நேபாள விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு – விபத்து தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு நியமனம்

காத்மாண்டு: விபத்துக்குள்ளான நேபாள விமானத்தின் கருப்புப் பெட்டி நேற்று கண்டெடுக்கப்பட்டது. நேபாள நாட்டிலுள்ள தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9 என்-ஏஇடி’ என்ற சிறிய ரக விமானம் பொக்காராவிலிருந்து மத்திய நேபாளத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான ஜோம்சோம் நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.55 மணிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில், தரைக் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விமானத்தைத் தேடும் … Read more

மியான்மரில் பேருந்து நிறுத்தம் அருகே வெடிகுண்டு தாக்குதல்.!

மியான்மர் யங்கூன் நகரில் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத்துறை குற்றஞ்சாட்டிய  நிலையில், எந்த அமைப்பும் இதுவரை தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. பேருந்துக்காக காத்திருந்தவர்கள் என பலர் தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் இருந்து வெடிக்காத குண்டு ஒன்றை பாதுகாப்பு வீரர்கள் பறிமுதல் செய்தனர்.   Source link

பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் நடால்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் ஓற்றையர் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்.பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், ரபேல் நாடல், ஜோகோவிச் ஆகிய இவரும் மோதினர். இதில் 6-2, 4-6, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு ரபேல் நாடல், முன்னேறினார். பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் … Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரிகளை உயர்த்தியது அமைச்சரவை.!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் வரிகளை அமைச்சரவை உயர்த்தியது. மதிப்புக் கூட்டு வரியை 18 சதவீதமும், பெருநிறுவங்களுக்கான வரியை  30 சதவீதமாகவும் உயர்த்தி அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. வருமான வரி செலுத்துவோர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளை குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு 65 பில்லியன் இலங்கை ரூபாய் கூடுதல் வருவாயாக கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. Source link

மேலும் 4 கோடி கிலோ டீசல் இலங்கைக்கு அனுப்பிவைப்பு

கொழும்பு: இலங்கைக்கு இந்தியா மேலும் நான்கு கோடி கிலோ டீசலை நேற்று அனுப்பி வைத்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது.அன்னியச் செலாவணி பற்றாக்குறை விலைவாசி உயர்வு எரிபொருள் கட்டுப்பாடு அத்தியாவசியப் பொருட்களுக்குதட்டுப்பாடு மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அந்நாடு சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா இந்தாண்டு மட்டும் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மார்ச் ஏப்ரல் மாதங்களில் 40 கோடி … Read more

போரினால் சீரழியும் உக்ரைன்: நைட்ரிக் அமில டாங்கரை தாக்கியது ரஷ்யா

உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரில் நைட்ரிக் அமிலம் கொண்ட டாங்கரை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள செவெரோடோனெட்ஸ்க் நகரில் ரசாயன ஆலையில் நைட்ரிக் அமில டாங்கரை ரஷ்யா தாக்கியது என்று உள்ளூர் கவர்னர் செர்ஜி கெய்டே கூறினார். இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, மக்கள் தங்குமிடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கவர்னர் வலியுறுத்தினார். நைட்ரிக் அமிலம் சருமத்தில் பட்டாலும் சரி, சுவாசித்தாலும், உடலுக்குள் சென்றாலும் மிகவும் ஆபத்தை … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவில் இருந்து உரங்கள் மற்றும் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவு

01.06.2022 04.50: உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவது குறித்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் உடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். உக்ரைன் பாதுகாப்பை பலப்படுத்துதல், போரிடுவதற்கு ஆயுத விநியோகம் குறித்து விவாதம் நடைபெற்றதாக ரெஸ்னிகோவ் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர் உதவி வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 03.40: ரஷியாவில் இருந்து உரங்கள் மற்றும் … Read more

கோழி ஏற்றுமதிக்கு மலேஷியா தடை; சிங்கப்பூரில் எகிறும் இறைச்சி விலை| Dinamalar

கோலாலம்பூர் : கோழி ஏற்றுமதிக்கு மலேஷிய அரசு தடை விதித்துள்ளதை அடுத்து, சிங்கப்பூரில் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இறைச்சி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்துமே பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் பெரும்பாலான பொருட்கள் மலேஷியாவின் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், மலேஷியாவின் கோழி உற்பத்தி குறையத் துவங்கியதை அடுத்து விலை கடுமையாக உயர்ந்தது. எனவே, உற்பத்தி மற்றும் விலை சீராகும் வரை கோழி ஏற்றுமதிக்கு … Read more

உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரைப் பெற்றார் 103 வயதான ரூத் லார்சன்..

சுவீடன் நாட்டை சேர்ந்த 103 வயதான ரூத் லார்சன் என்ற பெண் உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரை பெற்றுள்ளார். தனக்கு 90 வயதாகும் போது பாரா கிளைடிங், கிளைடிங், பாராசூட்டில் பறப்பது உள்ளிட்டவற்றை அதிகம் கற்க விரும்பியுள்ளார் ரூத் லார்சன். பின்னர் தொடர்ந்து ஸ்கை டைவிங் பயிற்சி மேற்கொண்டு வந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மொடாலா பகுதியில் ஸ்கை டைவிங் செய்து உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரை பெற்றார். … Read more

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு தடை| Dinamalar

பிரசல்ஸ் : உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டித்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிப்பது என, ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் மூன்று மாதங்களை தாண்டியுள்ளது.இப்போரை கண்டித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அடுத்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிக்கவும் ஐரோப்பிய கூட்டமைப்பு திட்டமிட்டது.ஆனால், ஐரோப்பிய நாடுகள் … Read more