உக்ரைன் படையெடுப்பு – ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் தடை..!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 97 நாட்களை எட்டிய நிலையில் ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத் தடையை அறிவித்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதிகளுக்குத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 90 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி விடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் கடுமையாக உயர்ந்துள்ளது.ஒரு பேரல் கச்சா எண்ணெய் 122 புள்ளி 84 டாலருக்கு சர்வதேச சந்தையில் விலை நிர்ணயிக்கப்பட்டது.  Source link

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கையில் வரிகள் உயர்வு- அரசு அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து அமலுக்கு வந்துள்ளது. … Read more

அதிக ஊதியம் பெற்ற சிஇஓ-க்களில் எலான் மஸ்க் முதலிடம் : 7-வது இடத்தில் இந்தியர்- யார் தெரியுமா ?

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவதாக அறிவித்தது முதல் சர்வதேச அளவில் கவனம் பெறும் நபராக மாறினார். ஆனால் அந்த டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் பின்னர் நடைபெறவில்லை. ஆனால் டுவிட்டரின் 9.2% பங்குகளை வைத்திருக்கும் அவர் தற்போது நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கிறார். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு அதிகளவில் ஊதியம் பெற்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் … Read more

உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் மதிப்பிலான நீண்ட தூர ராக்கெட்டுகளை வழங்குகிறது அமெரிக்கா..!

உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் HIMARS வகை ராக்கெட்டுகளை அமெரிக்கா வழங்குகிறது. ரஷ்யா படையெடுப்பு 100-வது நாளை எட்டிய நிலையில், உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தொகுப்பை அமெரிக்கா வழங்குகிறது. புதிய தொகுப்பில் ரஷ்ய எல்லைகளை தாக்கி அழிக்கக் கூடிய நீண்ட தூர ராக்கெடுகளை அமெரிக்கா வழங்க முடிவு செய்துள்ளது. ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கும் வகையிலான ராக்கெட்டுகளை உக்ரைனுக்கு வழங்கப் போவதில்லை என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்த மறுநாளே … Read more

காபோன் வாழ் இந்தியர்களுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு

லிப்ரெவில்லி, இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளான காபோன், செனகல் மற்றும் மத்திய கிழக்கு நாடான கத்தாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் காபோனில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களை வெங்கையா நாயுடு நேற்று சந்தித்து உரையாடினாா். அவா் பேசுகையில், மக்களை மகிழ்ச்சியடையச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கம். சீர்திருத்தங்கள் காலத்தின் தேவை என்றும் கூறினார். காபோனில் 1,500 இந்தியர்கள் மட்டுமே இருந்தபோதிலும், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளீர்கள் என்பதைக் குறிப்பிடுவதில் … Read more

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்.. பள்ளி பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச்சூடு – பெண் ஒருவர் பலி..!

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் திடீரென நுழைந்த மர்மநபர் சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், பெண் ஒருவர் உயிரிழந்தார். நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற மோரிஸ் ஜெஃப் உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், சேவியர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பட்டமளிப்பு மையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்தனர். Source … Read more

அதிகரிக்கும் குரங்கு அம்மை | Dinamalar

காங்கோ : ஆப்ரிக்க நாடான காங்கோவில் குரங்கு அம்மை பரவியுள்ளது. நைஜீரியாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.பல வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. இங்கிலாந்தில் இதுவரை 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் 200 பேர் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50.35 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 26 லட்சத்து 12 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே … Read more

புதின் எதிர்ப்பாளர் அலெக்சி நவால்னி மீது கிரிமினல் வழக்கு.!

ரஷ்ய அதிபர் புதின் விமர்சகரான எதிர் கட்சி தலைவர் அலெக்சி நவால்னி மீது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்பை உருவாக்கி அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட முயன்றதாக நவால்னி மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நவால்னி, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடுதலாக 15 ஆண்டுகள் சிறையில இருக்க … Read more

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி கொழும்பு துறைமுகத்தில் இலவச மிதிவண்டி சேவை தொடக்கம்

கொழும்பு : இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அந்நாட்டு அரசு பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளது. இதனால் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர். இலங்கை விமானங்கள், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருளை நிரப்பி செல்கின்றன. இந்த நிலையில், இலங்கையின் பிரதான துறைமுகமான கொழும்பு துறைமுகத்தில், இலவச மிதிவண்டி சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதன் … Read more