வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து – 6 பேர் சடலமாக மீட்பு

வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் நீரில் மூழ்கிய 6 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. காணாமல் போன 20-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெறுவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். டாக்கா புறநகரில் பாயும் சிட்டலக்சயா நதியில் ஏறத்தாழ 50 பேருடன் சென்ற பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதியது. சம்பவத்தில் படகில் பயணித்தவர்கள் தண்ணீர் விழுந்து தத்தளித்தனர். அருகில் இருந்தவைகளை பிடித்து சிலர் உயிர் தப்பிய நிலையில் நீரில் … Read more

தென்கொரியாவில் 3¼ லட்சம் பேருக்கு கொரோனா: வியட்நாமில் 1.41 லட்சம் பேர் பாதிப்பு

சியோல் : ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிரித்து வருகிறது. அந்த வகையில், கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்படி தினசரி பாதிப்பு லட்சக்கணக்கில் பதிவாகி வருவதால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 41 ஆயிரத்து … Read more

வனம்… வாழ்வின் அங்கம் – இன்று உலக காடுகள் தினம்-

மரங்கள் மற்றும் பிற தாவரங்கள் அடர்த்தியாகவும், அதைச்சார்ந்த உயிரினங்களும் வாழும் இடம் காடு. காலநிலை சீராக இருப்பற்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 21ல் உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகைகள் உள்ளன. நிழல், இலை, காய், கனி, மணம், பானம், மழை, குளுமை, துாய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மக்களுக்கு … Read more

ரஷ்ய அதிபர் புதினின் புதிய உத்தரவால் உக்ரைன் போர் அணு ஆயுதப் போராக மாறுமா என்று அச்சம்.!

ரஷ்ய அதிபர் புதினின் புதிய உத்தரவு உக்ரைன் போர் அணு ஆயுதப் போராக மாறுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரழிவு நாளுக்கு ராணுவ கமாண்டர்கள் அணு ஆயுதங்களை விமானத்தில் கொண்டு செல்லும் பயிற்சியை மேற்கொள்ளுமாறு புதின் உத்தரவிட்டு உலகையே அதிர்ச்சிக்கு  ஆளாக்கியுள்ளார். 25 நாட்களாக நடைபெறும் உக்ரைன் யுத்தத்தில் ரஷ்யாவுக்கு பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு 17 ஆயிரம் வீரர்களை இழந்து விட்டது. இந்த அணு ஆயுதப் பயிற்சியின் மூலம் போரின் பேரழிவு நாளை புதின் திட்டமிட்டு இருப்பார் … Read more

உக்ரைன்- ரஷியா போருக்கிடையே போலந்து செல்கிறார் ஜோ பைடன்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக ஹைப்பர்சோனிக் உள்ளிட்ட பயங்கரமான ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக மரியுபோல் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேட்டோ நாடு தலைவர்கள், ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ படைன் அடுத்த வாரம் பெல்ஜியம் செல்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின்போது வருகிற வெள்ளிக்கிழமை நேட்டோ நாடான போலந்துக்கு செல்வார் என வெள்ளை மாளிகை … Read more

கப்பலில் மோதிய படகு 6 பேர் பலி: பலர் மாயம்| Dinamalar

டாக்கா : வங்கதேசத்தில் சரக்கு கப்பல் மீது மோதிய படகு ஆற்றில் மூழ்கிய விபத்தில் ஆறு பேர் பலியாயினர். மாயமான பயணியரை தேடும் பணி தொடர்கிறது. நம் அண்டை நாடான வங்கதேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் உள்ள ஷிடாலக்சயா ஆற்றில் நேற்று 50க்கும் மேற்பட்ட பயணியருடன் ஒரு படகு முன்ஷிகஞ்ச்சென்று கொண்டு இருந்தது.வழியில் சிறிய சரக்கு கப்பல் மீது மோதிய படகு ஆற்றில் மூழ்கியது. தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் மூன்று பெண்கள் உள்பட … Read more

பெல்ஜியத்தில் திருவிழா பேரணியில் தாறுமாறாக ஓடிய கார் பொதுமக்கள் மீது மோதிய கொடூர விபத்தில் 6 பேர் பலி.!

பெல்ஜியத்தில் திருவிழா கூட்டத்திற்குள் புகுந்து தறிக்கெட்டு ஓடிய கார் பொதுமக்கள் மீது மோதிய கொடூர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அதிகாலையில் ஏறத்தாழ 150 பேர் ஒன்று திரண்டு திருவிழா கொண்டாட்டத்தில் பேரணியாக சென்ற போது திடீரென ஒரு கார் தறிகெட்டு ஓடி கூட்டத்திற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. தாறுமாறாக ஓடிய கார் முட்டிய மோதியதில் 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும், பலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் போலீசார் தெரிவித்தனர். 6 பேர் கொடூரமாக உயிரிழந்த நிலையில் … Read more

மரியுபோல் நகரில் சரணடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: உக்ரைன் திட்டவட்டம்

உக்ரைன் மீது ரஷியா 26-வது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சூப்பர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது. பொதுமக்கள் இறந்த வண்ணம் உள்ளனர். அங்கிருந்து வெளியேற முடியாமல் திணறி வருகின்றனர். இந்த நிலையில்தான் உக்ரைன் ராணுவ வீரர்கள் மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, சரணடைய வேண்டும். இல்லையெனில் பேரழிவை சந்திக்க நேரிடும் என ரஷியா … Read more

இம்ரான் கானுக்கு எதிரான தீர்மானம்; மார்ச் 25ல் பாக்.கில் ஓட்டெடுப்பு| Dinamalar

இஸ்லாமாபாத்:“பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் 25ல் ஓட்டெடுப்பு நடத்தப்படும்” என பாகிஸ்தான் பார்லி. சபாநாயகர் ஆசாத் கெய்சர் அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாக்.கில் சமீபகாலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளன. இம்ரான் கானின் கட்சியை சேர்ந்த … Read more

ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் பாக்ஸைட்டை தடை செய்வதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு.!

ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் பாக்ஸைட்டை தடை செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரஷ்யா தனது அலுமினா தேவைகளில் கிட்டத்தட்ட 20 சதவீதத்திற்கு ஆஸ்திரேலியாவை நம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலியா கூறியுள்ளது. ரஷ்ய அலுமினிய நிறுவனமான ருசல் மற்றும் சுரங்க நிறுவனமான ரியோ டின்டோ ஆகியோருக்கும் குயின்ஸ்லாந்து அலுமினிய நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட … Read more