“கோழைத்தனமான தாக்குதல்” – இஸ்ரேலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் உறுப்பினர்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட கோழைத்தனமான இஸ்ரேலிய தாக்குதலை கத்தார் அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தக் குற்றவியல் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாகும். மேலும் … Read more

போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழப்பு

காத்மண்டு: நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் அவரது மனைவி உயிரிழந்துள்ளார். நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றதோடு, அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று பிற்பகல் … Read more

ரஷ்யாவில் மனிதர்​களிடம் நடத்​தப்​பட்ட புற்றுநோய் தடுப்பூசி சோதனை வெற்றி

மாஸ்கோ: புற்​று​நோய்க்கு தடுப்​பூசி உரு​வாக்​கும் பணி​யில் ரஷ்​யா​வின் தேசிய கதிரியக்க மருத்​துவ ஆராய்ச்சி மைய​மும் ஏங்​கல்​ஹார்ட் மூலக்​கூறு உயி​ரியல் நிறு​வன​மும் இணைந்து செயல்​பட்டு வந்​தன. பல ஆண்டு கால முயற்​சி​யின் பலனாக புற்​று​நோய்க்கு என்ட்​ரோமிக்ஸ் என்ற தடுப்​பூசியை உரு​வாக்​கி​யுள்​ள​தாக அவை அறி​வித்​தன. கரோனா தடுப்​பூசிகளைப் போலவே அதே எம்​-ஆர்​என்ஏ தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி இது உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. புற்​று​நோய் செல்​களை நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்​டலம் அடை​யாளம் கண்டு அகற்​றும் வகை​யில் இது வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. கீமோதெரபி, கதிர்​வீச்சு போன்ற … Read more

நேபாளத்தில் 2வது நாளாக நீடிக்கும் போராட்டம் – இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை

புதுடெல்லி: நேபாளத்தில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அதிகாரிகள் வெளியிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்​ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். நேபாளத்தில் போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், “நேபாளத்தில் நேற்று … Read more

நேபாள பிரதமரின் ராஜினாமா ஏற்பு – போராடும் இளைஞர்களின் கோரிக்கை என்ன?

காத்மாண்டு: இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினமா செய்வதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி அறிவித்த நிலையில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் ராமச்சந்திர பவுடல் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் … Read more

சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்க நேபாள பிரதமர் மறுப்பு?

காத்மாண்டு, இமயமலை அடிவார நாடான நேபாளத்தை ஆண்டுவரும் கே.பி.சர்மா ஒலி அரசு, நாட்டில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. அதாவது நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அனைத்து சமூக வலைத்தளங்களும் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதற்காக 7 நாட்கள் கெடு விதித்து கடந்த மாதம் 28-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது.அரசின் இந்த உத்தரவை ஏற்று பல சமூக ஊடகங்கள் … Read more

தொடர் போராட்டம் எதிரொலி – நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார். பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்​ததை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் நேற்று தலைநகர் காத்மாண்டுவில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, போலீசார் நடத்திய … Read more

இந்தியாவுக்கு மேலும் கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா முடிவு

வாஷிங்டன், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால், இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா, தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கும் என தெரிவித்துள்ளது.இந்த நிலையில், இந்தியா மீது மேலும் கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அமெரிக்க மந்திரி ஸ்காட் பெசென்ட் கூறியதாவது: “அமெரிக்காவும், ஐரோப்பிய … Read more

நேபாளத்தில் GenZ போராட்டம்: 19 பேர் பலி! பிரதமர் சர்மா ஒலி ராஜினமா..

Nepal Protest PM Kp Sharma Oli Resigns : நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, நாட்டு மக்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து, அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 

ஜெருசலேமில் தீவிரவாத தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு

ஜெருசலேம்: இஸ்​ரேலில் தீவிர​வா​தி​கள் நடத்​திய திடீர் தாக்​குதலில் 6 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து இஸ்​ரேல் காவல் துறை​யினர் நேற்று கூறிய​தாவது: கிழக்கு ஜெருசலேமில் யிகல் யாடின் தெரு​வில் உள்ள ரமோத்சந்​திப்​பில் இந்த சம்​பவம் நடை​பெற்​றுள்​ளது. பேருந்​தில் பயணம் செய்த, பேருந்​துக்கு காத்​திருந்த பயணி​கள் மீது காரில் வந்த பயங்​கர​வா​தி​கள் கண்​மூடித்​தன​மாக இந்த துப்​பாக்​கிச்​சூட்டை நடத்​தி​யுள்​ளனர். இதில், 6 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 12 பேர் படு​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். முதல்​கட்ட தகவலின்​படி 2 தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கி​யுடன் வந்து … Read more