பிரதமர் மோடி -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திப்பு
குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றடைந்துள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்க உள்ள இந்தோ பசிபிக் பொருளாதார திட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு டோக்கியோ புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை அவர் டோக்கியோ சென்றடைந்தார். விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர். பிரதமர் மோடியுடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் … Read more