துருக்கியில் 4 காதுகளுடன் காணப்படும் அதிசய பூனை.!

துருக்கியில் 4 காதுகளுடன் காணப்படும் அதிசய பூனையின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ரஷ்யன் புளு  வகையை சேர்ந்த இந்த பூனையை கேனி டோஸ்மெஸி என்ற பெண்மணி தனது நண்பரின் தோட்டத்தில் கண்டெடுத்தார். அது நான்கு காதுகளுடன் இருப்பதை கண்ட அவர் அதற்கு மிடாஸ் என்று பெயரிட்டு தனது வீட்டில் வளர்த்து வருகிறார். நான்கு காதுகள் இருப்பதால் ஏதோ சூப்பர் பவர் கேட்கும் திறன் அந்த பூனைக்கு இருப்பதாக யாரும் கருதவேண்டாம் என்றும் மற்ற பூனைகளை … Read more

குரங்கு அம்மை நோயால் இதுவரை 30 நாடுகளில் 1,880 பேர் பாதிப்பு – உலக சுகாதார அமைப்பு

குரங்கு அம்மை நோயால் இதுவரை 30 நாடுகளில், ஆயிரத்து 880 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில், 85 சதவீத பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு அடுத்தப்படியாக பிரிட்டனில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, நேற்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 574ஆக அதிகரித்துள்ளது. இதில், பெரும்பாலான பாதிப்பு ஓரினச்சேர்க்கையாளர்களிடம் கண்டறியப்பட்டுள்ளதாக … Read more

காபூலில் குருத்வாரா மீது 2 வெடிகுண்டு தாக்குதல்கள்: 2 பேர் பலி; பலரின் கதி என்ன?

காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், கர்தே பர்வான் என்ற பகுதியில் சீக்கியர்களின் வழிபாட்டு தலம் என அறியப்படும் குருத்வாரா அமைந்துள்ளது. இதில் இன்று காலை திடீரென பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டது. அங்கு பயங்கரவாதிகளால் இந்திய நேரப்படி, இன்று காலை 8.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. குருத்வாராவில், சீக்கிய பக்தர்கள் பலர் சிக்கி கொண்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும், தலீபான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இந்த … Read more

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம்.!

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே 9 வருடத்திற்குப் பிறகு சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாக துணைத் தலைவர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் பேச்சுவார்த்தையை தொடங்கினர். இருதரப்பு வர்த்தகத்திற்கு இடையூறாக இருக்கும் சிக்கல்களை தீர்ப்பது, எல்லை தாண்டிய முதலீடுகளுக்கான சட்டப்பூர்வ கட்டமைப்பை வழங்குவது உள்ளிட்டவைகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை … Read more

ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெப்ப அலை – பிரான்ஸ், ஸ்பெயினில் கடும் வெப்பம்!

பாரிஸ், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிற மேற்கு ஐரோப்பிய நாடுகள் வெப்ப அலையை எதிர்கொள்கின்றன. இதன் காரணமாக, காட்டுத் தீ மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் பற்றிய கவலை அதிகரித்துள்ளது. நேற்று பிரான்சின் சில பகுதிகளில் வெப்பநிலை ஏற்கனவே 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது. இன்று பதிவாகும் வெப்பம், உச்சபட்சமாக இருக்கும் என்றும் பருவநிலை மாற்றத்தால் இத்தகைய நிகழ்வுகள் வழக்கத்தை விட முன்னதாகவே தாக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இன்று 42 டிகிரிக்கு மேல் … Read more

காபூலில் உள்ள குருத்வாராவில் அடுத்தடுத்து 2 முறை குண்டுவெடிப்பு.. 2 பேர் உயிரிழப்பு.!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாராவில், அடுத்தடுத்து இரண்டு முறை நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். காலை 7 மணியளவில் குருத்வாராவில் ஏராளாமன சீக்கியர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது, அதன் இரு வாயில்களிலும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பில் சிக்கி ஆப்கன் காவலர் ஒருவரும் சீக்கியர் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குருத்வாராவில் பலர் சிக்கியுள்ளதால் இறப்புகள் … Read more

காசா பகுதி ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; ஹமாஸ் தளபதி பலி!

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து, இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 1990-களில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் கையெழுத்தான, ஆஸ்லோ ஒப்பந்தப்படி காசா முனை சுயாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், உண்மையில் காசா முனை இன்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முற்றுகையின் கீழ்தான் இருந்து வருகிறது. … Read more

மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!

மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சியூடாட் ஜுராஸ் நகரில் உள்ள உணவகத்தில், சிகை அலங்கார பெண் நிபுணர், தனது 30 வயதை பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது, உணவகத்திற்குள் புகுந்து இருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சிகை அலங்கார பெண் உள்பட 4 பேர் உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. Source link

எலான் மஸ்க்கை விமர்சித்து அதிருப்தி கடிதம் வெளியிட்ட ஸ்பேஸ்-எக்ஸ் ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்!

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரரர்களுள் ஒருவராக இருப்பவர். இவர் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் ஏற்கெனவே வாங்கிவிட்டார். பின்னர் ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். பின்னர் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டாக , தலைமை நிர்வாக அதிகாரி எலோன் … Read more

பிரான்ஸ், இத்தாலியில் வீசி வரும் வெப்ப அலையால் மக்கள் அவதி.!

பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், ஐரோப்பிய  நாடுகளில் காட்டுத் தீ பரவல் அதிகரித்து வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக பிரான்சின் பல நகரங்களில் வெப்ப அலை வீசி வருவதையடுத்து, அனைத்து துறைகளுக்கும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்திய அந்நாட்டு அரசு, சிறப்பு உதவி எண்ணை அறிவித்துள்ளது. அதேசமயம் ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத் தீயால், 9 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிலான காடுகள் எரிந்து … Read more