இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை; ரணில் நடத்திய முக்கிய ஆலோசனை

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. இதில் ஆட்சிக்கு ஆதரவாளர்களுக்கும் எதிர்பாளர்களுக்கும் இடையே மூண்ட வன்முறையில், இலங்கை பற்றி எரிந்தது. அதில் அந்நாட்டின் பிரதமராக இருந்த ராஜபக்ஷே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து விலகினார். தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதிபராக அவரது சகோதரர்  கோட்டாபய ராஜபக்ச தொடருகிறார். பின்னர் ஏற்பட்ட அரசியல் முன்னேற்றத்தில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். … Read more

உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் சரண்.. ரஷ்யா அறிவிப்பு

மரியுபோல் உருக்காலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் இதுவரை சரணடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை உருக்காலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் வெளியேற மனிதாபிமான வழித்தடத்தை ரஷ்யா திறந்தது. அங்கிருந்து வெளியேறும் வீரர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியில் உள்ள நோவோ-அசோவ்ஸ்க் (Novoazovsk) நகரில் வெளி உலகத் தொடர்பின்றி தங்கவைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்துள்ள 80 வீரர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

ஓட்டை குடையின் விலை ஒரு லட்ச ரூபாயா? கதறும் சீனர்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆடம்பர பிராண்ட்களான கூச்சி மற்றும் அடிடாஸ் இணைந்து 1.2 லட்ச ரூபாய் விலையில் சீனாவில் ஒரு குடையை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த குடை மழையை தடுக்காது ஆனால் வெயிலிலிருந்து மட்டும் காக்குமாம். இந்த ஓட்டை குடையின் படங்கள் சமூக ஊடகங்களில் பல லட்சம் பேரால் பகிரப்பட்டு கிண்டலடிக்கப்பட்டது. ஆடம்பர பொருட்களுக்கான முக்கிய சந்தையாக சீனா விளங்குகிறது. கடந்த ஆண்டு சீனாவில் ஆடம்பரப் பொருட்களின் விற்பனை 36 சதவீதம் கூடியது. அடுத்த … Read more

மேற்கத்திய நாடுகள் தடைக்கு பதிலடி; 113 விமானங்களை கைப்பற்றிய ரஷ்யா

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக உலகின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் 113 ஜெட் விமானங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக, உக்ரைன் பேரழிவை சந்தித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், இது உலக அளவிலும் பல்வேறு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு முதல், உலகம் பல்வேறு வகையான சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த தாக்கத்தில் இருந்து மிக பெரிய தனியார் நிறுவனங்கள் கூட தப்பவில்லை. ஏர்கேப் ஹோல்டிங்ஸ … Read more

பேராசிரியர் சலபதி, கே.சந்துரு உள்ளிட்ட 4 பேருக்கு ‘இயல்’ விருதுகள் அறிவிப்பு!

இலங்கை, தமிழ்நாடு மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 4 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடு கனடா. அங்கே, கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாகத் திறம்பட இயங்கிவருகிறது கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு. கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக கடந்த 2001-ஆம் ஆண்டு, கனடாவின் தலைநகரானா டொராண்டோவில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் பொதுவான நோக்கம், உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய … Read more

அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..

இங்கிலாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த அவர், ஏப்ரல் இறுதியில் கனடாவிற்கு சொந்த வாகனத்தில் சென்று விட்டு, மே மாத தொடக்கத்தில் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னம்மையை உண்டுபண்ணும் வைரஸ்கள் குடும்பத்தை சேர்ந்த ஒரு வைரஸ் பாதிப்பாலேயே குரங்கம்மை பாதிப்பு ஏற்படும் நிலையில் சின்னம்மைக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி குரங்கம்மைக்கும் பலனளிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பாதிப்பு ஏற்பட்டு 4 நாட்களுக்குள் தடுப்பூசி … Read more

ரஷ்யப் படையினரின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் பாலத்தை வெடிகுண்டுகள் வைத்து தகர்த்திய உக்ரைன் படை வீரர்கள்.!

உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் பாலம் ஒன்றை உக்ரைன் வீரர்கள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்தனர். இந்த பாலம் Sievierodonetsk மற்றும் Lysychansk வை Rubizhne பகுதியுடன் இணைக்கும் பாலமாகும். அந்த பாலத்தில் உக்ரைன் வீரர்கள் வெடிகுண்டுகளை பொருத்தி திட்டமிட்டபடி வெடிக்கச் செய்யும் வீடியோ காட்சியினை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர். உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் நாட்டின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படையினருடனான போர் பல வாரங்கள் நீடிக்கும் என்று … Read more

இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்த ஜமைக்கா ஆர்வம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

வெளிநாட்டில் புதிய இந்திய தொழில்நுட்பக் கழகங்களைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், அதை நடத்த விருப்பம் தெரிவித்த முதல் நாடு ஜமைக்கா என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். ஜமைக்கா நாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள், புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (ஐஐஎம்) ஆகியவற்றில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் … Read more

பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு.. கடுமையான ஊரங்கு அமல்..

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் பகுதிகளில் கடுமையான ஊரங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகர நிர்வாக பணியாளர்கள் முழு கவச உடையணிந்து சென்று பொருட்களை விநியோகம் செய்தனர். சாவோயங் (Chaoyang) மாவட்டத்தில் அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதன் எதிரொலியாக, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அருகே உள்ள வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.  Source link

தீயை நான் பற்ற வைக்கவில்லை… பாகிஸ்தான் மாடல் வெளியிட்ட புதிய வீடியோ

பாகிஸ்தானில் வெப்பம் 100 டிகிரியையும் தாண்டிய நிலையில், கடுமையான வெப்பத்தால் மக்கள் தெருக்களில் நடமாடுவதையும் குறைத்துக்கொண்டு வீட்டில் அடைந்து கிடக்கும் சூழல் பாகிஸ்தானில் நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பிரபல சமூக வலைதள நட்சத்திரமும், மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஹுமைரா அஸ்கர் (Humaira Asghar) என்ற மாடல் அழகி, பற்றி எரியும் காடுகளுக்கு முன்னால் போஸ் கொடுத்து வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டார்.  மேலும் அந்த பதிவில் “நான் எங்கிருந்தாலும் நெருப்பு பற்றிக் கொள்ளும்.” என்று … Read more