Rs 23 crore property for cat and dog: Old woman generous | பூனை, நாய்க்கு ரூ.23 கோடி சொத்து: மூதாட்டி தாராளம்

பீஜிங்: சீனாவில் ஷாங்காய்நகரில் வசிப்பவர் மூதாட்டி லியூ. தனக்கு சொந்தமான ரூ.23 கோடி சொத்துகளை 3 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கும் வகையில் உயில் எழுதி வைத்தார். ஆனாலும் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது பிள்ளைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சி, வேதனையை ஏற்படுத்தியது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தன் உயிலை மாற்றி எழுதி சொத்துகள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய், பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார். இதையறிந்த … Read more

ஹமாஸ் தாக்குதலுடன் ஐ.நா.வுக்கு தொடர்பு…? இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு

நியூயார்க், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தொடங்கியது முதல் இதுவரை ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள் கழகத்தின் (யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ.) பணியாளர்கள் 152 பேர் உயிரிழந்து உள்ளனர். ஐ.நா. அமைப்பை சேர்ந்த 13 ஆயிரம் பேர் காசாவில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதுடன் இந்த யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ. பணியாளர்களுக்கு தொடர்பு உள்ளது என்று இஸ்ரேல் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளது. எனினும், இதில் … Read more

கார் மீது சிறிய வகை விமானம் மோதி விபத்து… இருவர் உயிரிழப்பு

பிரஸ்ஸல்ஸ், கிழக்கு பெல்ஜியத்தில் உள்ள ஏரோட்ரோமில் இலகுரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. எனினும், விமானத்தை தரையிறக்க விமானி முயற்சி செய்தும் பலனளிக்காமல் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் விமானமும் காரும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்தனர். காரில் இருந்தவர், சிகெரட் புகைப்பதற்காக காரை விட்டு இறங்கிய சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததால், நல்வாய்ப்பாக … Read more

ஜோர்டான்: ஆளில்லா விமான தாக்குதலில் 3 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

அம்மான், இந்த தாக்குதலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் உறுதி கூறியுள்ளார். ஜோர்டான் நாட்டில் முகாம்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருந்தபோது, திடீரென ஆளில்லா விமானம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், 3 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 25 பேர் காயமடைந்து உள்ளனர். சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது என கூறப்படுகிறது. இதற்கு எதிராக … Read more

Irans Space Shuttle Test Confuses Western Countries | ஈரான் விண்கல சோதனை மேற்கத்திய நாடுகள் கலக்கம்

ஜெருசலேம்:மேற்காசிய நாடான ஈரான், ஒரே நேரத்தில் மூன்று விண்கலங்களை விண்ணுக்கு செலுத்தி சாதனை படைத்தது; இது மேற்கத்திய நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. இது தன்னிச்சையாக பல ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. இதற்கு, அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சிமோர்க் என்ற ராக்கெட் வாயிலாக, ஈரான் நேற்று மூன்று விண்கலங்களை செலுத்தியது. தொலைத் தொடர்பு சேவை மற்றும் ஆராய்ச்சிகளுக்காக இந்த விண்கலங்கள் … Read more

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதல், கைகலப்பு – பரபரப்பு வீடியோ

மாலி, மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதிபர் முய்சு தலைமையில் புதியாக நியமிக்கபட்டுள்ள மந்திரிகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதத்தின்போது, ஆளுங்கட்சி மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், ஆளும் கட்சியின் ஆதரவு … Read more

பிரேசிலில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிரேசிலியா, பிரேசில் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் 592 கிலோமீட்டர் (368 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : பிரேசில்  நிலநடுக்கம்  Brazil  earthquake 

உலக பணக்காரர்… எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளிய பெர்னார்ட்…. 11வது இடத்தில் அம்பானி!!

பிரான்ஸ் நாட்டின் பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட் மீண்டும் உலக பணக்காரர் (World’s Richest Person) என்ற பட்டத்தை வென்றுள்ளார். பெர்னார்ட் அர்னால்ட்டின் நிகர மதிப்பு திடீரென 207.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

ஹவுதி தாக்குதல்.. பற்றி எரியும் பிரிட்டன் எண்ணெய் கப்பல்: உதவி செய்ய விரைந்த இந்திய கடற்படை

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லக் கூடிய வணிகக் கப்பல்களை குறிவைத்து ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் இன்று ஏடன் வளைகுடா பகுதியில் பிரிட்டனைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டாவை தாக்கி உள்ளனர். ஏவுகணை மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எண்ணெய் கப்பலில் தீப்பற்றியது. எண்ணெய் கப்பலில் இருந்தவர்கள், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர். இதையடுத்து ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் … Read more

பூமியை விட இரண்டு மடங்கு பெரியது..நீர் இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்தது நாசா

வாஷிங்டன், பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இதனை நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் ஜிஜே9827டி என்ற இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்து இருப்பதால் உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க … Read more