இந்தியாவில் தஞ்சமடைய அடைக்கலம் கேட்டாரா ராஜபக்சே?- மத்திய அரசு விளக்கம்

கொழும்பு: மகிந்தா ராஜ பக்சே குடும்பத்துடன் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு தப்பி சென்றுவிட்டதாக வெளியான தகவலை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை அர அரசியலில் அங்கம் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் கூடாரங்களை … Read more

ரஷ்யாவின் அதிநவீன ராணுவ டாங்கியை தாக்கிய உக்ரைன் படைகள் : வெடித்து சிதறிய டிரோன் காட்சிகள் வெளியீடு

கார்கிவ் நகரில் உக்ரைன் ராணுவ வீரர்களால் தாக்கப்பட்ட ரஷ்ய ராணுவ டாங்கி வெடித்து சிதறிய டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ராணுவ டாங்கியை உக்ரைன் வீரர்கள் ராக்கெட் வீசி தாக்கிய நிலையில், அது வெடித்து வானுயர கரும்புகை எழுந்தது. ரஷ்யாவின் T-90M ரக அதிநவீன ராணுவ டாங்கியை தாக்கி அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கார்கிவ் நகரின் வடக்கு மற்றும் வடகிழக்கில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்து கிராமங்களை மீட்டதாகவும் உக்ரைன் கூறியுள்ளது. … Read more

இலங்கையில் 58 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்

கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபக்சே தனது பதவியை  ராஜிநாமா செய்தார். இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். இதனைத் தொடர்ந்து, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. ஆத்திரமடைந்த மக்கள், பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்தனர். ஆளுங்கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகின்றது. இந்தநிலையில், வடரெக்க … Read more

மகிந்த ராஜபக்‌சே இருக்கும் இடம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்

திரிகோணமலை: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியாக, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். இதற்கிடையே, பிரதமர் ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியா தப்பிச்சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி … Read more

மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்துக்கும் இந்தியா அடைக்கலம் கொடுத்ததா

புதுடெல்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, தனது பதவியை திங்கட்கிழமையன்று (2022, மே 9) ராஜினாமா செய்த ஒரு நாள் கழித்து, அவர் தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இலங்கையில் உள்ள இந்திய ஹை கமிஷன் செவ்வாயன்று (மே 10, 2022) சக்திவாய்ந்த மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் தேசபக்தர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்ற உள்ளூர் சமூக ஊடக ஊகத்தை “போலி மற்றும் அப்பட்டமான பொய்” என்று மறுத்துள்ளது. … Read more

21 கி.மீ. தூர நன்னீர் ஏரியை 71 வயதில் நீந்திக் கடந்து மூதாட்டி சாதனை

ஏற்கனவே கின்னஸ் சாதனைகளை படைத்த அமெரிக்காவின் 71 வயது மூதாட்டி, இஸ்ரேலில் உள்ள 21 கிலோ மீட்டர் தூர Sea of Galilee நன்னீர் ஏரியை மிக அதிக வயதில் நீந்தி கடந்தார். அமெரிக்காவின் Maine மாகாணத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் பேட் காலென்ட் சாரெட்டி, இஸ்ரேலில் உள்ள Sea of Galilee நன்னீர் ஏரியை 8 மணி 22 நிமிடங்களில் கடந்தார். Sea of Galilee நன்னீர் ஏரியை மிக அதிக வயதில் கடந்த … Read more

இலங்கையில் போராடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடவில்லை- ராணுவம் மறுப்பு

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கு இடையே நேற்று ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.  இதையடுத்து மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த  சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த … Read more

சீன அதிபருக்கு மூளையில் பாதிப்பு?| Dinamalar

பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு, சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீன அதிபர் ஷீ ஜிங்பிங்,68, கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து எந்த வெளிநாடுகளுக்கும் பயணம் செல்லவில்லை. இந்தாண்டு துவக்கத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரை, அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். இதையடுத்து அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகின. இந்தாண்டு இறுதியில், … Read more

‘‘நல்ல உடல்நலத்துடன் திரும்பும் வரை தனிமை’’- பில்கேட்ஸுக்கு கரோனா தொற்று

நியூயார்க்: பில்கேட்ஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் உலகம் முழுவதும் கரோனா தொற்றுநோய் பாதிப்பில் இருந்து மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக ஏழை நாடுகளுக்கான தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு மருந்து தயாரிப்பாளரான மெர்க்கின் ஆன்டிவைரல் கோவிட்-19 மாத்திரை … Read more

பாகிஸ்தானில் சர்க்கரை ஏற்றுமதிக்கு முழு தடை: ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், சர்க்கரை ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் முழு தடை விதித்துள்ளது என்று அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு, சர்க்கரை ஏற்றுமதியை முழுமையாக தடை செய்து உத்தரவிட்டுள்ளேன். சர்க்கரை கடத்தல் மற்றும் பதுக்கலுக்கு எதிராக கடும் … Read more