நிவாரண பொருட்கள் இலங்கையில் வினியோகம்| Dinamalar

கொழும்பு : இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவியாக அனுப்பிய அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களை அந்நாட்டு மக்களுக்கு வினியோகிக்கும் பணி துவங்கி உள்ளது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதையடுத்து இலங்கைக்கு இந்தியா கடனுதவி அளித்துள்ளதுடன் அரிசி, கோதுமை, பால் பவுடர் உள்ளிட்ட உணவு பொருட்கள் மருத்துவ பொருட்களையும் அனுப்பி வைத்தது.இந்தப் பொருட்களை ஏழை மக்களுக்கு வினியோகிக்கும் பணி துவங்கியுள்ளதாக இலங்கை உணவுக் கழகம் தெரிவித்துள்ளதுஇது பற்றி … Read more

'கரோனா தடுப்பூசி செலுத்தியதில் இந்தியாவின் வெற்றி ஒரு பாடம்' – பில் கேட்ஸ் புகழாரம்

டாவோஸ்: இந்தியா கரோனா தடுப்பூசியை பரவலாக எடுத்துச் சென்றதில் அடைந்த வெற்றியும், தொற்றுக் கண்காணிப்பில் அதன் தொழில்நுட்பப் பயன்பாடும் உலக நாடுகளுக்கு பல பாடங்களைக் கொண்டுள்ளது என்று மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு மே 22 தொடங்கி 26 வரை நடைபெற்றது. உலக அளவில் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், பொருளா தார நிபுணர்கள், சமூக ஆளுமைகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். கடந்த 25-ம் தேதி இந்திய … Read more

Nepal Plane Crash Live Updates in Tamil: நேபாள விமான விபத்து – பயணித்த 22 பேரும் உயிரிழப்பு!

நேபாள நாட்டில், விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அண்டை நாடான நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான பொக்காராவில் இருந்து 22 பேருடன் டாரா ஏர் என்ற விமானம் நேற்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமானது. விமானத்தில் 4 இந்தியர்கள், ஜப்பானியர்கள், விமானிகள் உட்பட 22 பேர் பயணித்தனர். இதனை தொடர்ந்து தேடுதல் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. விமானத்தின் சிக்னல், விமானியின் மொபைல் … Read more

113வது பிறந்த நாள் கொண்டாடி சாதனை| Dinamalar

காரகாஸ் : உலக அளவில் அதிக வயதான நபர் என்ற சிறப்பை பெற்ற, ஜூவான் நேற்றுமுன்தினம் 113வது பிறந்த நாளை கொண்டாடினார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை சேர்ந்தவர் ஜூவான் விசென்டே பெரெஸ் மோரா. கடந்த 1909ம் ஆண்டு மே 28ம் தேதி பிறந்தவர். உலகின் மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் தன்னுடைய 113வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார். குடும்பத்தினர், உறவினர்கள், குடும்ப … Read more

நேபாள விமான விபத்து: 14 சடலங்கள் மீட்பு; 4 இந்தியர்களை அடையாளம் காண முயற்சி

நேபாளத்தில் 22 பேருடன் விபத்துக்குள்ளான விமானத்தைக் கண்டுபிடித்த மீட்புக் குழுவினர் இதுவரை 14 சடலங்களை மீட்டுள்ளனர். விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்படவுள்ளன. அதில் இந்தியர்களின் சடலங்கள் இருக்கின்றனவா என்று அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இது குறித்து நேபாள சிவில் விமான போக்குவரத்து செய்தி தொடர்பாளர் தியோ சந்திர லால் கார்ன், ” விபத்து நடந்த பகுதியில் இருந்து இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து பகுதிக்கு கூடுதலாக … Read more

இந்தோனேஷியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் மீட்பு… மாயமான 25 பேரை தேடும் பணி தீவிரம்.!

இந்தோனேஷியாவில் 42 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காணாமல் போன 25 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுலாவேசி மாகாணத்தின் தலைநகரான மகஸ்ஸரில் இருந்து சென்ற படகு எரிபொருள் தீர்ந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடலில் தத்தளித்த 17 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 25 பேரை தேடும் பணியில் இந்தோனேசியா விமானப் படை ஹெலிகாப்டர்களுடன் 2 மோட்டார் படகுகள் மற்றும் மீட்பு படகுகள் … Read more

நேபாளம்: மாயமான விமானம் மலையில் மோதி விபத்து – பயணிகளின் நிலை என்ன?

காத்மண்டு, நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 22 பேருடன் நேற்று காலை தாரா ஏர் என்ற விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமானது. விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகளும் 3 விமான ஊழியர்களும் பயணித்தனர். விமானம் மாயமானதையடுத்து, அதை தேடும் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. விமானத்தின் சிக்னல், விமானியின் மொபைல் போன் சிக்னல் உள்ளிட்டவற்றை கொண்டு விமானம் விபத்துக்குள்ளானதா? விமானத்தின் நிலை … Read more

இரு பொழுதுபோக்கு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி.. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்!

அமெரிக்கா ஜார்ஜியா மாகாணத்தில் இரு பொழுதுபோக்கு படகுகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். வார இறுதி நாளையொட்டி வில்மிங்டன் நதியில் பொது மக்கள் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக இரு படகுகள் நேருக்கு நேர் மோதி நதியில் கவிழ்ந்தது. நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை … Read more

அமெரிக்காவில் ஒரே நாளில் முக்கிய நகரங்களுக்கு செல்லும் 1200 விமானங்கள் ரத்து

அட்லாண்டா: அமெரிக்காவில் வார இறுதி நாட்களில் பலரும் வெளியூர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் விமான பயணம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக அவர்கள் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள். வானிலை மோசமாக இருந்தால் விமானங்கள் ரத்து செய்யப்படும். இதனை விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவில் பல்வேறு விமான நிறுவனங்கள் இந்த வாரம் பல விமானங்களை ரத்து செய்தது. அதன்படி அமெரிக்காவில் நேற்று மட்டும் 1200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 1500 விமானங்களும், … Read more