மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!

மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சியூடாட் ஜுராஸ் நகரில் உள்ள உணவகத்தில், சிகை அலங்கார பெண் நிபுணர், தனது 30 வயதை பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது, உணவகத்திற்குள் புகுந்து இருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சிகை அலங்கார பெண் உள்பட 4 பேர் உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. Source link

எலான் மஸ்க்கை விமர்சித்து அதிருப்தி கடிதம் வெளியிட்ட ஸ்பேஸ்-எக்ஸ் ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்!

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரரர்களுள் ஒருவராக இருப்பவர். இவர் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் ஏற்கெனவே வாங்கிவிட்டார். பின்னர் ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். பின்னர் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டாக , தலைமை நிர்வாக அதிகாரி எலோன் … Read more

பிரான்ஸ், இத்தாலியில் வீசி வரும் வெப்ப அலையால் மக்கள் அவதி.!

பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், ஐரோப்பிய  நாடுகளில் காட்டுத் தீ பரவல் அதிகரித்து வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக பிரான்சின் பல நகரங்களில் வெப்ப அலை வீசி வருவதையடுத்து, அனைத்து துறைகளுக்கும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்திய அந்நாட்டு அரசு, சிறப்பு உதவி எண்ணை அறிவித்துள்ளது. அதேசமயம் ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத் தீயால், 9 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிலான காடுகள் எரிந்து … Read more

10,000 உக்ரேனிய வீரர்களுக்கு 120 நாட்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம் – பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 115-வது நாளாக தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், 10,000 உக்ரேனிய வீரர்களுக்கு 120 நாட்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்மொழிந்துள்ளார். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. நேற்று, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் … Read more

தலிபான்கள் ஆட்சியில் பயங்கரவாதம் அதிகரிப்பு: இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் கவலை

புதுடெல்லி: தலிபான்கள் ஆட்சிக்குப் பிறகு தங்கள் நாட்டில் பயங்கரவாதம் அதிகரித்துள்ளதாக இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மாமுண்ட்சாய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் ஃபரித் மாமுண்ட்சாய் கூறும்போது, “ஆப்கனில் கடந்த ஆகஸ்ட் மாதல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதலே நாடு முழுவதும் பயங்கரவாதங்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கனின் தலைமுறைகள் இருண்ட தருணங்களைச் சந்தித்து வருகின்றனர். பயங்கரவாதிகளுடன் சமரசமான உறவில் தலிபான்கள் உள்ளனர். ஆப்கனில் ஐஎஸ்ஏ தீவிரவாத அமைப்புக்கு பலம் அதிகரித்து இருக்கிறது. ஐஎஸ்ஏ அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் … Read more

குருத்வாரா மீது வெடிகுண்டு தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில், குருத்வாரா மீது நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 2 பேர் உயிரிழந்தனர். தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், கர்தே பர்வான் என்ற பகுதியில் சீக்கியர்களின் வழிபாட்டு தலம் என அறியப்படும் குருத்வாரா அமைந்துள்ளது. இதில் இன்று காலை திடீரென பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டது. குருத்வாராவில், சீக்கிய பக்தர்கள் பலர் சிக்கி கொண்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும், தாலிபான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த … Read more

இலங்கையைப் போல் பாகிஸ்தானும் சீனாவின் கடன் வலையில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.!

இலங்கையைப் போல் பாகிஸ்தானும் சீனாவின் கடன் வலையில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லாகூர் பசுமை ரயில் திட்டத்திற்காக சீனாவிடம் இருந்து 55.6 மில்லியன் டாலர் கடனை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ள நிலையில், இந்த கடன் தொகையை 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் தவறாமல் திருப்பி செலுத்துமாறு சீனா நெருக்கடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த மார்ச் மாத நிலவரப்படி, … Read more

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல்.!

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல்களை நடத்தினர். காசாவில் இருந்து வந்த ராக்கெட்டை வானிலேயே தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ள அவர்கள், அதற்கு பதிலடியாக காசாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தெற்கில் உள்ள இஸ்ரேலிய நகரமான ஆஷ்லெலான் மற்றும் காசா முனையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக சைரன்கள் ஒலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களால் அழிவுகள் ஏற்பட்டிருப்பதாக பாலஸ்தீனிய ஊடகம் தெரிவித்துள்ளது. Source link

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,910 கோடி அபராதம் விதித்தது மெக்சிகோ நீதிமன்றம்.!

அவதூறான வலைதள பதிவுக்காக கூகுள் நிறுவனத்துக்கு ஆயிரத்து 910 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனம் அவதூறு செய்தி பரப்பியதாக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், மெக்சிகோ சிட்டி நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. கருத்துச் சுதந்திரம் மற்றும் பிற அடிப்படைக் கொள்கைகளை குறைத்து மதிப்பீடும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.  Source link

உக்ரைனில் அமெரிக்க வீரர்களைச் சிறைபிடித்த ரஷ்ய ராணுவம்.!

உக்ரைனில் அமெரிக்க முன்னாள் ராணுவவீரர்கள் இருவர் சிறைபிடிக்கப்பட்டது குறித்த வீடியோவை ரஷ்ய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யப் படைகளை முறியடிக்க உக்ரைன் ராணுவத்துக்குத் துணையாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றின் முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் போரிட்டு வருகின்றனர். அவர்களில் இருவரை ரஷ்யப் படையினர் சிறைபிடித்துள்ளனர். இந்நிலையில் ஜேம்ஸ் லாங்மேன் என்கிற மற்றொரு வீரரையும் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.  Source link