Indian killed in missile attack in Israel | இஸ்ரேலில் தாக்குதல்: கேரளாவை சேர்ந்தவர் பலி

ஜெருசலேம்: கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல்-காசா இடையே போர் நடந்து வருகிறது. போரை நிறுத்தக் கோரி பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில், வடக்கு இஸ்ரேலின் மார்காலியோட் பகுதியில் ஒரு விவசாய நிலப் பகுதியில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். இவர்கள் மூவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஜெருசலேம்: கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல்-காசா … Read more

இந்தோனேசியாவின் பாலி தீவில் முதல் இந்து அரசு பல்கலைக்கழகம்: அதிபர் ஜோகோவி விடோடோ ஒப்புதல்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பாலி தீவில் செயல்பட்டு வரும் இந்து தர்ம அரசு கல்வி நிறுவனத்தை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தி அதிபர் ஜோகோவி விடோடோ ஆணையிட்டுள்ளார். இந்தோனேசியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். எனினும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பாலி தீவில் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்கின்றனர். உலகளவில் சுற்றுலாமையமாக விளங்கும் இந்த பாலித்தீவில் கடந்த 1993-ம் ஆண்டு இந்து மத ஆசிரியர்களால் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 1999-ம்ஆண்டு இந்து மத அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. பாலி … Read more

பாதகமே சில சமயங்களில் சாதகமாக மாறும்! கோவிட் கால குழந்தைகளுக்கு குறைந்த பிரச்சனை!

Astonishing Alergy Study : COVID-19 தொற்றுநோய்களின் போது பிறந்த குழந்தைகளில் பல உயிரியல் மாற்றங்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன…

ஜெர்மனி: முதியோர் காப்பகத்தில் தீ விபத்து; 4 பேர் பலி

பெர்லின், ஜெர்மனி நாட்டின் மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்-ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்று உள்ளது. செவிலியர்கள் பணியாற்ற கூடிய இந்த காப்பகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், 4 பேர் பலியாகி உள்ளனர். 58 பேர் காயமடைந்து உள்ளனர். தீ விபத்துக்கான … Read more

அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை: பிரான்ஸ் நாட்டில் மசோதா நிறைவேற்றம்

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடு ஆகியுள்ளது பிரான்ஸ். திங்கள்கிழமை அன்று பிரான்ஸ் நாடாளுமன்ற மேலவையில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் இதற்கு ஆதரவாக 780 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பங்கினர் அல்லது 512 உறுப்பினர்கள் ஆதரவு இதற்கு தேவையானதாக இருந்தது. இந்நிலையில், 780 பேர் இதற்கு … Read more

அர்ஜென்டினாவின் ஒரே தேசிய ஊடகம் மூடல்

பியூனஸ் அயர்ஸ், எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அர்ஜென்டினாவில் இருந்த ஒரே தேசிய ஊடகத்தை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அர்ஜென்டினாவில் உள்ள ஒரே தேசிய ஊடக நிறுவனம் டெலம். ஆனால் சமீபகாலமாக இதன் மீது, முன்னாள் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னரின் கொள்கைகளை ஊக்குவித்து அவரது முகவராக செயல்படுவதாகவும், ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. எனவே இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டது. இந்தநிலையில் அரசாங்கத்தின் ஒரே தேசிய ஊடகமான டெலமை … Read more

வாஷிங்டனில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக முதல் வெற்றியை பெற்றார் நிக்கி ஹாலே

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல் அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக ஓட்டு செல்வாக்கு பெரும் நபர் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். தற்போது டொனால்ட் டிரம்ப், நிக்கி … Read more

காசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: 90 பேர் பலி

காசா, இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இந்த போர் சுமார் 5 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே போரை நிறுத்துவதற்கு கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் சமரச முயற்சி செய்தன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்தநிலையில் காசாவை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியாகினர். மேலும் 177 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதன்மூலம் இந்த போரில் பலியான பாலஸ்தீனியர்களின் … Read more

நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் சாத்தியம் – ஹமாஸ் அறிவிப்பு

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலியாக சிலர் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், பாலஸ்தீனர்களில் மொத்தம் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது. மேலும் 69 ஆயிரத்திற்கும் … Read more

அபுதாபி இந்து கோயில்… ஒரே நாளில் 65,000 பேர் தரிசனம்..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் கோவிலுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.