மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியால் உக்ரைனுக்கு ஆபத்து அதிகரிக்கும்: ரஷ்யா எசரிக்கை

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆயுத விநியோகம் நிலைமையை மேலும் சீர்குலைவை ஏற்படுத்தும் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்குவது ஆபத்தானது என்று கூறினார். உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா அனுமதிக்க விரும்புவதாக மேற்கத்திய தலைவர்களுக்கு உறுதியளித்த ரஷ்ய அதிபர், “நிலைமையை மேலும் சீர்குலைக்கும் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்கும் அபாயங்கள்” … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவை விட உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் கிடைக்கின்றன- ஜெலன்ஸ்கி தகவல்

29.5.2022 04.30: உக்ரைன் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான உதவிகளை வழங்க நட்பு நாடுகள் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆயுத விநியோகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்கள் எதிரியை விட அதிகமாக பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 01.35: கிழக்கு உக்ரைன் பகுதிகளில் ரஷிய படைகள் போரை தீவிரப்படுத்தி உள்ளன. அங்குள்ள லைமன் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.  மேலும்  ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. … Read more

பிரேசில் வெள்ள பாதிப்பு, நிலச்சரிவுக்கு 30 பேர் உயிரிழப்பு

பெர்னாம்புகோ: பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடா் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது வடகிழக்கு பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் சனிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  760 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மற்றொரு மாநிலமான அலகோவாஸில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பேர் இறந்தனர். நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ள … Read more

குரங்கு காய்ச்சல் பாதிப்பு பரவல்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை| Dinamalar

ஜெனீவா : ‘பல்வேறு நாடுகளில் தென்பட்டுள்ள ‘மங்கி பாக்ஸ்’ எனப்படும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு பரவல் தற்போது தான் துவங்கியுள்ளது. இது மிக வேகமாக பரவக் கூடியது அல்ல. ‘இருப்பினும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் பெரிய பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்’ என, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கடந்த, 1980களில் ஒழிக்கப்பட்ட சின்னம்மை நோய் போன்றது இந்த குரங்கு காய்ச்சல். கடும் காய்ச்சல், உடலில் கொப்புளங்கள் ஏற்படுவது இதன் அறிகுறிகளாகும். வழக்கமாக ஆப்ரிக்க நாடுகளில் தென்படும் … Read more

தட்சிணா மூர்த்தி நிலை இனி? – சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் இளம் குரல்கள்!

தன் மே க்யூயானும் அவரது நண்பர்களும் சமீபத்தில் சிங்கப்பூர் அதிபருக்கு கடிதம் ஓன்றை எழுதியிருந்தனர். அக்கடிதத்தில், ‘44 கிராம் ஹெராயின் (மூன்று டேபிள்ஸ்பூன் அளவு) கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் உள்ள தட்சிணா மூர்த்தியின் மரண தண்டனை தடை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் மரணத் தண்டனைகளுக்கு எதிரான போராட்டங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர் தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு போதை பொருட்கள் கடத்தல் குற்றத்திற்காக மரணத் தண்டனை … Read more

பறக்கும் விமானத்தில் செக்ஸ் – பயிற்சி பெண்ணுடன் விமானி உல்லாசம்!

ரஷ்யாவில் விமானி ஒருவர் தன்னிடம் விமான பயிற்சி பெறும் பெண்ணுடன் ஓடும் விமானத்தில் பாலியல் உறவு கொண்டு அதை வீடியோ எடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ரஷ்யாவின் சசோவா விமான பள்ளியில் பணிபுரியும் 28 வயது விமான பயிற்சி ஆசிரியர், தன்னிடம் பயிற்சி பெறும் பெண்ணுடன் செஸ்னா 172 என்ற விமானத்தில் வழக்கம் போல பயிற்சிக்காக பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது அந்த ஆண் விமானி, பெண் பயிற்சியாளரிடம், “தன்னுடன் பறக்கும் விமானத்தில் பாலியல் உறவு … Read more

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் வெற்றி உலகிற்கு பல படிப்பினைகளை வழங்குகிறது- பில்கேட்ஸ் பாராட்டு

டாவோஸ்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கியது. இதுவரை மொத்தம் 193 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தகுதி வாய்ந்தவர்களுக்கு போடப்பட்டுள்ளது. உலக அளவில் இது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டம் அடைந்துள்ள வெற்றிக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். டாவோஸ் நகரில்  சுகாதார அமைச்சருடனான … Read more

இலங்கையில் 50 நாட்களை கடந்த அதிபருக்கு எதிரான போராட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு,-இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான மக்கள் போராட்டம் துவங்கி, நேற்றுடன் 50 நாட்கள் முடிவடைந்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல பிரச்னைகளால் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் இந்தப் பிரச்னைகளுக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஏப்., 9ல் … Read more

நைஜீரியாவில் சோகம் – சர்ச்சில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி

லாகோஸ்: நைஜீரியா நாட்டின் தென்கிழக்கே உள்ள போர்ட் ஹர்கோர்ட் நகரில் கிங்ஸ் அசெம்பிளி கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆலயத்தில் உணவு வழங்குகிறார்கள் என பரவிய தகவலை தொடர்ந்து, சிறிய வாசல் வழியே அனைவரும் முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் பலர் சிறுவர் சிறுமிகள் ஆவர்.  இதுதொடர்பாக, மாகாண போலீசின் பெண் செய்தி தொடர்பாளர் இரிங்கே-கோகோ கூறுகையில், … Read more

சீனாவில் கன மழை: 15 பேர் பலி| Dinamalar

பீஜிங் : சீனாவில் கன மழையால் 15 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் மாயமான மூன்று பேரை தேடும் பணி நடக்கிறது.நம் அண்டை நாடான சீனாவின் தெற்கு பகுதியில் மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கிராமங்கள் மட்டுமின்றி, நகரங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புஜியான் மாகாணத்தில் பெய்த மழையால், ஒரு கட்டடம் இடிந்து எட்டு பேர் உயிரிழந்தனர். யுனான் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் இறந்தனர். குவான்க்ஸி என்ற இடத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட … Read more