ரஷியா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் – 21 பேர் பலி

மாஸ்கோ, உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 676வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, உக்ரைனின் கீவ், டின்புரொ, கார்கிவ், லிவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை ரஷியா தாக்குதல் நடத்தியது. போர் விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் … Read more

இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள துணை மாவட்டமான அபேபுராவிலிருந்து வடகிழக்கே 162 கிலோமீட்டர் (101 மைல்) தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் நடந்தது. இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்று கூறியது, … Read more

இஸ்ரேல்-ஹமாஸ் போர் "இன்னும் பல மாதங்களுக்கு" தொடரும் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

காசா, பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரம் மீது இஸ்ரேல் கடந்த அக்டோர் மாதம் 7-ந்தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. போர் தொடங்கிய சமயத்தில் வடக்கு காசாவை குறிவைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் பின்னர் தெற்கு காசாவை நோக்கி தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக மத்திய காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும், வான்வழியாகவும் தீவிரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த ஆக்ரோஷமான தாக்குதல்களால் காசாவில் … Read more

Born in New Zealand 2024 New Year: Peoples Celebration. | நியூசிலாந்தில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு: கேக் வெட்டி மக்கள் கொண்டாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆக்லாந்து: உலகில் பசுபிக் தீவில் உள்ள கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு(2024) பிறந்தது. தொடர்ந்து நியூசிலாந்திலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. மக்கள் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்துயும், கேக் வெட்டியும் புத்தாண்டை வரவேற்றனர். 2024 ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க உலக முழுவதும் மக்கள் தயாராகி உள்ளனர்.பசிபிக் தீவான கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு முதலில் பிறந்தது. அதைத் தொடர்ந்து, டோங்கா, சமோவா, நியூசிலாந்திலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. உடனடியாக மக்கள் பட்டாசுகளை வெடித்தும், … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கானின் 2 வேட்புமனுக்களும் ரத்து

லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார். இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் … Read more

பாலியல் புகார்; நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேன் குற்றவாளி – காத்மாண்டு கோர்ட்டு அறிவிப்பு

காத்மாண்டு , நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சேன். இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார். இந்த நிலையில் சந்தீப் லமிச்சேன் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அந்த புகாரில், கடந்த ஆகஸ்ட் … Read more

பலுசிஸ்தானில் 3 தாக்குதல்கள்: பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு

குவெட்டா: பாகிஸ்தானின் தென்மேற்கில் அமைந்துள்ள பலுசிஸ்தான், அந்நாட்டின் மிகப்பெரிய மாநிலம் ஆகும். இங்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற அமைப்பு பல ஆண்டுகளாக தனி நாடு கேட்டு போராடி வருகிறது. இந்நிலையில் பலுசிஸ்தானில் நோஷ்கி, துர்பத், புளேடா ஆகிய 3 இடங்களில் நடந்த தாக்குதல்களுக்கு பிஎல்ஏ பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஎல்ஏ போராளிகள் ஸ்னைபர்கள் மற்றும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி நோஷ்கியின் பால்கானி, கேஷாங்கி பகுதியில் … Read more

ஹமாஸ் சுரங்கப்பாதையை அழித்தது இஸ்ரேல்: கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் உயிரிழப்பு

ஜெருசலேம்: இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த1,200 பேர் உயிரிழந்தனர்.மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்து தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை நடந்த இஸ்ரேல் ஹமாஸ் … Read more

புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும்

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக மக்கள் தொகையில் கடந்த ஓராண்டில் 7 கோடியே 50 லட்சம் பேர் அதிகரித்தனர். வரும் புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும். உலகம்முழுவதும் குழந்தை பிறப்பு வினாடிக்கு 4.3 ஆகவும், இறப்பு 2 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மக்கள் தொகையில் கடந்த ஓராண்டில் 17 லட்சம் பேர் அதிகரித்தனர். புத்தாண்டில் அமெரிக்க மக்கள் தொகை 33 … Read more