கனடா: அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

ஒட்டாவா, கனடா நாட்டின் மனிடொபா மாகாணம் வினிப்பெக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 2 பேரை மீட்டனர். ஆனால், இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், துப்பாக்கிச்சூடு … Read more

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே அதிரடி நீக்கம்- ரணில் விக்ரம்சிங்கே நடவடிக்கை

கொழும்பு, அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சரியாக விளையாடவில்லை. இதனால், அந்த அணிக்கு எதிராக உள்நாட்டில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக கடந்த 6-ம் தேதி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை மொத்தமாகக் கலைத்த விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாடு 1996-ல் கோப்பை வென்றபோது அணியின் கேப்டனாக இருந்தவருமான அர்ஜுன ரணதுங்க தலைமையில் தற்காலிகக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். … Read more

பிரான்ஸ்: பெற்ற மகள்கள் 3 பேரை குத்தி கொன்ற கொடூர தந்தை

பாரீஸ், பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரின் தென்கிழக்கே அமைந்த ஆல்போர்ட்வில்லே என்ற புறநகர் பகுதியில் வசித்து வரும் 41 வயதுடைய நபருக்கு 11, 10 மற்றும் 4 வயதில் 3 மகள்கள் இருந்தனர். இந்நிலையில், 3 மகள்களையும் அவர் கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளார். இதன்பின்பு தப்பியோடி விட்டார். அவர்களின் உடல்கள் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், டையெப் என்ற வடக்கு கடலோர … Read more

இஸ்ரேல் சென்றடைந்தார் எலான் மஸ்க் – பிணைக்கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கிறார்…!

வாஷிங்டன், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் (எக்ஸ்) நிறுவனங்களின் தலைவராக செயல்பட்டு வருபவர் எலான் மஸ்க். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல், யூத சமூகத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தார். மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்பாக டுவிட்டரில் பரவும் தவறான தகவல்கள், வீடியோக்களை அகற்ற எலான் மஸ்க் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்நிலையில், எலான் மஸ்க் இன்று … Read more

“காசாவின் புனரமைப்புக்கு உதவுவேன்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தெரிவித்த எலான் மஸ்க்

டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல் காரணமாக உருகுலைந்து போயுள்ள பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் புனரமைப்புக்கு உதவுவேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவர் தற்போது இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த சில நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருதரப்பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் சில பிணைக் கைதிகளை … Read more

Israel-Hamas ceasefire agreement extended by 2 more days | இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்: மேலும் 2 நாள் நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே கடந்த மாதம், 7ம் தேதியில் இருந்து போர் நடந்து வந்தது. பின்னர் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சில், நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் கத்தாரில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி மேற்கொள்ளப்பட்ட … Read more

New Zealands Upcoming Government To Scrap Law Curbing Tobacco Sales | புகையிலைக்கு ‛பச்சைக்கொடி: நியூசி.,யின் புதிய அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வெலிங்டன்: முன்னாள் அரசு கொண்டு வந்த புகையிலை தடையை புதிய அரசு ரத்து செய்யும் என புதிதாக நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்ற கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார். 2025ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அந்நாட்டு அரசு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி, அந்நாட்டில் 2009ம் ஆண்டு ஜனவரி 1ம் … Read more

பஞ்சத்தின் விளிம்பில் காசா: ஐ.நா உணவு உறுதி திட்டத் தலைவர் எச்சரிக்கை

காசா நகர்: போரினால் பாதிக்கப்பட்ட காசா நகரம் தற்போது பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாகவும், அதனால் அங்கு இன்னும் அதிகப்படியான உணவு, நிவாரணப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐ.நா. உணவு உறுதித் திட்டத்தின் தலைவர் கிண்டி மெக்கெய்ன் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை ஹமாஸ் குழுவினர் நடத்தினர். முன் எப்போதும் இல்லாத அளவில் எதிர்பாரா நேரத்தில் நிகழ்ந்த அந்தப் பெரிய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். … Read more

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே அதிரடி நீக்கம்

கொழும்பு: இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவை பதவியில் இருந்து இன்று அதிரடியாக நீக்கி அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சரிவர விளையாடாததை அடுத்து, அந்த அணிக்கு எதிராக உள்நாட்டில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக கடந்த 6-ம் தேதி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை மொத்தமாகக் கலைத்த விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் … Read more