உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் – ஐநா
உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும் அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலநிலை மாற்றம், கொரோனா தொற்று ஆகியவற்றால் சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வேளாண் பணிகள் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக விவசாயிகளின் நிதி ஆதாரத்தை பெருக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் குட்டரெஸ் கோரிக்கை விடுத்துள்ளார். Source link