பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

பாரிஸ், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் சென்றார். அவர் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். இதனை தொடர்ந்து இன்று அவர் பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் நியல் பெரொட்டை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, … Read more

ஈரான் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது. மேலும் அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக … Read more

மத்திய கிழக்கில் பதற்றம்; அமெரிக்க படைகள் வேறு இடத்திற்கு மாற்றம்

வாஷிங்டன், மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், ஈரான் … Read more

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை நேற்று தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. சில தலைவர்கள் (ராணுவ தளபதிகள்) … Read more

தாக்குதலுக்கு பதிலடி: இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய ஈரான்

கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவியுள்ளது ஈரான் ராணுவம். ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு நேரடி பதிலடியாக இந்த மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் முக்கிய … Read more

ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிப்பு: சரமாரியாக தாக்கிய இஸ்ரேல் விமான படை – முழு விவரம்!

தெஹ்ரான்: இஸ்​ரேல் விமானப்​படை நேற்று சரமாரி​யாக குண்​டு​களை வீசி தாக்​குதல் நடத்​தி​ய​தில், ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள், 2 ராணுவ முகாம்​கள் அழிக்​கப்​பட்​டன. இந்த​தாக்​குதலில் ஈரானின் 6 அணுசக்தி விஞ்​ஞானிகள், 3 ராணுவ தளப​தி​கள் உயி​ரிழந்​தனர். அணுஆ​யுதம் தயாரிக்க பயன்​படும் மூலப்​பொருளான யுரேனி​யம்,ஈரானிடம் சுமார் 275 கிலோ வரை இருப்​ப​தாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. இந்த யுரேனி​யம் தற்​போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டப்​பட்டு இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. சுமார் 90 சதவீதம் அளவுக்கு இதை செறிவூட்​டி​னால் அணுகுண்​டு​ தயாரிக்க முடி​யும் … Read more

‘இஸ்ரேலின் அடுத்தகட்ட தாக்குதல் இன்னும் மோசமாக இருக்கும்…’ – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரான் நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், எதிர்வரும் தாக்குதல்கள் இன்னும் மோசமானதாக இருக்கும் என்றும், எனவே விரைவாக ஒப்பந்தத்தை எட்டுமாறும் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சமூக ஊடகமான ட்ரூத் பக்கத்தில் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ஓர் ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புகளை ஈரானுக்கு மீண்டும் மீண்டும் வழங்கினேன். அவர்களிடம் நான், “அதைச் செய்யுங்கள்” என்று வலுவான வார்த்தைகளில் சொன்னேன். … Read more

ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

தெஹ்ரான்: ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். இன்று ( ஜூன் 13) ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி … Read more

ட்ரம்ப் நகர்வுகளுக்கு எதிராக பரவும் கலவரம் – அமெரிக்காவில் நடப்பது என்ன?

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டின் 25 நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது. அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக மெக்ஸிகோ மற்றும் தென்அமெரிக்க நாடுகளை சேர்ந்தோர் நாள்தோறும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த … Read more

இங்கிலாந்தில் பெண் பலாத்காரம்: தொடர் போராட்டத்தில் வன்முறை; 40 போலீசார் படுகாயம்

லண்டன், இங்கிலாந்தின் பாலிமெனா நகரில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வெளிநாட்டைச் சேர்ந்த 3 சிறுவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே புலம்பெயர் தொழிலாளர்களின் வீடு, அலுவலகங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனை கட்டுப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட … Read more