தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட 2-வது கட்ட நிவாரண பொருட்கள் இலங்கையை சென்றடைந்தது..!

கொழும்பு, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம். முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக … Read more

அமெரிக்காவில் 130 பயணிகளுடன் தரையிறங்கியபோது தீப்பிடித்த விமானம்..!

அமெரிக்காவின் மியாமியில் 140 பேருடன் தரையிறங்கிய விமானத்தில் தீப்பிடித்ததில் பயணிகள் மூவர் காயமடைந்தனர். டொமினிக்கன் குடியரசில் இருந்து வந்த விமானத்தில் 130 பயணியரும், விமானிகள் பணியாளர்கள் 10 பேரும் இருந்தனர். மியாமி பன்னாட்டு விமான நிலையத்தில் மாலை ஐந்தரை மணிக்கு அந்த விமானம் தரையிறங்கியபோது சக்கரம் உடைந்ததால் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதுடன் அதில் தீப்பிடித்தது. உடனடியாகத் தீயை அணைத்ததுடன் அதிலிருந்த பயணியர் அனைவரும் தரையிறக்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் மூவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். … Read more

சீனா: சோதனையின் போது மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த மின்சார காா் – 2 போ் பலி

ஷாங்காய், சீனாவின் முன்னணி எலெக்ட்ரிக் காா் தயாரிப்பு நிறுவனம் நியோ ஆகும். இதன் ஷாங்காய் தலைமை அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் எலெக்ட்ரிக் கார் ஒன்றில் அமா்ந்து 2 போ் சோதனை செய்து கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக எலெக்ட்ரிக் காா் ஜன்னலை உடைத்து கொண்டு கட்டிடத்தின் வெளியே வந்து விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் காருக்கு இருந்த நியோ நிறுவன ஊழியா் உள்ளிட்ட 2 போ் பாிதாபமாக உயிாிழந்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு … Read more

வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனாவின் வுஜோ நகரம்.. உயிர் காக்கும் உடை அணிந்து படகில் பயணிக்கும் மாணவர்கள்

கனமழையால் சீனாவின் வுஜோ நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குய்ஜியாங் ஆற்றங்கரையில் உள்ள வுஜோ நகரில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ள பாதிப்புக்கு மத்தியில் பள்ளிக்கான நுழைவு தேர்வை எழுதச் செல்லும் மாணவர்களுக்காக உள்ளூர் அரசாங்கம் படகு சேவையை ஏற்பாடு செய்துள்ளது. உயிர் காக்கும் உடை அணிந்து மாணவர்கள் படகில் பயணித்த காட்சிகளை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. Source link

ரஷிய ராணுவ சரக்கு விமானம் விபத்து; பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா 121-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், மேற்கு ரஷியாவின் ரியாசன் மகாணத்தில் 9 பேருடன் பயணித்த இலியுஷின் Il-76 ரக ராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விமானம் உக்ரைன் போருக்கு … Read more

மெக்சிகோவில் ஆயுத கும்பலுடன் போலீசார் துப்பாக்கிச்சண்டை.. 4 போலீசார் உட்பட 12 பேர் பலி!

மெக்சிகோ நாட்டில் போலீசாருக்கும், ஆயுதங்களை விற்பனை செய்யும் கும்பலுக்கும் இடையேயான மோதலில் 12 பேர் உயிரிழந்தனர். ஜாலிஸ்கோ மாகாணம் எல் சால்டோ நகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில்  8 குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 3 பேர் பமுகாயமடைந்தனர். ஆயுத கும்பல் நடத்திய பதில் தாக்குதலில்  4 போலீசார் உயிரிழந்தனர்.    Source link

சக நண்பர் புஜாராவை டக் அவுட் செய்த முகமது ஷமி.. சமாதானம் செய்ய ஓடிச்சென்று கட்டித்தழுவி ஆறுதல்..!

இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின.  ஒரே அணியில் இருக்கும் இந்திய அணி வீரர்கள் இந்த பயிற்சி ஆட்டத்தில் எதிர் எதிர் அணியாக விளையாட, ஆட்டம் களைகட்டியது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி, தமது நெருங்கிய நண்பரான புஜாராவை டக் அவுட் செய்தார். இதனை கொண்டாடிய ஷமி, நண்பன் புஜாரா கோபித்து கொள்ளக்கூடாது என எண்ணி ஓடிச்சென்று அவரை தழுவி சாந்தப்படுத்தினார். இந்த காட்சிகள் இணையதளங்களில் ரசிகர்களை … Read more

ரியாலிட்டி ஷோ படபிடிப்பின் போது ஆபத்தான மலையில் கடும் வெப்பத்தில் சிக்கி வெயில் தாங்காமல் மயக்கமடைந்த படக்குழுவினர்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள மலை ஒன்றில் ரியாலிட்டி ஷோ படம்பிடித்துக் கொண்டிருந்த குழுவினர் கடும் வெப்பத்தில் சிக்கியதால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். கடல் மட்டத்திலிருந்து 2704 அடி உயரத்தில் அமைந்துள்ள அந்த மலை செங்குத்தான பாறைகளை கொண்டதாகும். அங்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அந்த குழுவினர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், வெயிலின் தாக்கம் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியதால் அவர்களில் சிலர் மயங்கி விழுந்தனர். ட்ரோன்கள் மூலம் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். … Read more

தந்தைக்கும் எனக்கும் இனி எந்த ஒட்டு உறவு இல்லை – பாலினம் மாறிய எலன் மஸ்க்கின் மகன் ஆவேசம்

கடந்த 2000 ஆம் ஆண்டு எலன் மஸ்க்கும் ஜெனிபர் ஜஸ்டீன் வில்சன் என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு இரட்டை குழந்தைகள் உள்ளன. பின்னர் 2008ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர். இந்நிலையில் எலன் மஸ்க்கிற்கு முதலாவதாக பிறந்த இரட்டை குழந்தைகள்  சேவியர், கிரிப்ஃபின் என பெயரிடப்பட்டனர். இதில் மூத்த மகன் தான் சேவியர் மஸ்க். இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன் தங்களது 18வது பிறந்த நாளை கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு … Read more

கழிவுநீரில் போலியோ வைரஸ் – மீண்டும் தலைதூக்குகிறதா போலியோ?

பிரிட்டன் நாட்டின் லண்டன் நகரில் கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1970 மற்றும் 1980-களில் உலகையே புரட்டிப் போட்ட நோய் இளம்பிள்ளை வாதம். தீவிர மருத்துவ நடவடிக்கைகளினாலும், பரவலான தடுப்பூசி பயன்பாட்டினாலும் போலியோ தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் நகரின் கழிவுநீரில் தற்போது வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லண்டனில் கடந்த 1984 ஆம் ஆண்டு கடைசியாக போலியோ … Read more