இந்தியாவுடன் மோதல்: பாகிஸ்தான் தூதுக்குழு இங்கிலாந்து பயணம்

லண்டன், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. … Read more

இந்தியாவின் சுபான்ஷு சுக்லா பயணிக்கும் ‘ஆக்சியம்-4’ விண்வெளித் திட்டம் ஒருநாள் தள்ளிவைப்பு

புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, மோசமான வானிலை காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோசமான வானிலை காரணமாக, ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, ஜூன் 10-ம் தேதியில் இருந்து ஜூன் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி ஓடம் ஜூன் 11-ம் தேதி, இந்திய நேரப்படி மாலை … Read more

அமெரிக்காவில் பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கி சூடு.. வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலிய பெண் பத்திரிகையாளர் மீது அமெரிக்க போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற கிரேட்டா தன்பர்க் கடத்தப்பட்டாரா? – இஸ்ரேல் விளக்கம்

காசா: காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான மேட்லீனில் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கூறியுள்ளார். அதன்பின், அவர் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை அதிகாலை காசாவை நோக்கிச் சென்றபோது, ​​மேட்லீன் நிவாரணக் கப்பலை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்தன. அது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய கிரேட்டா தன்பர்க், “இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால், நாங்கள் சர்வதேச நீரில் தடுத்து நிறுத்தப்பட்டு கடத்தப்பட்டுள்ளோம். என்னையும் … Read more

கரோனாவைவிட மோசமான கிருமியை அமெரிக்காவுக்கு கடத்திய சீனா: மூத்த அரசியல் விமர்சகர் எச்சரிக்கை

வாஷிங்டன்: கரோனா வைரஸைவிட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தியிருக்கிறது. உடனடியாக சீனாவுடனான உறவை அமெரிக்கா முறித்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த பெண் ஆய்வாளர் யுன்கிங் ஜியான் (33) பணியாற்றி வருகிறார். அவரும் அவரது காதலர் ஜுன்யாங் லியூவும் சீனாவில் இருந்து ஒரு வகை பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கடந்த 3-ம் தேதி கைது … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்: தீவிரமடையும் போராட்டமும், ட்ரம்ப் சீற்றமும் – நடப்பது என்ன?

கலிபோர்னியா: லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்ற சோதனைக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேசிய ராணுவத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்தது. கார்களுக்கு தீ வைத்து எரித்து, ஒரு பெரிய நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் மூடியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனினும், அமெரிக்க காவல் துறையின் நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்டுள்ள கலவரத்தை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில், “ஒரு காலத்தில் … Read more

தாய்லாந்து பிணைக் கைதி உடல் மீட்பு: இஸ்ரேல் தாக்குதலில் 95 பேர் உயிரிழப்பு

காசா: காசாவில் தாய்லாந்து பிணைக் கைதி ஒருவரை இஸ்ரேல் நேற்று மீட்டது. காசாவில் தொடரும் விமான தாக்குதலில் நேற்று 95 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் 251 பேரை பிணைக் கைதிகளாக காசாவுக்கு கொண்டு சென்றனர். இதனால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட போரில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரும், பாலஸ்தீனர்கள் 54,000 பேரும் உயிரிழந்தனர். இன்னும் 55 பிணைக் கைதிகள் பற்றிய தகவலை தெரிவிக்காமல் ஹமாஸ் தீவிரவாதிகள் … Read more

புதிய கட்சி தொடங்க எலான் மஸ்க் தீவிரம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்க தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு, தொழிலதிபர் எலான் மஸ்க் முழு ஆதரவு அளித்தார். தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இதன்பிறகு அரசு செயல் திறன் என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். அதிபரின் சிறப்பு ஆலோசகராகவும் அவர் … Read more

சிறையில் உள்ள பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்

இஸ்லாமாபாத், ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக்-இ-இன்சாப்(பி.டி.ஐ.) கட்சியின் தலைவருமான இம்ரான் கான்(வயது 72) கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், பக்ரீத் பண்டிகையையொட்டி இம்ரான் கானை விடுதலை செய்யாவிட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த கைபர் பக்துன்க்வா முதல்-மந்திரி அலி அமீன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் … Read more

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன்: சிகிச்சைக்கு உதவுமாறு முதல்-அமைச்சருக்கு பெற்றோர் கோரிக்கை

சார்ஜா, சார்ஜாவில், அரிய வகை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தமிழக சிறுவனுக்கு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் செயலிழந்து வரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, அவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சார்ஜாவில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த ஜகுபர் மற்றும் ஜாஸ்மின் தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஜகுபர் துபாய் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகிய … Read more