இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 14 பேர் பலி

காசா, இஸ்ரேல் மீது காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நீண்ட முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் காசா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர், அதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் … Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை; இந்திய வம்சாவளி நபருக்கு சிறை தண்டனை

சிங்கப்பூர், சிங்கப்பூரில் வசித்து வருகிறார் 27 வயதான மார்க் ஜஸ்டின் லாண்ட்ரியோ சந்திரமோகன். இவர் இந்திய வம்சா வளியாவார். இவர் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு 16 வயது பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறித்தியதாகவும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை நாடினார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தவிர, சந்திரமோகன் மேலும் இருவருடன் பாலியல் தொல்லை கொடுத்து … Read more

துருக்கியில் உக்ரைன் – ரஷியா இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை: போர் நிறுத்தம் சாத்தியமா?

இஸ்தான்புல், ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு ஏற்பட்ட போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது.போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா … Read more

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ஆக பதிவு

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.19 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில … Read more

உக்ரைனின் ஆபரேஷன் சிலந்தி வலை… கதிகலங்கி போன ரஷ்யா… ஆனால் டிரம்ப் ஷாக் ஆனது ஏன்?

Ukraine Drone Attack: ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலால் அமெரிக்கா ஷாக் ஆகி உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம். 

பாலஸ்தீன ஆதரவு: அமெரிக்க எம்ஐடி-யில் இந்திய வம்சாவளி மாணவி மேகா மீதான நடவடிக்கையும் பின்னணியும்

நியூயார்க்: காசா போரை கண்டித்து உரையாற்றியதால், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி – MIT) படிக்கும் இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்ஐடி-யின் 2025-ம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி வியாழக்கிழமை (மே 29) மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற ‘ஒன்-எம்ஐடி’ (OneMIT) தொடக்க விழாவில் கலந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் உரையாற்றினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடியதற்காக தனது சகாக்களைப் பாராட்டிய … Read more

“நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும்” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே இன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார். நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா, ராணுவ நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற சமாதான … Read more

அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேல் ஆதரவு பேரணியில் பதற்றம்: மக்கள் மீது தீ வைத்து எரிக்க முயற்சி

நியூயார்க்: அமெரிக்காவின் கொலராடோவில், காசாவில் ஹமாஸ் பிடித்துவைத்துள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர கூடியிருந்த மக்கள் குழு மீது ஒரு நபர் திரவத்தை வீசி, அவர்கள் மீது தீயை பற்றவைத்துள்ளார். இதில் ஆறு பேர் காயமடைந்தனர். இதுகுறித்து முகமது சப்ரி சோலிமான் எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலராடோவின் போல்டரில் காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர நடத்தப்பட்ட பேரணியின் போது, ஒரு நபர் மக்கள் மீது திரவத்தை வீசி தீவைத்துள்ளார். இந்த சம்பவத்தின்போது அவர் “பாலஸ்தீனத்தை விடுவிப்போம்” … Read more

வங்கதேசம் வெளியிட்ட புதிய கரன்சியில் முஜிபுர் ரகுமான் படம் நீக்கம்

தாகா: வங்கதேசம் வெளியிட்டுள்ள புதிய கரன்சி நோட்டுகளில் அந்நாட்டின் தேசத் தந்தை முஜிபுர் ரகுமான் படம் நீக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் வழக்கமாக அந்நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான் படம் இடம் பெற்றிருக்கும். இவரது மகள் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வங்கதேச சுதந்திரத்தின் போது உயிரிழந்த ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது. … Read more

ஹமாஸ் தலைவர் முகமது சின்வாருக்கு இஸ்ரேல் படைகள் முடிவு கட்டியது எப்படி?

ஜெருசலேம்: ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் மற்றும் முகமது சபோனே ஆகி யோரை கொன்றது தொடர்பான 3டி வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலிய பாது காப்பு படை கூறியுள்ளதாவது: காசாவின் கான் யூனுஸ் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு அடியில் ஒரு பதுங்கு குழி கட்டமைப்பு இருப்பதை இஸ்ரேலிய ராணுவம் கண்டுபிடித்தது. ஹமாஸ் போர் கட்டுப்பாட்டு மையமாகவும் அது செயல்பட்டு வந்தது. நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாக சென்று அந்த மையத்தை அடையும் வழியும் … Read more