பனிச்சறுக்கு சீசன் முடிவதை குறிக்கும் வகையில் வண்ணங்களை காற்றில் தூவி பனிச்சறுக்கு வீரர்கள் சாகசம்

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டின் பனிச்சறுக்கு சீசன் முடிவதை குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பனிச்சறுக்கு வீரர்கள் வண்ணங்களை காற்றில் தூவி சாகசங்களில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது. வலாய்ஸ் பகுதியில் உள்ள க்ரேன்ஸ் – மோண்டனா ரிசார்ட்டில் உள்ள பிரபல பனிச்சறுக்கு தளத்தில் நடைபெற்ற தி நைன்ஸ் நிகழ்ச்சியில் பனிச்சறுக்கு வீரர்கள் கலந்து கொண்டு ஆல்ப்ஸ் பனி மலையில் சறுக்கியும், பறந்தும் புதுமையான வித்தைகளை செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி முடிவில் சிறந்த டிரிக், சிறந்த … Read more

டுவிட்டர் நிறுவனத்தின் தற்காலிக சிஇஓ-வாக விரைவில் பொறுப்பேற்கும் எலான் மஸ்க் ?

நியூயார்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம்  செய்தார். அதை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது … Read more

உலகின் மூன்றாவது உயரமான சிகரத்தின் உச்சியை தொட முயன்ற இந்தியர் உயிரிழப்பு !

காத்மண்டு, உலகின் மிக உயரமான மூன்றாவது சிகரமாக இமயமலையில் உள்ள கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. இது இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ளது. இந்த சிகரத்தை பல மலையேற்ற வீரர்கள் அடைந்து சாதனை படைத்து உள்ளனர். இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த 52 வயதான நாராயணன் ஐயர் என்பவர் கஞ்சன்ஜங்கா சிகரத்தின் உச்சிக்கு அருகே ஏறுக்கொண்டிருக்கும் போது உயிரிழந்ததார். இந்த ஆண்டு நேபாளத்தில் இறந்த மூன்றாவது மலையேற்ற வீரர் நாராயணன் ஐயர் ஆவார். 8586 மீட்டர் உயரம் கொண்ட இந்த … Read more

தினமும் கொரோனா பரிசோதனை…புதிய கட்டுப்பாடு கொண்டு வர சீனா திட்டம்?

சீனாவின் ஷாங்காய், பெய்ஜிங் ஆகிய நகரங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிக அளவில் பரவி உள்ளது. இதன் காரணமாக அந்நகரங்களில் சீனா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஊரடங்கு காரணமாக ஷாங்காய் நகரில் உள்ள சுமார் இரண்டரை கோடி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.  மேலும், ஜீரோ கோவிட் கொள்கையைப் பின்பற்றி வரும் சீனா, அடிக்கடி பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதோடு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அண்மையில் சென்றார்களா என்பது மொபைல் செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் எதிர்காலத்தில் கொரோனா … Read more

"உடனே பதவி விலகுங்க.. இல்லைனா…." – இலங்கை மக்கள் எச்சரிக்கை

கொழும்பு,  கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அரசுக்கு எதிராக நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள், வங்கி மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என அனைவரும் ஆதரவு அளித்துள்ளனர்.  ஒன்றிணைந்த அத்யாவசிய சேவை சங்கம் சார்பில் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசு பதவி விலகாவிட்டால் வரும் 11ம் … Read more

கிழக்கு உக்ரைன் நகரமான கிரமடோர்ஸ்கில் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்த ரஷ்யா

கிழக்கு உக்ரைன் நகரமான கிரமடோர்ஸ்கில் உள்ள பெரிய வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடுள்ள குறிப்பில், ஏவுகணைகள் மூலம் வெடி மருந்துக் கிடங்கை தாக்கி அழித்ததாகவும் கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில் Su-25 மற்றும் MiG-29 ரக உக்ரைனிய போர் விமானங்களை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.   Source link

பெண்களுக்கு இனி ஓட்டுனர் உரிமம் கிடையாது – அரசு அதிரடி உத்தரவு!

பெண்களுக்கு இனி வரும் காலங்களில், ஓட்டுனர் உரிமம் வழங்கப்படாது என, அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, தாலிபான் அமைப்பினர் ஆட்சி மற்றும் அதிகாரத்தை கைப்பற்றினர். தாலிபான் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசும் அமைக்கப்பட்டு உள்ளது. தாலிபான் ஆட்சி முறைக்கு பயந்து, ஏராளமானோர் நாட்டை … Read more

சுவிட்சலாந்தில் டெலிவரி செய்யப்பட்ட காஃபி கொட்டைகள் அடங்கிய கண்டெய்னர்களில் இருந்து 500 கிலோ கொகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் .!

சுவிட்சலாந்தில் தனியார் காஃபி தொழிற்சாலைக்கு டெலிவரி செய்யப்பட்ட காஃபி கொட்டைகள் அடங்கிய கண்டெய்னர்களில் இருந்து 500 கிலோ அளவிலான கொகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஃபிரிபோர்க் நகரில் உள்ள பிரபலமான அந்த தொழிற்சாலைக்கு வந்த கண்டெய்னர்களில் மர்ம வெள்ளை பவுடர் அடங்கிய பொட்டலங்கள் இருப்பதாக ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அந்த மர்ம பவுடர் கொகைன் போதைப்பொருள் என்பதை உறுதி செய்த அதிகாரிகள் மொத்தம் சுமார் 389 கோடி … Read more

தலிபான் அரசால் மறுக்கப்படும் ஓட்டுநர் உரிமம்: தவிக்கும் ஆப்கன் பெண்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பெண்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு புதிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பெண் கார் ஓட்டுநரான சைனாப் மொஹ்சேனி அளித்த பேட்டியில், “பெண்கள் வாகனங்கள் ஓட்டக் கூடாது என்று தலிபான்களிடமிருந்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை வரவில்லை. ஆனால், தற்போது பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் மறுக்கப்படுகிறது. சில சோதனைச் சாவடிகளில் தலிபான்கள் எங்களைத் … Read more

நாளை முதல் மே 17 வரை முழு ஊரடங்கு – பிரதமர் அதிரடி உத்தரவு!

அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்து உள்ளார். தீவு நாடான சமோவாவில், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் ஓரளவு குறைந்ததை அடுத்து, கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா பரவலைக் … Read more