலை ஐந்தரை மணிக்கு அந்த விமானம் தரையிறங்கியபோது சக்கரம் உடைந்ததால் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதுடன் அதில் தீப்பிடித்தது. உடனடியாகத் தீயை அணைத்ததுடன் அதிலிருந்த பயணியர் அனைவரும் தரையிறக்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் மூவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். … Read more

சீனா: சோதனையின் போது மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த மின்சார காா் – 2 போ் பலி

ஷாங்காய், சீனாவின் முன்னணி எலெக்ட்ரிக் காா் தயாரிப்பு நிறுவனம் நியோ ஆகும். இதன் ஷாங்காய் தலைமை அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் எலெக்ட்ரிக் கார் ஒன்றில் அமா்ந்து 2 போ் சோதனை செய்து கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக எலெக்ட்ரிக் காா் ஜன்னலை உடைத்து கொண்டு கட்டிடத்தின் வெளியே வந்து விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் காருக்கு இருந்த நியோ நிறுவன ஊழியா் உள்ளிட்ட 2 போ் பாிதாபமாக உயிாிழந்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு … Read more

வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனாவின் வுஜோ நகரம்.. உயிர் காக்கும் உடை அணிந்து படகில் பயணிக்கும் மாணவர்கள்

கனமழையால் சீனாவின் வுஜோ நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குய்ஜியாங் ஆற்றங்கரையில் உள்ள வுஜோ நகரில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ள பாதிப்புக்கு மத்தியில் பள்ளிக்கான நுழைவு தேர்வை எழுதச் செல்லும் மாணவர்களுக்காக உள்ளூர் அரசாங்கம் படகு சேவையை ஏற்பாடு செய்துள்ளது. உயிர் காக்கும் உடை அணிந்து மாணவர்கள் படகில் பயணித்த காட்சிகளை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. Source link

ரஷிய ராணுவ சரக்கு விமானம் விபத்து; பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா 121-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், மேற்கு ரஷியாவின் ரியாசன் மகாணத்தில் 9 பேருடன் பயணித்த இலியுஷின் Il-76 ரக ராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விமானம் உக்ரைன் போருக்கு … Read more

மெக்சிகோவில் ஆயுத கும்பலுடன் போலீசார் துப்பாக்கிச்சண்டை.. 4 போலீசார் உட்பட 12 பேர் பலி!

மெக்சிகோ நாட்டில் போலீசாருக்கும், ஆயுதங்களை விற்பனை செய்யும் கும்பலுக்கும் இடையேயான மோதலில் 12 பேர் உயிரிழந்தனர். ஜாலிஸ்கோ மாகாணம் எல் சால்டோ நகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில்  8 குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 3 பேர் பமுகாயமடைந்தனர். ஆயுத கும்பல் நடத்திய பதில் தாக்குதலில்  4 போலீசார் உயிரிழந்தனர்.    Source link