ஜப்பானில் பிரதமர், மந்திரிகளின் சம்பளத்தை குறைக்க முடிவு

டோக்கியோ, ஜப்பானில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (வயது 64) தேர்வு செய்யப்பட்டார். பழமைவாதியான இவர் எம்.பி.யாக இருந்த காலகட்டத்திலேயே சிக்கன நடவடிக்கையை வலியுறுத்தி வந்தார். இந்தநிலையில் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு முயற்சி எடுத்து வருகிறார். இதன் முதல்கட்டமாக பிரதமர் மற்றும் மந்திரிகளின் சம்பளத்தை குறைக்கும் திட்டத்தை … Read more

அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்​கர்​களுக்கு வரி வரு​வாயி​லிருந்து டிவிடெண்​டாக தலா ரூ.1.77 லட்சம் வழங்​கப்​படும் என அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். அமெரிக்க அதிப​ராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், இறக்​கும​தி​யாகும் பொருட்​களுக்கு அதை உற்​பத்தி செய்​யும் நாட்​டைப் பொறுத்து 10 முதல் 50% வரை வரி விதித்​தார். நீண்​ட​கால​மாக நில​வும் வர்த்தக பற்​றாக்​குறையை சரி செய்​யவே இந்த நடவடிக்கை என அவர் தெரி​வித்​தார். நாடாளு​மன்ற ஒப்​புதலைப் பெறாமல் மேற்​கொண்ட இந்த நடவடிக்​கையை எதிர்த்து அந்​நாட்டு உச்ச நீதி​மன்​றத்​தில் … Read more

ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு

மாஸ்கோ: நடப்பு 2025-ம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யாவின் மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. அதன்​படி, 2025 முதல் அரை​யாண்​டில் 40,800 பயணி​கள் இந்​தி​யா​விலிருந்து மாஸ்​கோவுக்கு சுற்​றுலா சென்​றுள்​ளனர். காமன்​வெல்த் அமைப்பை (சிஐஎஸ்) சாராத நாடு​களின் பயணி​கள் மாஸ்​கோவுக்கு சுற்​றுலா செல்​வ​தில் இந்​தியா இரண்​டாவது இடத்​தில் உள்​ளது. 2025 ஜனவரி முதல் ஜூன் வரையி​லான கால​கட்​டத்​தில் ஒட்​டுமொத்​த​மாக சிஐஎஸ் நாடு​களுக்கு வெளி​யில் இருந்து 5 லட்​சத்​துக்​கும் … Read more

வடக்கு பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ, வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 12.53 மணியளவில் (இந்திய நேரப்படி) ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 39.64 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 143.51 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இந்த … Read more

வெள்ளை மாளிகையில் கண்களை மூடிய படி அமர்ந்து இருந்த டொனால்டு டிரம்ப்: கலாய்த்த நெட்டிசன்கள்

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இருக்கையில் கண்களை மூடியபடி அமர்ந்து இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் டிரம்ப் இருக்கையில் அமர்ந்து குட்டித் தூக்கம் போட்டுவிட்டதாக கலாய்த்து மீம்களை பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில், டிரம்பின் உடல் நலம் கவலை அளிப்பதாகவும், பணி நேரத்தில் அவரது செயல்பாடு அதிருப்தி அளிப்பதாகவும் டிரம்ப் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை உடல் எடை … Read more

2 நாளாக இருமல்… அமெரிக்காவில் கல்லூரி மாணவி திடீர் மரணம்; தோழிகள் அதிர்ச்சி

நியூயார்க், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏ அண்டு எம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் ராஜலட்சுமி யார்லகட்டா என்ற ராஜி (வயது 23). சமீபத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஆந்திராவை சேர்ந்த இவர், படிப்புக்கு பின்னர், அமெரிக்காவில் வேலை தேடி கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், 2 நாட்களாக அவருக்கு தொடர்ந்து இருமல் இருந்துள்ளது. கடுமையான இருமலுடன், நெஞ்சு வலியும் சேர்ந்து அவரை பாதித்துள்ளது. இந்நிலையில், டெக்சாஸில் உள்ள அவருடைய குடியிருப்பில் அவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். அலாரம் … Read more

ஊழியர்கள் பற்றாக்குறை எதிரொலி; அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து

வாஷிங்டன், அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு குடியேற்ற கொள்கை, பிற நாடுகள் மீது வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. எனவே நாடாளுமன்றத்தில் அவர் கொண்டு வரும் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அரசு துறைகளுக்கான நிதி விடுவிக்கப்படாததால் அனைத்து துறைகளும் முடங்கின. குறிப்பாக … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டை மிரட்டும் `பங்வோங்' புயல் – 14 லட்சம் பேர் வெளியேற்றம்

மணிலா, பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதனால் அங்கு பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடின. சில இடங்களில் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 204 பேர் பலியாகினர். மேலும் பல கோடி ரூபாய் அளவுக்கு பொருட்சேதமும் ஏற்பட்டது. எனவே உள்கட்டமைப்பை சரிசெய்யும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதற்காக நட்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை உதவ முன் வந்துள்ளன. … Read more

வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப்

வாஷிங்டன்: கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் ( இந்திய மதிப்பில் தலா ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், “கூடுதல் வரி விதிப்பை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள். எனது தலைமையின் கீழ், அமெரிக்கா உலகின் மிகவும் பணக்கார நாடாக, மிகவும் மதிக்கப்படும் நாடாக, … Read more

ஆஸ்திரேலியாவில் கார் ஓட்டும்போது செல்போனில் மேப் பார்த்த பெண்ணுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்

சிட்னி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகர சாலையில் மக்ரினா ஸ்டிவக்டாஸ் (வயது 22) என்ற இளம்பெண் காரை ஓட்டிச் சென்றார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் காரை நிறுத்தி வழக்கமான சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் செல்போனில் மேப் பார்த்து காரை ஒட்டிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து காரில் செல்போன் பயன்படுத்தியதாக கூறி அந்த பெண்ணுக்கு சுமார் ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசிடம் … Read more