11 வயது மாணவனுடன் முறையற்ற உறவு… ஆசிரியையின் அத்துமீறிய செயல்!

World Bizarre News: பெண் ஆசிரியை ஒருவர் தான் பணியாற்றும் தொடக்க நிலை பள்ளியில் பயிலும் 11 வயது மாணவனுடன் முறையற்ற உறவில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பிரேசிலில் வெளுத்து வாங்கும் கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்வு

சாவ் பாலோ, தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு 29 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 39 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 70 பேர் மாயமாகி உள்ளதாகவும் சிவில் … Read more

என்னை கொலை செய்ய பாகிஸ்தான் ராணுவம் சதி – இம்ரான்கான்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இம்ரான்கான் சிறையில் இருந்தபடி இங்கிலாந்து பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- எனக்கு எதிராக ராணுவம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. இப்போது என்னை கொலை செய்வதுதான் அவர்களுக்கு மிச்சம். எனக்கோ அல்லது என் மனைவிக்கோ (புஷ்ரா பீபி) ஏதேனும் நேர்ந்தால், ராணுவ தளபதி அசிம் முனீர் தான் பொறுப்பு என்று நான் பகிரங்கமாக … Read more

பிரேசிலில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 29 பேர் பலி

பிரேசிலியா, தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 60 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட … Read more

“முதலில் ரேபரேலியில் வெல்லுங்கள்” – ராகுலை விமர்சித்து காரி கேஸ்பரோவ் பதிவு

மாஸ்கோ: முதலில் ரேபரேலியில் வெல்லுங்கள் அப்புறம் செஸ் டாப் வீரரை வெல்லலாம் என்று உலகின் நம்பர் 1 செஸ் வீரராக இருந்த ரஷ்யர் கேரி காஸ்பரோவ் சமூகவலைதளத்தில் பதிவிட்டதும், பின்னர் அதனை விளக்கி மேலுமொரு பதிவைப் பகிர்ந்ததும் கவனம் பெற்றுள்ளது. காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (சனிக்கிழமை) உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார். அது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் … Read more

இந்தியர்களுக்கு வெளிநாட்டு வேலை மீதான மோகம் குறைந்து வருகிறது – ஆய்வறிக்கையில் தகவல்

பாஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற புகழ்பெற்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் ‘சர்வதேச புலம் பெயர்வுகளின் போக்குகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 188 நாடுகளில் 1.5 லட்சம் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு அடிப்படையில் ஒரு அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ள இந்தியர்களின் விகிதம் 2018-ல் 78 சதவீதமாக இருந்து 2023-ல் 54 சதவீதமாக சரிந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. இவர்களில் 59 சதவீதம் பேர் தாய்நாட்டின் … Read more

25 கன்னிப் பெண்கள்… இந்த காலத்திலும் அந்தப்புரம் – வடகொரிய அதிபரின் சேட்டை!

Kim Jong Pleasure Squad: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் வருடந்தோரும் 25 கன்னிப் பெண்களை தேர்வு செய்து தனது இன்பத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கடும் வெப்பத்தினால் 100 பேர் மரணம்… பால் விலையை மிஞ்சிய ஐஸ் விலை..!!

Mali Heatwave: இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் வெப்பம் அதிகரித்து வருகிறது. ஆனால் ஆப்பிரிக்காவின் மாலியில் ஏற்பட்டுள்ள வெப்பம் வரலாறு படைத்துள்ளது. சாதனை அளவை எட்டியுள்ள வெப்ப அலை காரணமாக, மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஐ.நா. பொதுச் சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்: இந்திய கண்டனம்

புதுடெல்லி: எப்போதுமே சந்தேகத்துக்குரிய போக்கினையே கொண்ட நாடாக பாகிஸ்தான் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், அந்நாட்டின் ஐ.நா.வுக்கான நிரந்தர தூதுவரின் தீங்கிழைக்கும் அநீதியான கருத்துக்களை இந்தியா சாடியுள்ளது. பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், ஐ.நா பொதுச்சபையில் ‘அமைதி கலாச்சாரம்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர், குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்தி ராமர் கோயில் ஆகியவைகளை உள்ளடக்கி பேசியதற்கு இந்தியா இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது. ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி … Read more

சீனாவில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு

பீஜிங், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஜோவு நகர நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் அங்கு சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் அடுத்தடுத்து பாய்ந்தன. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பள்ளத்தில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணியில் அவர்கள் துரிதமாக செயல்பட்டனர். அதன்படி 30-க்கும் மேற்பட்டவர்கள் … Read more