உக்ரைன் ஆலையில் பதுங்கிய மக்களை பத்திரமாக வெளியேற்றும் பணி நீடிப்பு| Dinamalar

ஜபோரிஸ்ஜியா:போரால் சீர்குலைந்து உள்ள உக்ரைனின் மரியுபோலில் உள்ள இரும்பு ஆலையில் பதுங்கியிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி நேற்றும் நீடித்தது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது. உக்ரைனின் தெற்கே உள்ள துறைமுக நகரான மரியுபோலின் பெரும் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் அங்குள்ள இரும்பு ஆலை, உக்ரைன் வீரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்நகரில், நான்கு லட்சம் பேர் வசித்து வந்தனர். போர் துவங்கியதைத் தொடர்ந்து, … Read more

இலங்கை பார்லி.,யில் இன்று ஓட்டெடுப்பு!| Dinamalar

கொழும்பு :பரபரப்பான சூழலில் இலங்கை பார்லிமென்ட் இன்று கூடவுள்ள நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்யப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. அதே நேரத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனையை ஆராய, அமைச்சரவை துணைக்குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று நியமித்துள்ளார். பொருளாதார நெருக்கடி அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே … Read more

டென்மார்க் ராணி மார்கிரேத்தை சந்தித்தார் பிரதமர் மோடி

கோபன்ஹேகன்: ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு டென் மார்க் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மெட்டே பெடரிக்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து  கோபன்ஹேகன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டென்மார்க் வாழ் இந்தியர்களை சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக பிரதமர் மோடிக்கு டென்மார்க் வாழ் இந்தியர்கள் சார்பில் பாரம்பரிய முறைப்படி இசை கருவிகளை வாசித்து வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ரசித்த பிரதமர் மோடி அவர்களுடன் சேர்ந்த டிரம்ஸ் … Read more

குழந்தை தொழிலாளர் தடை சட்டம்: அமெரிக்காவை முந்திய இந்தியா

புதுடில்லி :”குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தை நிறைவேற்றுவதில் அமெரிக்காவை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது,” என, நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். தீர்மானங்கள் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக போராடி வரும் கைலாஷ் சத்யார்த்தி, கூறியதாவது:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை அமல்படுத்தியுள்ளது. அத்துடன் குழந்தை தொழிலாளர்களுக்கு வயது வரம்பையும் நிர்ணயித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தொழிலில் அமர்த்த … Read more

ரஷ்ய அதிபருக்கு புற்றுநோய்? பொறுப்பை ஒப்படைக்க முடிவு!| Dinamalar

மாஸ்கோ:ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும், அதனால் அதிபர் பதவியை தன் நெருங்கிய ஆதரவாளரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 69, உடல் நிலை குறித்து கடந்த சில வாரங்களாகவே பல யூகங்கள் வெளியாகி வந்தன. ஆலோசனை ‘பர்கின்சன்’ எனப்படும் நரம்பு தளர்ச்சி நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. சமீபத்தில் ராணுவ அமைச்சர் செர்ஜி ஷெய்கு உடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது உட்கார … Read more

மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம்… மெலிண்டாவின் க்ரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் பில் கேட்ஸ்!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் கடந்த 1994 ஆம் ஆண்டு மெலிண்டா என்ற பெண்ணை மணந்தார், இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். காதல் மனைவியை பிரிந்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில், மீண்டும் அவருடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார் பில்கேட்ஸ். ’27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு மெலிண்டாவை விட்டு பிரிந்தேன். இந்த … Read more

உக்ரைனில் போர் நிறுத்தம் வேண்டும்:பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்| Dinamalar

கோபன்ஹேகன்:”உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்; பேச்சு வழியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்சுக்கு, மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ௧ம் தேதி இரவு புறப்பட்டு சென்றார். முதலில் ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடி, பெர்லினில் அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கோல்சை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். ஜெர்மனி பயணத்தை முடித்த மோடி சிறப்பு விமானத்தில், … Read more

மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த தளவாடத்தை தாக்கி அழித்ததாக ரஷ்யா அறிவிப்பு

மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த ராணுவ தளவாடத்தை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒடேசா நகருக்கு அருகில் உள்ள இராணுவ விமான நிலையத்தில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட ஆளில்லா பேரக்டர் ரக TB2 ட்ரோன்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. அந்த ராணுவ தளவாடத்தை அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் சிலர் உயிரிழந்ததாகவும் சிலர் காயமடைந்ததாகவும் ஒடேசா … Read more

போருக்கு மத்தியில் ராணுவ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது ரஷ்யா.. உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளை உளவு பார்க்க ஏவியதாக தகவல்

உக்ரைனுடனான போருக்கு மத்தியில், ராணுவ செயற்கைகோளை ரஷ்யா ரகசியமாக விண்ணில் ஏவுயுள்ளது. கடந்த 30ஆம் தேதி, அந்நாட்டின் பிளெசெட்ஸ்க் காஸ்மோடிரோம் ஏவுதளத்தில் இருந்து அங்காரா-1.2 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கைக்காக ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என ரஷ்ய விண்வெளி மையமான ராஸ்காஸ்மாஸ் குறிப்பிட்டுள்ளது. உக்ரைன் மீது போர் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகளை உளவு பார்க்கும் வகையில் ரஷ்யா இந்த செயற்கைக்கோளை ரகசியமாக ஏவியுள்ளதாக … Read more

இந்தியாவின் வளர்ச்சியால் உலகம் பயனடைகிறது – பிரதமர் மோடி பெருமிதம்

கோபன்ஹேகன்:  ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டென்மார்க் சென்றடைந்தார். டென்மார்க் பிரதமர் மெட்டே பெடரிக்சன் விமான நிலையம் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். இதையடுத்து, டென்மார்க் பிரதமர், இந்திய பிரதமர் இருவரும் டென்மார்க் வாழ் இந்தியர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டென்மார்க் பிரதமர் மெட்டே பெடரிக்சன், பிரதமர் மோடி எனது நண்பர். டென்மார்க்கிற்கு உங்களை வரவேற்க முடிந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இன்று உங்களுடன் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்தார். அதன்பின், டென்மார்க் … Read more