சூடானில் இனக்குழுக்களிடையே மோதல்: 100 பேர் பலி – ஐ.நா. தகவல்

கார்தும்: சூடானில் இரண்டு இனக்குழுக்களிடையே நடந்த மோதலில் 100-க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய நாடு. வடக்கில் எகிப்தும், கிழக்கில் எரித்திரியாவும் அமைந்திருக்கும் சூடானில் பெரும்பாலான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர். சூடான் நாட்டின் பிரதமராக இருந்த அப்தல்லா ஹாம்டாக் அரசுக்கு எதிராக ராணுவத்தில் ஒரு பிரிவினர் செயல்படத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு … Read more

நியூயார்க்கில் உணவு டெலிவரி செய்யும் நாய்.. உணவுப்பொட்டலத்தை வாயில் கவ்வியப்படி கம்பீர நடை

ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தால் வீடு தேடி டெலிவரி செய்யும் சேவை தற்போது எங்கும் பரவி வருகிறது. ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நாய் ஒன்று உணவு டெலிவரி செய்வது போல் பார்சலுடன் செல்லும் காட்சி படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாயை பலர் கடந்து சென்றாலும் அவர்களை அது  பொருட்படுத்தவில்லை. நியூயார்க்கில் புதிய டெலிவரி சர்வீஸ் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இணையதளங்களில் ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர். Source link

“கணவரை கொலை செய்வது எப்படி ?” சம்பவம் செய்துவிட்டு கட்டுரை எழுதிய பெண் எழுத்தாளர்.. 2 ஆண்டுகளுக்குப் பின் போலீசில் சிக்கிய ஸ்டோரி..!

“கணவரை கொலை செய்வது எப்படி ?” என்ற கட்டுரையின் மூலம் பிரபலமான அமெரிக்க பெண் எழுத்தாளருக்கு, தனது கணவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல குறு நாவல்களை எழுதியுள்ள நான்சி கிராம்ப்டனின் கணவரும், சமையல் கலை நிபுனருமான டானியல் கிரெய்க், கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் சமையல் வகுப்புகள் நடத்தி வந்த நிறுவனத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டார். அவரது பெயரில் இருந்த 9 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணமும், இரண்டேகால் கோடி … Read more

ட்விட்டர் ஊழியர்களுடன் முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்தும் எலான் மஸ்க்

மின்சாரக் கார் தயாரிப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் தடம் பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க், முன்னணி சமூக ஊடகமான ட்விட்டரை முழுமையாக வாங்கியுள்ளார். ஒரு பங்குக்கு 54 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.  இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும். ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழுமையான விவரங்களைத் தராவிட்டால் … Read more

ஈராக்கில் தொடர்ந்து வீசி வரும் புழுதிப் புயல்.. செந்நிற போர்வையால் போர்த்தியது போல் காட்சி..!

ஈராக்கை செந்நிற போர்வையால் போர்த்தியது போல் வீசிய புழுதிப் புயலால் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு மக்கள் ஆளாகினர். பாக்தாத் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து வீசி வரும் புழுதிப் புயலால் சுவாசக் கோளாறு, சறுமப் பிரச்சினைகளுக்கு ஆளாகி நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக பாக்தாத் சர்வதேச விமான நிலையம் வழக்கம் மான பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. கொளுத்தும் வெயிலுடன், புழுதிப் புயலும் சேர்ந்து வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். Source link

காகித அட்டை ஆலையில் பயங்கர தீ விபத்து.. வானில் பல அடி உயரத்துக்கு எழுந்த கரும்புகை..!

மத்திய இங்கிலாந்தில் உள்ள காகித அட்டை ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பர்மிங்காமில் உள்ள ஸ்மர்ஃபிட் கப்பா காகித அட்டைத் தொழிற்சாலையில் ஞாயிறு நள்ளிரவில் திடீரென தீப்பற்றிய நிலையில், ஆலை முழுவதிலும் மளமளவென பரவி தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 8,000 … Read more

நீதிமன்ற காவலில் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களில் திடீர் தீ விபத்து.. 40 கார்கள் தீயில் கருகி நாசம்..!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நீதிமன்ற காவலில் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்து சேதம் அடைந்தன. குல்ஷன்-ஐ-இக்பால் பகுதியில் உள்ள அஜீஸ் பாட்டி பூங்காவிற்கு அருகே நூற்றுக்கும் அதிகமான பழைய இருசக்கர வாகனங்கள் குவியலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த வாகனங்களில் தீப்பிடித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 440 இருசக்கர வாகனங்கள், 40 கார்கள் மற்றும் பிற வாகனங்கள் தீயில் … Read more

ஈக்வடாரில் எரிபொருள் விலைக்கு எதிராக பழங்குடியினர் டயர்களை எரித்து போராட்டம்..!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து அந்நாட்டு அரசுக்கு எதிராக முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈக்வடாரில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளன. இந்நிலையில், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 11 மாகாணங்களில் சுமார் 20 சாலைத் தடைகள் அமைத்து, எரிபொருள் விலை மற்றும் விவசாய பொருட்களின் விலை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். Source link

“ஹஜ் யாத்திரை வரும் பக்தர்கள் முக கவசம் அணிய அவசியமில்லை” – சவுதி அரசு அறிவிப்பு..!

ஹஜ் புனித யாத்திரை வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணியத் தேவையில்லை என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. உள்புற வழிபாடுகளின் போது முககவசம் அணிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 8 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பக்தர்களுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசு அனுமதித்துள்ளது. தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்றும் மெக்கா மற்றும் மெதினாவில் வழிபாடுகளின் போது மட்டும் முக கவசம் அணிய வேண்டும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது. Source … Read more

போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து வெளியேற்றுகிறது குவைத்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் துபாய் : முஸ்லிம் மதம் குறித்து, பா.ஜ., பிரமுகர்கள் அவதுாறாக பேசிய கருத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து, நாட்டை விட்டு வெளியேற்ற குவைத் அரசு முடிவு செய்துள்ளது. பா.ஜ., செய்தித் தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து, அவர் கட்சியில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.இந்த சம்பவத்துக்கு, முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குவைத் உட்பட பல முஸ்லிம் … Read more