மரியுபோலில் இருந்து 344 பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்பு – அதிபர் ஜெலென்ஸ்கி உரை.!

மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட 300க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் சபோரிஜியா நகருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் உள்ள அஸோவ்ஸ்டால் உருக்காலையில் பதுங்கி இருந்த 344 பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அங்கு மேலும் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், மீட்கப்பட்டவர்கள் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருக்கும் சபோரிஜியா நகருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனவும் நாட்டு மக்களிடம் நிகழ்த்திய உரையில் … Read more

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

பாரீஸ்: பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நார்வே, சுவீடன், ஐஸ்லாந்து, பின்லாந்து நாட்டு பிரதமர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். ஜெர்மனி, டென்மார்க்கை தொடர்ந்து பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக அதிபராக பதவி ஏற்ற இமானுவேல் மேக்ரானை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் இந்தியா பிரான்ஸ் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து … Read more

விண்ணை தொடுவது போன்ற பிரம்மாண்ட கடல் அலை.. வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல்..!

கடல் அலையில் தெறிக்கும் நீர்த்துளிகள் மேகங்களை தொட்டு திரும்புவது போன்ற வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. உயர்ந்து அடிக்கும் கடல் அலை பாறையின் மீது மோதி நீர்க்குமிளிகள் தெறிப்பது காண்போரை பரவசப்படுத்தும். சில நேரங்களில் விண்ணை தொடும் அளவுக்கு சில அலைகள் உயர்ந்து காண்போரை மிரட்சியூட்டும். அந்த வகையில் கடலை அலை ஒன்று வான் மேகங்களை தொட்டு திரும்புவது போன்ற வீடியோ இணையத்தில் பலரால் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.ஏற்கனவே வெளியான வீடியோ தற்போது மீண்டும் … Read more

கணினி உதவியுடன் அணு ஆயுத தாக்குதல் பயிற்சி நடத்திய ரஷியா

மாஸ்கோ: ரஷியா உக்ரைன் போர் 70 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல நகரங்களில் முற்றுகையிட்டுள்ள ரஷியா ஒவ்வொரு பகுதியாக பிடித்து வருகிறது. உக்ரைன் மக்கள் பலரும் ரஷியாவால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரஷியா உக்ரைன் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அரசாங்கத்தை நிறுவ முயற்சித்து வருவதாகவும் உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது. அதேசமயம் உக்ரைனும் தொடர்ந்து ரஷியாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுத உதவியால் உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து ரஷிய வீரர்களை தாக்கி வருகின்றனர்.  இந்நிலையில் ரஷ்ய … Read more

உக்ரைனில் ஆயுத விநியோகத்துக்கு பயன்படுத்திய 6 ரயில் நிலையங்களை தகர்த்தது ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் படைகளுக்கு ஆயுத விநியோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த 6 ரயில் நிலையங்களை குண்டுவீசி சேதப்படுத்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தது. அப்படி நேட்டோவில் சேர்ந்தால், அது தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்யா கூறியது. மேலும், நேட்டோவில் சேர கூடாது என்று உக்ரைனை ரஷ்யா தொடர்ந்து எச்சரித்து வந்தது. அதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கவில்லை. இதையடுத்து உக்ரைன் மீது போர் … Read more

ஸ்பெயினில் வரலாறு காணாத அளவு கொட்டித் தீர்த்த கனமழை.. ஒரே நாளில் ஒரு ச.மீ 201 லி. மழை பதிவு

ஸ்பெயினில் வரலாறு காணாத அளவில் பெய்த கனமழை கொட்டித் தீர்த்ததால் முக்கிய நகரங்களில் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் கரை புரண்டு ஓடுகிறது. மத்திய தரைக்கடலை ஒட்டி அமைந்துள்ள Valencia பிராந்தியத்தில், ஒரே நாளில் ஒரு சதுர மீட்டருக்கு ஏறத்தாழ 201 லி. மழை கொட்டி தீர்த்த நிலையில், மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகள், வீடுகள் மற்றும் விளை நிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. கனமழையால் … Read more

புதிய வழிமுறைகளால் நெருக்கடியை கையாளலாம்: கோத்தபய ராஜபக்சே நம்பிக்கை

கொழும்பு : வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி, கடந்த மாதம் 9-ந் தேதியில் இருந்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு கோட்டையில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடான சந்திப்பு நடைபெற்றது. அப்போது அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியதாவது:- பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய வழிமுறைகளை கையாண்டு அரசியல் பிளவுகளில் இருந்து விலகி செல்ல … Read more

ரஷ்யா ஏவுகணை பயங்கரவாத உத்தியை பயன்படுத்துகிறது: உக்ரைன்

https://zeenews.india.com/tamil/topics/Ukraineலிவிவ்: ரஷ்யா உக்ரைன் மீது இரு மாத காலங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மேலை நாடுகள் உக்ரேனிற்கு, ஆயுதங்களை பெருமளவு வழங்கி வருவதாக புகார் கூறிய ரஷ்யா, உக்ரைன் முழுவதும் உள்ள இரயில் நிலையங்கள் மற்றும் பிற சப்ளை-லைன் இலக்குகளை குண்டுவீசித் தாக்கியது. ஐரோப்பிய ஒன்றியம் புதன் கிழமை ரஷ்யாவிடம் இருந்து செய்யப்படும் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்து குறிப்பிடத்தக்கது. உக்ரைனில் உள்ள ஐந்து ரயில் நிலையங்களில் உள்ள மின்சார வசதிகளை அழிக்க கடல் … Read more

டென்மார்க்கில் நார்வே பிரதமருடன் மோடி சந்திப்பு: ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

கோபென்ஹேகன்: நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோரை, டென்மார்க் தலைநகர் கோபென்ஹேகன் நகரில் பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இருதரப்பு உறவுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களில் தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ஜெர்மனி தலைநகர் பெர்லினிலிருந்து நேற்று முன்தினம் டென்மார்க் சென்றார். அங்கு நடந்த இந்தியா – நார்டிக் (வடக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு அட்லான்டிக் நாடுகள்) 2வது உச்சி … Read more

கார்கீவ் நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல்.. பூங்கா மீது ரஷ்ய படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள்

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா மீது ரஷ்ய படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மத்திய கார்கிவ் பகுதியில் உள்ள Amusement park மீது ரஷ்ய படைகள் க்ராட் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய படைகளின் இந்த தாக்குதலுக்கு பெண் ஒருவர் படுகாயம்டைந்த நிலையில், 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.