Crude oil tanker hijacking in the Gulf of Oman | ஓமன் வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் கடத்தல்

துபாய், ஈராக்கில் இருந்து துருக்கிக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற சரக்கு கப்பல், ராணுவ உடை அணிந்த அடையாளம் தெரியாத நபர்களால், ஓமன் வளைகுடாவில் வைத்து நேற்று கடத்தப்பட்டதாக, பிரிட்டன் ராணுவ ஆலோசனை குழு எச்சரித்துள்ளது. மேற்காசிய நாடான ஈராக்கின் பஸ்ரா நகரத்தில் இருந்து, துருக்கியின் அலியாகாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு, செயின்ட் நிகோலஸ் என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. மத்திய கிழக்கு கடல் பகுதியில் உள்ள ஓமன் … Read more

Worlds Most Valuable Company ‛Microsoft: Overtakes Apple | உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் ‛மைக்ரோ சாப்ட் : ஆப்பிளை முந்தியது

வாஷிங்டன்: உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமை மைக்ரோசாப்ட் நிறுவனம் தட்டிச்சென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டது. வாஷிங்டனில் உள்ள ரெட்மாண்டில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாகும். இது கணினி மென்பொருள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், பெர்சனல் கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்கிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 2.888 டிரில்லியன் டாலராக 1.5 சதவீத வளர்ச்சி … Read more

ஆப்கனில் 6.1 ரிக்டரில் நிலநடுக்கம்: டெல்லி வரை அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 2:50 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு, டெல்லி வரை உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியுற்றனர். நிலநடுக்கத்துக்கான தேசிய மையத்தின் தகவல்படி, ஆப்கானிஸ்தானில் இன்று வியாழக்கிழமை மதியம் 2:50 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லி, காசியாபாத், நொய்டா, பரிதாபாத், குருகிராம், காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 என பதிவாகியுள்ளது. இந்தியா மட்டும் இன்றி பாகிஸ்தானில் … Read more

மாலத்தீவில் வெளிநாட்டு தலையீட்டை உறுதியாக எதிர்க்கிறோம்: சீனா

பெய்ஜிங்: மாலத்தீவில் வெளிநாட்டு தலையீட்டை உறுதியாக எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், மாலத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனா ஒத்துழைக்கும் என்பது உள்பட இரு நாடுகளுக்கு இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் கருத்து தெரிவித்ததை அடுத்து, அந்நாட்டுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சாரம் நமது நாட்டில் தீவிரமடைந்தது. இந்நிலையில், சீன ஆதரவாளராகக் கருதப்படும் மாலத்தீவு அதிபர் முகம்மது மொய்சு … Read more

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: முதலிடத்தில் 6 நாடுகள்; எந்த இடத்தில் இந்தியா?

புதுடெல்லி: 2024-ம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலான ‘ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’ வெளியிட்டுள்ளது. இதன்படி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளும், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளும் முதலிடம் பிடித்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டு வருகிறது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 101, 102, 103, 104 ஆகிய இடங்களைப் … Read more

‘உலக அளவில் டிசம்பர் மாதம் மட்டும் கோவிட் தொற்றுக்கு 10,000 பேர் உயிரிழப்பு’

வாஷிங்டன்: உலக அளவில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இது குறித்து கூறியது: “கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 50 நாடுகளில், குறிப்பாக ஐரோப்பா … Read more

Maldives President meets Chinese President as wave of protests mounts in India | இந்தியாவில் அதிகரிக்கும் எதிர்ப்பு அலை: சீன அதிபருடன் மாலத்தீவு அதிபர் சந்திப்பு

பீஜிங்: மாலத்தீவுகள் நிர்வாகத்துக்கு எதிராக, நம் நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் முஹமது முய்சு, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை நேற்று சந்தித்து பேசினார். தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில், நம் அண்டை நாடான சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு உடைய முஹமது முய்சு, புதிய அதிபராக தேர்வானார். சமீபத்தில் மாலத்தீவுகளைச் சேர்ந்தசில அமைச்சர்கள், நம் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா … Read more

பன்னுன் விவகாரம் | நிகில் குப்தா வழக்கறிஞருக்கு ஆதாரங்களை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு

புதுடெல்லி: அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நிகில் குப்தா என்ற இந்தியர் மூலம் இந்திய அதிகாரி முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதரங்களை வழங்க அமெரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செக் குடியரசில் இருந்து நிகில் குப்தாவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கின் ஆதாரங்களை ஒப்படைக்கும் அவரது கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு இந்தக் கடிதத்தை சமர்ப்பிப்பதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் … Read more

jn1 coronavirus, Tedros Adhanom Ghebreyesus: Death due to covid : World Health Organization information | கோவிட் பாதிப்பால் மரணம்: உலக சுகாதார மையம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: கோவிட் பாதிப்பால் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார மைய தகவல் தெரிவிக்கிறது.இது தொடர்பாக இந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் கூறியிருப்பதாவது: கோவிட் ஜே.என்-1 பாதிப்பு மிக கவலை அளிக்கிறது. கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்டவை அவசியம் என வலியுறுத்தினோம். விடுமுறை காலம் மற்றும் மக்கள் அதிகம் கூடுதல், … Read more

சமூக ஊடக வதந்தியால் மூண்ட கலவரம்: பப்புவா நியூ கினியா நாட்டில் 15 பேர் பலி

மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியா நாட்டில் அரசு ஊழியர்கள், காவலர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளக்குறைப்பு செய்யப்போவதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து போலீஸார் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கலவரம் வெடித்தது. இதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய கண்டத்தில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டில், அரசு ஊழியர்கள், காவலர்கள் பொதுப்பணித்துறை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளக்குறைப்பு செய்யப்போவதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து போலீஸார் மற்றும் … Read more