ஏழு ரூபாய் மாத வாடகைக்கு வீடு ரெடி! 500 ஆண்டுகளாக வாடகை அதிகரிக்கவே இல்லை!

No Rent Hike For 500 Years: செலவு பற்றி கவலைப்படத் தேவையில்லாத ஊர் இது! 500 ஆண்டுகளாக,  வீட்டு வாடகை உயராத அதிசய காலனி…

ரஷ்ய அதிபராக 6 ஆண்டுகளில் ஒரு மில்லியன் டாலர் சம்பாதித்த விளாதிமிர் புதின்

மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக 6 ஆண்டு காலத்தில் விளாதிமிர் புதின் 1 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே சம்பாதித்துள்ளதாக தேர்தல் ஆணைய ஆவணங்களை மேற்கோள்காட்டி நியூஸ் வீக் தெரிவித்துள்ளது. வரும் மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தான் சம்பாதித்த சொத்துகள் குறித்தவிவரங்களை ரஷ்ய தேர்தல் ஆணையத்திடம் புதின் தாக்கல் செய்துள்ளார். அதில், ரஷ்ய அதிபராக 2018 முதல் 2024 வரையிலான 6 ஆண்டு காலத்தில் 67.6 மில்லியன் ரூபிள் அதாவது 7,53,000 டாலர் புதினுக்கு வருவாயாக … Read more

தனி ராணுவம், 300 சொகுசு கார்கள், ஜெட் விமானங்கள் கொண்ட சுல்தான் இப்ராஹிம் மலேசியா மன்னராக பதவியேற்பு

கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மன்னராகஇப்ராஹிம் இஸ்கந்தார் (65) நேற்று பொறுப்பேற்றார். மலேசியாவில் 13மாகாணங்கள் உள்ளன. இவற்றில் 9மாகாணங்களில் அரச குடும்பங்கள்உள்ளன. இந்த அரச குடும்பங்களில் இருந்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில், மலேசியாவுக்கான மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஜோஹர் மாகாணத்தின் சுல்தானாக பொறுப்பு வகித்துவந்த இப்ராஹிம் இஸ்கந்தார், தற்போது மலேசியாவின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அவருக்கு முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.மலேசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இப்ராஹிம் இஸ்கந்தார் … Read more

பாகிஸ்தானில் பொது தேர்தல் வேட்பாளர் சுட்டு கொலை; உதவியாளர்கள் 4 பேர் காயம்

காபூல், பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இவருக்கு, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவு வழங்கப்பட்டு இருந்தது என கூறப்படுகிறது. அவருடன் இருந்த 4 உதவியாளர்களும் சுடப்பட்டனர். இதில், ஜெப் கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அதில், பலனின்றி உயிரிழந்து … Read more

இன்சூரன்சு தொகைக்காக மகன் கொலை…!! ரூ.7 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல்; இந்திய தம்பதிக்கு 33 ஆண்டு ஜெயில்

லண்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து தம்பதி ஆரத்தி தீர் (வயது 59) மற்றும் அவருடைய கணவர் கவல்ஜித்சின்ஹ ராய்ஜடா (வயது 35). இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ஹான்வெல் பகுதியை சேர்ந்தவர்கள். கடந்த 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.7,393 கோடி மதிப்பிலான கொக்கைன் என்ற போதை பொருளை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். இதுதவிர, இவர்கள் இருவரும் 2017-ம் ஆண்டில் குஜராத்தில் இரட்டை படுகொலைகளை செய்துள்ளனர். இந்த தம்பதியின் தத்தெடுத்த மகனான … Read more

மெக்சிகோவில் பஸ்-லாரி மோதல்; 19 பேர் பலி

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில், சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. அதிவிரைவாக செல்லுதல், வாகனங்களின் தரமற்ற நிலை அல்லது களைப்படைந்த ஓட்டுநர் ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படுகின்றன. சரக்கு லாரிகள் விபத்தில் சிக்குவதும் அந்நாட்டில் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், மெக்சிகோவின் வடமேற்கே கடந்த செவ்வாய் கிழமை சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பஸ் மற்றும் லாரி மோதி கொண்டதில், 19 பேர் பலியாகி உள்ளனர். 22 பேர் காயமடைந்தனர். அந்த பஸ் ஜலிஸ்கோ மாகாணத்தின் குவாதலஜரா நகரில் இருந்து சினலோவா … Read more

ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு

மேட்ரிட், 400 கோடி ரூபாய் முதலீட்டில் ரோக்கா நிறுவனம் பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும், பெருந்துறையிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் உறுதியளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் 29.1.2024 அன்று தொழில் … Read more

மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் இப்ராகிம் பதவியேற்பு

கோலாலம்பூர், மலேசியாவின் 17-வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் பதவியேற்றார். கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் அவரது பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. மலேசியாவின் பிற தலைவர்கள் முன்னிலையில், சுல்தான் இப்ராகிம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, பதவி பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திட்டார். அதே சமயம் நாட்டின் துணை தலைவராக பேராக் மாகாணத்தின் ஆட்சியாளரான சுல்தான் நஸ்ரின் ஷா, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

Imran gets 14 years in jail in another corruption case | மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 14 ஆண்டு சிறை

இஸ்லாமாபாத், கருவூல மோசடி வழக்கில் ஏற்கனவே சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில், நேற்று முன்தினம் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கருவூல மோசடி தொடர்பான மற்றொரு வழக்கில் அவருக்கும், அவருடைய மனைவிக்கும், தலா 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 2018 — 2022 வரை பிரதமராக இருந்தவர், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் … Read more

300 cars, private army, planes: Malaysias new king has so much! | 300 கார், தனி ராணுவம், விமானங்கள்: இவ்வளவும் மலேசிய புதிய மன்னர் வைத்திருக்கிறாராம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்று கொண்ட சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், 300 கார்கள், தனி ராணுவம் மற்றும் ஜெட் விமானங்கள் வைத்திருக்கிறார். மலேசியா நாட்டின் அதிகாரப்பூர்வமாக பிரதமர் இருந்தாலும், அங்கு இன்னும் மன்னர் அதிகாரம் நீடித்து வருகிறது. இந்நாட்டின் நீதிமன்றங்கள், போலீசார் ஆகியவற்றால் கொடுக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதற்கும் மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்நிலையில் மலேசியாவின் 17வது புதிய மன்னராக அரச குடும்பத்தை சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் … Read more