நெதர்லாந்து வெளியுறவு மந்திரி ராஜினாமா

ஆம்ஸ்டர்டாம், காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் இதுவரை சுமார் 62 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து தவிக்கின்றனர். எனவே பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. ஆனால் போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் முற்றிலும் அழிக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இஸ்ரேலுக்கு எதிரான கூட்டு பிரகடனத்தில் 21 நாடுகள் கையெழுத்திட்டன. அதில் நெதர்லாந்தும் ஒன்று. எனவே இஸ்ரேலுக்கு … Read more

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளார்: உக்ரைன் தூதர் தகவல்

புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் பெண்கள் அதிகளவில் உயிரிழ்ந்து வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரதமர் மோடியுடன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். … Read more

கென்யாவில் ராணுவ பயிற்சியின்போது தீ: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து ஒப்புதல்

நைரோபி, கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள வோல்டைகா வனப்பகுதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள ரிப்ட் பள்ளத்தாக்கில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியை நடத்தியது. அப்போது ஏற்பட்ட தீ மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகின. மேலும் பலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வந்தனர். … Read more

இந்திய வான்பரப்பில் பாக். விமானம் பறக்க தடை நீட்டிப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க ஏப்ரல் 30 முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா மீண்டும் பாகிஸ்தான் விமானங்களுக்கான வான்வெளி மூடலை செப்டம்பர் 24-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதேபோல, பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கான வான்வெளி மூடலை செப்.24 வரை நீட்டித்துள்ளது. இது குறித்த தகவல் விமானிகளுக்கான அறிவிப்பில் (NOTAM) தெரிவிக்கப்பட்டு … Read more

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்கே கைதுக்கு ராஜபக்சே கண்டனம்

கொழும்பு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைத்ததையடுத்து அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கவை சிறைச்சாலை மருத்துவமனையில் சென்று சந்தித்து … Read more

அமெரிக்காவில் பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் நேற்று முன்தினம் பேருந்தில் சென்றனர். இந்த பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸை சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியிலிருந்து நியூயார்க் நகரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது. பஃபலோ நகரிலிருந்து கிழக்கே 40 கி.மீட்டர் தொலைவில் வந்த போது அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 49 பேர் லேசான காயங்களுடன் தப்பினர். உயிரிழந்தவர்கள் யார் … Read more

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி வங்காளதேசம் பயணம்

டாக்கா, வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்தது. அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். வங்காளதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் பதவியேற்றார். அவர் ஓராண்டாக வங்காளதேசத்தின் தலைவராக செயல்பட்டு வரும் நிலையில் அந்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தர் அரசு முறை பயணமாக இன்று … Read more

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்தார் அதிபர் டொனால்டு ட்ரம்ப்

நியூயார்க்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலு​வலக இயக்​குன​ராக பணி​யாற்​றும் தனது நெருங்​கிய நண்​பர் செர்​ஜியோ கோரை, இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் நெருங்​கிய நண்​பர் செர்​ஜியோ கோர். இவர் வாஷிங்​டனில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளி​கை​யில் உள்ள அதிபர் அலு​வலக இயக்​குன​ராக உள்​ளார். இவரை இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இது குறித்து சமூக ஊடகத்​தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி​யிருப்​ப​தாவது: செர்​ஜியோ … Read more

இனி அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்ப முடியாது… தபால் துறை முக்கிய அறிவிப்பு – எப்போது முதல்?

India Post Suspends US Parcels: அமெரிக்காவுக்கான அனைத்து வகை தபால் சேவையையும் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதியில் இருந்து தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. 

ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஜாமீன் மறுப்பு: சிறை மருத்துவமனைக்கு மாற்றம்

கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு, ஜாமீன் மறுக்கப்பட்டது. உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச 2022 ஜூலை மாதம் பதவி விலகினார். அவரது எஞ்சிய பதவிக் காலத்தில் ரணில் அதிபராகப் பொறுப்பேற்றார். 2024 செப்டம்பர் வரை அவர் அதிபராக பதவி வகித்தார். இவர் 5 … Read more