ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முடிவு நிறுத்திவைப்பு

லண்டன்: அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே (வயது 56). இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அசாஞ்சே, கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். … Read more

போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த ஹமாஸ்; முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்ததாக குற்றச்சாட்டு

காசா முனை, காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை … Read more

6 காலாண்டுகள் வீழ்ச்சிக்கு பிறகு 4.5 சதவீத வளர்ச்சி.. ஏறுமுகத்தில் இலங்கை பொருளாதாரம்

கொழும்பு: இலங்கை அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள தொடங்கியது. வெளிநாடுகளிடமிருந்து பெற்றிருந்த கடன் தொகை கடுமையாக உயர்ந்தது. மிக முக்கிய வருவாய் வரக்கூடிய சுற்றுலாத் துறையும், கொரோனா காலகட்டத்தில் முடங்கியது. இதனால் இலங்கை கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த விவகாரம் இலங்கை அரசியலையே புரட்டிப்போட்டது. அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே தலைமை வெற்றி பெற்று, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. … Read more

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் – 5 சீனர்கள் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சீனாவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். தசு எனும் பகுதியில் சீன நாட்டினரின் கான்வே வாகனத்தின் மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப்பணிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சீன பொறியாளர்கள் சென்ற வாகனத்தின் மீது ஆயுதக்குவியலுடன் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிக்கச் செய்துள்ளார். இந்த நிலையில், இந்த தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த 5 பேர் பாகிஸ்தானை சேர்ந்த கார் டிரைவர் உள்பட மொத்தம் … Read more

தென் சீனக் கடல் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை!

India And China : தென் சீனக் கடலின் பெரும்பகுதியை உரிமை கொண்டாடும் சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது…

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் கடற்படை விமான தளம் மீது தாக்குதல் முயற்சி – 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இங்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பினர், தனிநாடு கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பலுசிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களை பாகிஸ்தான் மற்றும் சீன அரசுகள் சுரண்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் பல்வேறு தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் மாக் டவுன் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 … Read more

‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா அழகி!

ரியாத்: மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. அந்த நாட்டின் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுதின் ஆட்சியின் கீழ் தங்களது பாரம்பரிய வழக்கத்தை கைவிடுத்த நகர்வில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. 27 வயதான ரூமி அல்கஹ்தானி, மிஸ் யுனிவர்ஸ் தான் பங்கேற்பது குறித்த தகவலை திங்கட்கிழமை அன்று இன்ஸ்டாகிராம் … Read more

சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் நகர பாலம் உடைந்து பயங்கர விபத்து @ அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரின் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் மீது சரக்கு கப்பல் மோதியதில், அந்தப் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகளில், பாலத்தின் மீது கப்பல் ஒன்று மோதுவதும், அதனைத் தொடர்ந்து பாலாப்ஸ்கோ ஆற்றின் மீது இருந்த பாரம்பரியம் மிக்க அந்தப் பாலம் ஆற்றுக்குள் சரிந்து விழுவதும் பதிவாகியுள்ளது. பாலத்தின் மீது தெரிந்த விளக்கு வெளிச்சம் அதன் மீது வாகனங்கள் சென்றது என்பதைக் காட்டுகிறது. மூன்றாவது … Read more

பாலத்தின் மீது கப்பல் மோதும் வீடியோ! சீட்டுக்கட்டு போல் சரியும் வாகனங்களில் இருந்தவர்களின் நிலை என்ன?

Baltimore Bridge USA Accident Viral : பிரமாண்ட கப்பல் மோதியதால் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்த விபத்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது…

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 5 சீனர்கள் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த ஐவர் பலியாகினர். தாக்குதலில் ஈடுபட்டவரையும் சேர்த்து உயிரிழப்பு மொத்தம் 6. பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தசு முகாமுக்கு சீன பொறியாளர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது தற்கொலை படையைச் சேர்ந்தவர் மோதி வெடிக்கச் செய்ததில் வாகனத்தில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர் என்று மாகாண காவல் துறை தலைவர் முகமது அலி காண்டாபூர் தெரிவித்துள்ளார். சீனாவில் பெல்ட் … Read more