நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்: அதிபர், பிரதமர் மாளிகை, நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு – முழு விவரம்

காத்மாண்டு: நே​பாளத்​தில் இளம் தலை​முறை​யினரின் ஊழல் எதிர்ப்பு போராட்​டம் தீவிரமடைந்து வரு​கிறது. இதன் ​காரண​மாக அந்த நாட்டு பிரதமர் சர்மா ஒலி நேற்று பதவியை ராஜி​னாமா செய்​தார். உலகின் ஊழல் மிகுந்த நாடு​களில் ஒன்​றாக நேபாளம் திகழ்​கிறது. அந்நாட்டின் சமூக வலை​தளங்​களில் அண்​மை​யில் ‘‘நெப்போ பேபி’’ என்ற பெயரில் வீடியோக்​கள் பரவின. அதாவது நேபாளத்​தின் அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு … Read more

கத்தார் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; மத்திய கிழக்கில் பதற்றம்

தோஹா, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,195 பேர் கொல்லப்பட்டனர். பலரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர். இதனை தொடர்ந்து காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் 2 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போரில் காசாவில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், … Read more

Gen Z முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகள்… ராணுவத்தால் தொடரும் பதற்றம் – நேபாளத்தில் அடுத்தது என்ன?

Nepal Protests Demands: நேபாளத்தில் Gen Z போராட்டக்குழுவினர் அந்நாட்டு அதிபர் மற்றும் ராணுவத்திற்கு முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகளை இங்கு காணலாம். 

இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை: பீட்டர் நவரோ

வாஷிங்டன்: இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை என்று அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. பரஸ்பர வரி விதிப்பின் அடிப்படையில் 25% வரி விதிப்பும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அபராதாமாக 25% வரி விதிப்பும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியப் பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நியாயமற்றது, காரணமற்றது என குறிப்பிட்டுள்ள இந்தியா, ஏற்றுமதிக்கான … Read more

வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்: முன்னாள் பிரதமரின் மனைவி பலி

காத்மண்டு, இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இங்கு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு நடைபெற்று வந்தது. ஜனாதிபதியாக ராம் சந்திரா பவுடல் செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நேபாளத்தில் இளைஞர்கள் புரட்சி வெடித்தது. கடந்த சில நாட்களுக்குமுன் நேபாளத்தில் 20க்கும் மேற்பட்ட சமூகவலைதள செயலிகளை அந்நாட்டு அரசு முடக்கியது. இதனால், அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டது. இதில், ராணுவம் நடத்திய … Read more

30 ஆண்டு கால ஊழலை விசாரிக்கவும்; நேபாள அரசமைப்பை திருத்தவும் – ஜென் z போராட்டக்காரர்கள் நிபந்தனை!

காத்மாண்டு: நே​பாளத்​தில் இளம் தலை​முறை​யினரின் ஊழல் எதிர்ப்பு போராட்​டம் தீவிரமடைந்ததன் ​காரணமாக அந்நாட்டுப் பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜி​னாமா செய்​துள்ளார். இந்நிலையில், நேபாள அதிபர் ராம் சந்திர பவுடேல், ஜென் z போராட்டக்காரர்களை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து போராட்டக்காரர்களிடம் அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. இந்த நிலையில், நேபாளத்தில் அமைதி திரும்ப போராட்டக்காரர்கள் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். … Read more

நேபாளத்தில் பிரதமரை தொடர்ந்து ஜனாதிபதியும் ராஜினாமா

காத்மண்டு, இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இங்கு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு நடைபெற்று வந்தது. ஜனாதிபதியாக ராம் சந்திரா பவுடல் செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நேபாளத்தில் இளைஞர்கள் புரட்சி வெடித்தது. கடந்த சில நாட்களுக்குமுன் நேபாளத்தில் 20க்கும் மேற்பட்ட சமூகவலைதள செயலிகளை அந்நாட்டு அரசு முடக்கியது. இதனால், அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டது. இதில், ராணுவம் நடத்திய … Read more

இந்தியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த செனட் உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆஸ்திரேலிய பிரதமர்

சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வில் குடியேறும் இந்​தி​யர்​கள் எண்​ணிக்கை சமீப கால​மாக அதி​கரித்து வரு​கிறது. அங்கு குடியேறிய வெளி​நாட்​ட​வர்​களில் இங்​கிலாந்​துக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யர்​கள் 2-ம் இடத்​தில் உள்​ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கணக்​கெடுப்​பின்​படி 8.4 லட்​சம் இந்​தி​யர்​கள் அங்கு வசிக்​கின்​றனர். இதுத​விர, ஆயிரக்​கணக்​கானோர் ஆஸ்​திரேலி​யா​விலேயே பிறந்து குடி​யுரிமை பெற்​றுள்​ளனர். இந்​நிலை​யில், அங்கு வசிக்​கும் இந்​தி​யர்​களுக்கு எதி​ரான மனநிலை அதி​கரித்து வரு​கிறது. குறிப்​பாக, கடந்த சில வாரங்​களாக வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறு​வதற்கு எதி​ராக, நாடு முழு​வதும் ‘மார்ச் பார் ஆஸ்​திரேலி​யா’ … Read more

அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்; பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கே.பி. சர்மா ஒலி

காட்மாண்டு, இமயமலை அடிவார நாடான நேபாளத்தை ஆண்டுவரும் கே.பி.சர்மா ஒலி அரசு, நாட்டில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. அதாவது நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அனைத்து சமூக வலைத்தளங்களும் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதற்காக 7 நாட்கள் கெடு விதித்து கடந்த மாதம் 28-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அரசின் இந்த உத்தரவை ஏற்று பல சமூக … Read more

“கோழைத்தனமான தாக்குதல்” – இஸ்ரேலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் உறுப்பினர்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட கோழைத்தனமான இஸ்ரேலிய தாக்குதலை கத்தார் அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தக் குற்றவியல் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாகும். மேலும் … Read more