Putin on the brink of victory in the Russian presidential election | ரஷ்ய அதிபர் தேர்தல் வெற்றி விளிம்பில் புடின்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில், விளாடிமிர் புடின் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால், மீண்டும் அவரே அதிபராவது உறுதியாகியுள்ளது. ரஷ்யாவின் தற்போதைய அதிபராக விளாடிமிர் புடின், 71, உள்ளார். இவரது பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அங்கு கடந்த 15ம் தேதி துவங்கி, மூன்று நாட்களுக்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிகோலாய் கரிடோனோவ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், நாடு முழுதும் ரஷ்ய … Read more

Trumps obsession with campaigning is bloodshed if I lose | நான் தோற்றால் ரத்தக்களரி தான் பிரசாரத்தில் டிரம்ப் ஆவேசம்

வாஷிங்டன்: ”அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெறவில்லை எனில், நாடே ரத்தக்களரியாக மாறும்,” என, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை எதிர்த்து, குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், ஒஹியோ மாகாணத்தில் உள்ள வாண்டாலியாவில், டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நவம்பர் 5ம் தேதியை மறந்துவிடாதீர்கள். நம் நாட்டின் வரலாற்றில் மிக … Read more

அமெரிக்காவில் வினோதம்… கிரீன் ஹவுஸ் வாயுக்களை கடத்திய நபர் மீது கடும் நடவடிக்கை!

போதை பொருட்கள், ஆள் கடத்தல் போன்ற சம்பவங்களுக்காக பலர் தண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அமெரிக்காவில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துள்ளது.

மூன்று மாதத்தில் 4வது முறை.. ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

கிரின்டவிக் (ஐஸ்லாந்து): ஐஸ்லாந்தின் கிரிண்டவிக் நகரின் அருகே உள்ள எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் இருந்த நிலையில் நேற்று வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து வெளிப்படும் எரிமலை குழம்பு நாலாபுறமும் வழிந்தோடுகிறது. எரிமலையில் இருந்து வெளிப்பட்ட புகை விண்ணை முட்டும் அளவுக்கு பரவியது. கடந்த மூன்று மாதங்களில் 4வது முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள இரண்டு மலைகளுக்கு இடையில் சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு பூமியில் பிளவு ஏற்பட்டதாக … Read more

அமெரிக்க அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக் களரி ஏற்படும்: டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டிரம்ப் தொடங்கியுள்ளார். அந்த வகையில், ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப், தன்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் என்று எச்சரித்தார். டொனால்டு டிரம்ப் பேசுகையில், “அமெரிக்கா வரலாற்றில் அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான … Read more

"பாராமுகம்" காட்டும் மெட்டா! குற்றம் சாட்டும் மெட்டாவின் முன்னாள் உளவியல் ஆலோசகர்!

Allegations On META : இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பாக “பாராமுகம்” காட்டுவதாக நிறுவனம் மீது குற்றம் சாட்டிவிட்டு வேலையில் இருந்து விலகிய உளவியலாளர்…

பாகிஸ்தான் சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 7 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். முதலில் சோதனைச் சாவடியை நோக்கி முன்னேறிய பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி, அவர்களை முன்னேற விடாமல் தடுத்தனர். பின்னர், பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை சோதனைச்சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தனர். தற்கொலை தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால் சோதனைச்சாவடியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதன்பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை … Read more

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்ளும் தேர்தல் முறைகேடுகளும்! கட்சிகளுக்கு ஏற்ப மாறும் காட்சிகள்!

EVM And Allegations: பாகிஸ்தானில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்திருந்தால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்காது என்று இம்ரான் கான் கூறினார்.

நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்: 4 அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் பலி

அபுஜா, தெற்கு நைஜீரியாவில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட பேரிடர் அழைப்பின் போது நான்கு அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பாதுகாப்பு தலைமையக செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் துகுர் குசாவ் கூறுகையில், “எண்ணெய் வளம் மிக்க, ஆற்றங்கரை டெல்டா மாநிலத்தில் வியாழன் அன்று போமாடி கவுன்சில் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், அமைதி காக்க அனுப்பப்பட்ட ராணுவ வீரர்கள், சில சமூக இளைஞர்களால் சூழப்பட்டு கொல்லப்பட்டனர். … Read more

There will be bloodshed if I am not chosen as president: Trump warns | அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும்: டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் என குடியரசு கட்சி வேட்பாளர் என கருதப்படும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட உள்ளார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஓஹியோ மாகாணத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்கா வரலாற்றில் தேர்தல் நடக்கும் … Read more