ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேறுகிறது மைக்ரோசாஃப்ட்

ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேறுவது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதால், ரஷ்யா மீது மேற்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடையை விதித்துள்ளன. இதையடுத்து ரஷ்யாவில் புதிய சேவைகளை வழங்குவதில்லை என அறிவித்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், முழுவதுமாக வெளியேற முடிவு செய்துள்ளது.  Source link

அடுத்தது சூப்பர் மார்க்கெட்: ரஷ்யாவில் கடைகள் திறக்க இந்தியாவுக்கு புதின் அழைப்பு

மாஸ்கோ: ரஷ்யாவிடம் இருந்து 30 சதவீத தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியை இந்தியா வாங்கி வரும் நிலையில் இந்திய சூப்பர் மார்க்கெட்களை திறக்க அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் … Read more

கருக்கலைப்பு உரிமை ரத்து: அமெரிக்காவில் வலுக்கும் எதிர்ப்பு!

அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமை உறுதி செய்யப்பட்டது. ரோ மற்றும் வேட் இடையேயான வழக்கில் கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில், 15 வாரங்களுக்குப் பிந்தைய சிசுவை கருக்கலைப்பு செய்வதற்கு மிஸ்ஸிசிப்பி மாகாணம் விதித்த தடையை எதிர்த்து நடைபெற்ற டாப்ஸ் மற்றும் ஜாக்சன் மகளிர் சுகாதார அமைப்பு இடையிலான வழக்கை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் … Read more

இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படை பாதுகாப்பு கப்பலின் எச்சங்கள் பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிலிப்பைன்ஸின் சமர் தீவில் நடந்த போரில், யுஎஸ்எஸ் சாமுவேல் பி ராபர்ட்ஸ் (USS Samuel B Roberts) கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்த கப்பலில் பயணித்த 224 பேரில் 89 பேர் உயிரிழந்தனர். 80 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்த இந்த கப்பலின் எச்சங்களை 22 ஆயிரத்து 621 அடி ஆழத்தில் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். … Read more

அமெரிக்க கருக்கலைப்பு சட்டம்: பெண் ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தனியார் நிறுவனங்கள்

வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் கருக்கலைப்பு சட்ட தீர்ப்புக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், அதே வேளையில் அமெரிக்க தொழில் நிறுவனங்கள் பலவும் பெண்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. வெறும் ஆதரவு என்ற வார்த்தைகளைத் தாண்டி சில நிறுவனங்கள் ஒருபடி மேலே சென்று, பெண்கள் கருக்கலைப்பு செய்ய அண்டை நாடுகளுக்குச் செல்ல விரும்பினால் அவர்களுக்கு விடுப்பு, பயணப்படி என எல்லாம் தருவதாக அறிவித்துள்ளன. வழக்கு பின்னணி: கடந்த 1973 ஆம் ஆண்டு, கருக்கலைப்பு பெண்ணின் தனிப்பட்ட உரிமை … Read more

உணவு தட்டுப்பாட்டால் பேரழிவை நோக்கி உலகம் – ஐ.நா., கடும் எச்சரிக்கை!

கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு பேசியதாவது: பருவநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை அதிகரித்து உள்ளது. இதனால் கோடிக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்ய போரால் அந்த நிலைமை மேலும் … Read more

மண்ணெண்ணெய் வழங்காததை கண்டித்து இலங்கை மக்கள் போராட்டம்

அறிவித்தப்படி மண்ணெண்ணெய் வழங்காததால், இலங்கையில் எரிபொருள் விற்பனை அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தலைநகர் கொழும்புவில் உள்ள விற்பனை மையத்தில் மண்ணெண்ணெய்க்காக நேற்று இரவு முதலே ஏராளமானோர் காத்திருந்தனர். இந்நிலையில் மண்ணெண்ணெய் இல்லை என அறிவிப்பு வெளியானதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஹட்டன்-கொழும்பு, கட்டன்-கண்டி உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது. Source link

'150 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டோம்' – அதிபர் ஜோ பைடன் வருத்தம்!

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கருத்துத் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 1973 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதே போல், 1992 ஆம் ஆண்டு நடந்த வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு … Read more

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் – ஐநா

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும் அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலநிலை மாற்றம், கொரோனா தொற்று ஆகியவற்றால் சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வேளாண் பணிகள் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக விவசாயிகளின் நிதி ஆதாரத்தை பெருக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் குட்டரெஸ் கோரிக்கை விடுத்துள்ளார். Source link

அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கு தடை; அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பு

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை வழங்கும் போது, ​​உச்ச நீதிமன்றம், தனது 50 அண்டு கால பழைய தீர்ப்பை ரத்து செய்துள்ளது.  ஐந்து தசாப்தங்களுக்கு முன், உச்ச நீதிமன்றத்தி, விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யும் உரிமை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்திய வழக்கில், கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  உச்சநீதிமன்றம் Roe Vs Wade வழக்கின் தீர்ப்பு … Read more