100% மனிதர்களை கொல்ல கூடிய கொடிய வைரசை வைத்து ஆய்வு; சீனாவின் திட்டம் என்ன…?

பீஜிங், கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி 3 ஆண்டுகளாக நாடுகளை புரட்டி போட்டது. அதன் பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர். எனினும் பல நாடுகளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை. இந்த சூழலில், இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனாவின் ஜே.என். வகை வைரசின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மக்களில் பலர் முக கவசங்களை அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் பரவலாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், 100% மனிதர்களை கொல்ல கூடிய திறன் … Read more

India has benefited immensely from PM Modi: Antony Blinken praises | பிரதமர் மோடியால் இந்தியா பெரிய பலன் அடைந்துள்ளது: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ” பிரதமர் மோடியால் இந்தியாவும், நட்பு நாடுகளும் பெரிய பலன் அடைந்துள்ளன” என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் பாராட்டி உள்ளார். இது குறித்து ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது: இந்தியாவை அபரிமிதமான வெற்றி பெற்ற நாடாக அமெரிக்கா கருதுகிறது. மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. பல இந்தியர்களின் வாழ்வில் நேர்மறையாக தாக்கத்தை உண்டாக்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் … Read more

பதிலுக்கு பதில்; ஈரான் மீது வான்வழி தாக்குதல் தொடுத்த பாகிஸ்தான்

தெஹ்ரான், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட சன்னி பிரிவை சேர்ந்த ஜெய்ஷ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பை இலக்காக கொண்டு ஈரான் அரசு, ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் பலூசிஸ்தானில் நடந்த இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர் என இஸ்லாமாபாத் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சூழலில், ஈரானுக்கு எதிராக பாகிஸ்தான் இன்று தாக்குதலில் ஈடுபட்டது. இதன்படி, ஈரானின் சப்பார் பகுதியை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டு … Read more

செங்கடல் வணிகப் பாதைக்கு அச்சுறுத்தல் | ஹவுதி படையை சர்வதேச பயங்கரவாத குழுவாக பட்டியலிட்டது அமெரிக்கா

வாஷிங்டன்: செங்கடல் சர்வதேச வணிகப் பாதையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு காரணமாக இருப்பதாக ஏமனின் ஹவுதி படையை சர்வதேச பயங்கரவாத குழுவாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது. மேலும் ஹவுதிகளின் மீதான தாக்குதல்களையும் தொடர்ந்து வருகிறது. ஏமன் உள்நாட்டுப் போரில் அந்நாட்டின் பெரும் பகுதியை கைப்பற்றிய ஹவுதிகள் ஹமாஸ்களுக்கு ஆதரவாக இஸ்ரேஸ் துறைமுகத்துக்கு செல்லும் அந்நாட்டுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, செங்கடல் பாதையில் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியது. … Read more

Singapores Transport Minister S. Iswaran has resigned after being charged with corruption | ஊழல் புகார்: சிங்கப்பூர் அமைச்சர் ராஜினாமா; சம்பளத்தை திரும்ப ஒப்படைக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தகவலை பிரதமர் லீ அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. கடந்த ஜூலை மாதம் இவர் மீதான லஞ்சப்புகார் குறித்து விசாரணை துவங்கியது. சென்ற ஆண்டில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.இவர் மீதான லஞ்சப்புகார் எழுந்ததை அடுத்து இவர் பெற்ற சம்பளம் மற்றும் படித்தொகையை திரும்ப வழங்க முடிவு செய்துள்ளார். இவரது முடிவை ஏற்று கொள்வதாக பிரதமர் லீ … Read more

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; 4 பேர் பலி

பாக்தாத், ஈராக் நாட்டின் எர்பில் நகரில் அமெரிக்க தூதரகம் அமைந்த பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு, ஈரான் நாட்டின் புரட்சி காவல் படை பொறுப்பேற்றுள்ளது. இதுபற்றி படையினர் வெளியிட்ட செய்தியில், உளவாளிகளின் தலைமையகம் மற்றும் ஈரானுக்கு எதிரான பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு, ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்தது. இதுபற்றி ஈரான் பாதுகாப்பு படை வட்டாரம் வெளியிட்ட செய்தியில், எர்பில் … Read more

மியா கலீஃபா வெளியிட்ட வீடியோ… யூத பெண்ணிடம் கடும் வாக்குவாதம் – பின்னணி என்ன?

Mia Khalifa Viral Video: நடிகை மியா கலீஃபா மற்றும் யூத பெண் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் கடும் விவாதத்திற்கு வழிவகுத்தது.

Iran demands solution to Israel-Hamas war to India | இஸ்ரேல்-ஹமாஸ் போரில் தீர்வு இந்தியாவுக்கு ஈரான் கோரிக்கை

நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ‘இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவ வேண்டும்’ என வலியுறுத்தினார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கர அமைப்புக்கும்இடையே போர் நடந்து வருகிறது. இதில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள் செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு செல்லும் … Read more

தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 22 பேர் பலி

பாங்காக், தாய்லாந்து நாட்டின் முவாங் மாவட்டத்தில் தம்போன் சலகாவோ நகரில் சுபான் புரி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். நேற்று மாலை திடீரென ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தொழிலாளர்களில் 10 பேரை காணவில்லை. பலியானவர்களில் 20 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களில், 12 பேர் பெண்கள் மற்றும் 8 பேர் ஆண்கள் ஆவர். வெடிவிபத்து … Read more

ஈரான் புரட்சிப் படைகள் முகாம்கள் மீது தாக்குதல்: உறுதிப்படுத்திய பாகிஸ்தான் உளவு அதிகாரி

இஸ்லாமாபாத்: ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்திய அடுத்த நாளே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. முன்னதாக ஈரான் தாக்குதல் ஒரு தற்காப்பு நடவடிக்கை என்று இந்தியா ஆதரவு தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது. ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் உளவு அதிகாரி, “நாங்கள் பாகிஸ்தானுக்கு … Read more