நேபாளத்தில் பயணிகள் விமானம் மாயம்; 22 பேர் கதி என்ன ?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்டு: நேபாளத்தில் வானில் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் பயணிகள் விமானம் மாயமானது. இது விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் பயணித்த 22 பேர் நிலை குறித்த முழு தகவல் ஏதுமில்லை . பொக்காரோ என்னுமிடத்திலிருந்து ஜோம்சன் நோக்கி தார் ஏர் விமானம் கிளம்பியது. தலகிரி என்ற மலைப்பகுதிக்கு சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் எங்கு சென்றது என்ற விவரம் இல்லை. … Read more

சர்ச்சில் கூட்ட நெரிசல் – குழந்தைகள் உட்பட 31 பேர் பலி!

சர்ச்சில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் முக்கியமானது நைஜீரியா. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா , பல்வேறு வளங்களைக் கொண்டிருந்த போதிலும், அது ஏழை நாடாகவே நீடிக்கிறது. இந்நிலையில் தென் கிழக்கே உள்ள போர்ட் ஹர்கோர்ட் நகரில் கிங்ஸ் அசெம்பிளி கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆலயத்தில் உணவு வழங்குகிறார்கள் … Read more

அயர்லாந்து நாட்டில் முதன் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டுபிடிப்பு.!

அயர்லாந்து நாட்டில் முதன் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட இந்த நோய், உலகம் முழுவதும் 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. Source link

உக்ரைனுக்கு ஆயுதங்கள் விநியோகம்: பிரான்ஸ்- ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை

கிவ், மே. 29- உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த போருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதல்களை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவி வருகின்றன. இதனால் ரஷிய படைகளுக்கு உக்ரைன் வீரர்கள் கடும் சவால் அளித்தனர். உக்ரைன் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷியாவால் கைப்பற்ற … Read more

சீனாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல்: கனமழை, வெள்ளத்துக்கு 15 பேர் பலி

பீஜிங், சீனாவில் பருவ நிலை மாற்றம் காரணமாக புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்த நிலையில் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. குறிப்பாக இந்த புயல் யுன்னான், புஜியான் மாகாணங்களை புரட்டிப்போட்டு விட்டது. மணிக்கு பல மைல் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. புயல் காரணமாக கடல் கடும் … Read more

இலங்கைக்கு ரஷ்யா அனுப்பிய கச்சா எண்ணெய்யால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறையும் என தகவல்

இலங்கைக்கு ரஷ்யா அனுப்பிய 90 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கிடைத்திருப்பதால் உள்நாட்டில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா அனுப்பிய சரக்குகளை எடுக்க செலுத்த வேண்டிய பணம் இல்லாமல் ஒருமாதம் இந்த டெலிவரிக்காக காத்திருந்தது. இப்போது இந்த சரக்கை இலங்கை பெற்றுக் கொண்டதாகவும், சுத்திகரிப்பு ஆலை விரைவில் இயங்கும் எனவும் இலங்கை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா தெரிவித்துள்ளார். இலங்கை அரசு 72 புள்ளி 6 மில்லியன் டாலர் தொகை செலுத்தி இந்த 90 … Read more

ரகசிய சுரங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிரோன்கள் – எச்சாிக்கை விடுக்கும் ஈரான்

தெஹ்ரான், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 1979 ம் ஆண்டு முதல் பகை இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் கிரீஸ் நாட்டு கடற்பகுதிக்குள் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு சென்ற ஈரானின் கப்பலை அமொிக்கா சிறைபிடித்தது. இதனையடுத்து, கிரீஸ் நாட்டிற்கு சொந்தமான இரண்டு சரக்கு கப்பல்களை ஈரான் அதிரடியாக சிறைப்பிடித்தது. இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சுழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆயுதங்கள் தாங்கிய ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை ஈரான் வெளியிட்டுள்ளது. இது … Read more

Oldest Man in the World: 113வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் மிக வயதான நபர்

Oldest Man in the world: உலகில் மனிதர்களின் சராசரி வயது 72 ஆண்டுகள் என்றாலும், மாறி வரும் வாழ்க்கை முறை, தொடர்ந்து உருவாகி வரும் புதிய நோய்கள் ஆகியவற்றின் காரணமாக அது மேலும் குறைந்து வருகிறது.  உலகின் வயதான மனிதர்: உள்ள பல்வேறு காரணங்களால் மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது மனிதர்களின் சராசரி ஆயுள் 72 ஆண்டுகள் என்றாலும், மாறி வரும் வாழ்க்கை முறை, தொடர்ந்து உருவாகி வரும் புதிய … Read more

உக்ரைனில் சோலார் மின்உற்பத்தி ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.!

உக்ரைனில் சோலார் மின்உற்பத்தி ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் 3 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகளின் மும்முனை தாக்குதலில் உக்ரைன் நகரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகி விட்டன. இந்நிலையில், உக்ரைனின் 2-ஆவது பெரிய நகரமாக கார்கிவ் அருகே உள்ள மெரெபாவில் சோலார் மின்உற்பத்தி ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. Source link

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50.17 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே12 லட்சத்து 22 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 … Read more