உலக செய்திகள்
ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
சனா, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இதனிடையே, இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் … Read more
“கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் பாலோசிஸ்தான் பகுதியில் இருவர் உயிரிழந்த நிலையில், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையானது வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் பாலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல் அதில் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை தாக்கியதாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்கியதாகத் தெரிவித்தது. ஸ்விட்சர்லாந்து நாட்டின் டேவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் ஈரான் வெளியுறவு அமைச்சரும், … Read more
R Praggnanandhaa Beats World Champion Ding Liren, Becomes Top Ranked Indian Chess Player | உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா: செஸ் தரவரிசையில் இந்தியாவில் ‛டாப்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாக்: நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இந்திய தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். இந்தியாவில் செஸ் போட்டிகள் என்றாலே தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவார். செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அவர் பல ஆண்டுகளாக இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் … Read more
பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் – பதற்றம்
தெஹ்ரான், ஈரான் பாதுகாப்புப்படையில் ஈரான் புரட்சிப்படை என்ற பிரிவு உள்ளது. இந்த புரட்சிப்படை ஈரானின் நலனுக்காக வெளிநாடுகளில் பல்வேறு ராணுவ, அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது. இந்த புரட்சிப்படை பிரிவில் ‘குவாட்ஸ்’ என்ற சிறப்பு படை உள்ளது. இந்த குவாட்ஸ் பிரிவு வெளிநாடுகளில் உளவு, ரகசிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, ஈரான் புரட்சிப்படையின் தளபதி குவாசம் சுலைமானி கடந்த 2020ம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்க படையினர் நடத்திய டிரோன் தாக்குதலில் … Read more
UK special team to speed up extradition of criminals | குற்றவாளிகளை நாடு கடத்த பிரிட்டன் விரையும் சிறப்பு குழு
நம் நாட்டில் பண மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிக்க, மத்திய விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு, சம்பந்தப்பட்ட நாட்டுக்குச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,000 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, அவர் தற்போது லண்டனில் உள்ள சிறையில் … Read more
பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
புதுடெல்லி: பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) என்ற தீவிரவாத அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது பதற்றத்தை கூட்டியுள்ளது. அண்மையில் ஈராக், சிரியா மீது … Read more
World countries should learn from India Bill Gates Foundation Chairman praises | இந்தியாவிடம் உலக நாடுகள் கற்க வேண்டும் பில்கேட்ஸ் அறக்கட்டளை தலைவர் புகழாரம்
டாவோஸ், ”மருத்துவம், பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில், ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என்பதை இந்தியாவின் வெற்றிகரமான நடவடிக்கைகளில் இருந்து உலக நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டும்,” என, பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையின் சர்வதேச வளர்ச்சிக்கான தலைவர் கிறிஸ்டோபர் இலியாஸ் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார அமைப்பின் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்ற பிரபல தொழிலதிபர் பில் கேட்சின், பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையின் சர்வதேச … Read more
ஹமாஸ் இஸ்ரேல் போருக்கு மத்தியில், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய ஈரான்! இருவர் பலி
Missile Attack: பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஈரானின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
Indian doctor hit by car fined Rs 1.41 crore in UK | காரை மோதிய இந்திய டாக்டருக்கு பிரிட்டனில் ரூ.1.41 கோடி அபராதம்
லண்டன், பிரிட்டனில், 12 வயது பள்ளி சிறுமி மீது காரில் மோதி விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி டாக்டருக்கு, 1.41 கோடி ரூபாய் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டுஷயர் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் சாந்தி சந்திரன் வசித்து வருகிறார். கடந்த 2018, ஜனவரியில், தன் சொகுசு காரை ஓட்டி சென்ற போது, போக்குவரத்து சிக்னல் பச்சை விளக்கில் இருந்ததால், டாக்டர் சாந்தி சற்று வேகமாக காரை ஓட்டினார். … Read more