அமைச்சரை அலுவலகத்தில் வைத்தே சுட்டு கொன்ற நீண்ட நாள் நண்பர்

டொமினிக் குடியரசு நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் அவரது அலுவலகத்தில் நீண்டகால நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினிக் குடியரசு நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக Orlando Jorge Mera,என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.  நேற்று காலை தனது அலுவலகத்தில் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்த போது அவரை சந்திக்க தொழிலதிபரும் நீண்டகால நண்பருமான “Miguel Cruz சென்றுள்ளார். பின்னர் திடீரென அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை  எடுத்து ஒர்லண்டோவை சரமாரியாக 7 முறை சுட்டதில் படுகாயம் … Read more

தெற்கு சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெற்கு சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. குவாங்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள், கட்டடங்கள் நீரில் தத்தளிக்கின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் ரப்பர் படகு உள்ளிட்டவைகள் மூலம் மீட்கப்பட்டனர்.  Source link

தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு; குழந்தைகள் உட்பட 50 பேர் பலி| Dinamalar

அபுஜா : தேவாலயத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் தென்மேற்கில் அமைந்துள்ள ஓவோ நகரிலிருக்கும் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று முன்தினம் வழிபாடு நடந்து கொண்டிருந்தது.அப்போது தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. வழிபாட்டில் இருந்த கிறிஸ்தவர்கள் சிதறி ஓடினர். ஆலயத்துக்கு வெளியே ஓடி வந்தவர்களை அங்கு காத்திருந்த மற்றொரு கும்பல் … Read more

நூபுர் சர்மா சர்ச்சை பேச்சு எதிரொலி – பாகிஸ்தான் கண்டனத்துக்கு இந்தியா பதிலடி

புதுடெல்லி: நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, டெல்லி பாஜகவைச் சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். எனினும், அவர்களது பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. மேலும் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பெரிய அளவில் மத மோதல் வெடித்தது. இந்நிலையில், பாஜக நிர்வாகிகளின் கருத்துக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டம் தெரிவித்திருந்தார். அவர் கூறும்போது, “இந்தியாவை தற்போது ஆட்சி … Read more

கிரீஸ் கடலில் கிடந்த 23.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

சர்வதேச கடல் பாதுகாப்பு அமைப்பு மூலம் கிரீஸ் கடலில் கொட்டிக் கிடந்த வலை, பிளாஸ்டிக் கேன்கள் உள்ளிட்ட 23 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. உலக பெருங்கடல் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு, கடல் மாசு தவிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு  மீனவர்களின் ஒத்துழைப்புடன் கடலினுள் கிடந்த 23 புள்ளி 5 டன் வலை, மைக்ரோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.  Source link

உக்ரைன் ஆலையில் இருந்து உடல்கள் மீட்கும் பணி துவக்கம்| Dinamalar

கீவ் : ரஷ்ய ராணுவத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து உக்ரைன் வீரர்கள் பதுங்கியிருந்த இரும்பு ஆலையில் இருந்து, உயிரிழந்த வீரர்களின் உடல்களை மீட்கும் பணி துவங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யப் படைகள் போரைத் துவக்கின.பல முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியபோதும், மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்ற முடியாமல் ரஷ்யப் படைகள் திணறின.இந்நகரில் உள்ள அசோவ்ஸ்டால் இரும்பு ஆலையில் பதுங்கியிருந்து, உக்ரைன் வீரர்கள் கடும் எதிர் தாக்குதல் … Read more

காங்கோவில் கிளர்ச்சிப் படையினர் கொடூரத் தாக்குதல் – 36 பேர் உயிரிழப்பு

காங்கோவில் கிராமத்திற்குள் புகுந்து கிளர்ச்சிப்படையினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதூரி மாகாணத்தில் இரவில் கிராமத்திற்குள் புகுந்த கிளர்ச்சிப் படை கும்பல் பொது மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. காங்கோ அரசுடனான போராட்டத்தில் அப்பாவி மக்களை கிளர்ச்சி படைகள் தொடர்ந்து கொன்று குவித்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் 36 உடல்கள் கைப்பற்றப்பட்டதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளாது.  Source link

பிரிட்டன் பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்| Dinamalar

லண்டன் : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமை மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அவர் சார்ந்துள்ள பழமைவாத கட்சி தாக்கல் செய்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவல் காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி தன் இல்லத்தில் அடிக்கடி விருந்து கொடுத்தது சர்ச்சையானது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். எனினும், எதிர்கட்சிகள் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் போரிஸ் ஜான்சன் மீதான புகார்களுக்கு வலு சேர்க்கும் வகையில் … Read more

இலங்கையில் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுமென அதிகாரிகள் எச்சரிக்கை.!

இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி நிலவும் இலங்கைக்கு கப்பல் மூலம் ஏப்ரல் முதல் இந்தியாவில் இருந்து எரிபொருள் அனுப்பிவைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் எரிபொருள் நிரப்பிய கடைசிக் கப்பல் வரும் 16ம் தேதி இலங்கை சென்றடைய உள்ளது. இந்த சூழலில், இலங்கையில் டாலர் கையிருப்பிற்கு பற்றாக்குறை நிலவுவதால், மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக … Read more