உலக செய்திகள்
Bomb blast near Niagara Falls: Two dead | நயகரா நீர்வீழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: இருவர் பலி
வாஷிங்டன்: அமெரிக்க- கனடா எல்லைப்பகுதி நயகரா நீர்வீழ்ச்சி அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததாகவும், இதில் இருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க – கனடா சர்வதேச எல்லைப்பகுதியில் முக்கிய நகரங்களை இணைக்கும் ரெயின்போ பாலம் உள்ளது. இப்பகுதியில் நயகரா நீர்வீழச்சி அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில் உரிய விசாரணை நடத்திட … Read more
Application of Internet Pakistan in BRICS organization | ‛பிரிக்ஸ் அமைப்பில் இணைய பாகிஸ்தான் விண்ணப்பம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக இணைய பாகிஸ்தான் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா – சீனா, -ரஷ்யா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சீனாவின் ஷாங்கை நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானும் இந்த அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் ஆதரவுடன் விண்ணப்பித்துள்ளதாகவும், விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டால், 2024-ல் பாகிஸ்தான் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இஸ்லாமாபாத்: பிரிக்ஸ் … Read more
இஸ்ரேல் பணய கைதிகள் 50 பேருக்கு ஈடாக 300 பாலஸ்தீனியர்களை விடுவிக்க முடிவு
டெல் அவிவ், இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த … Read more
ஹவாய் தீவில் கடலில் பாய்ந்த கடற்படை விமானம்..!
நியூயார்க்: அமெரிக்காவின் ஹவாய் மாநிலம், ஓஹு தீவின் கெனோஹே கடற்கரை பகுதியில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமான தளம் ஒன்று உள்ளது. இந்த தளத்திற்கு வாஷிங்டன் மாநிலம் விட்பி தீவில் இருந்து 9 பயணிகளுடன் போயிங் போஸிடான் 8-ஏ ரக அமெரிக்க கண்காணிப்பு விமானம் ஒன்று சென்றது. விமான தளத்தில் தரையிறங்க முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. ஓடுபாதையை தாண்டி வேகமாக சென்ற விமானம், எதிர்பாராதவிதமாக கடல்நீரில் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. … Read more
5 நாட்களில் பெரிய டுவிஸ்ட்.. மீண்டும் ஓபன்ஏஐ தலைமை பொறுப்புக்கு திரும்பும் சாம் ஆல்ட்மேன்
சான் பிரான்சிஸ்கோ: பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் கடந்த வெள்ளிக்கிழமை அதிரடியாக நீக்கப்பட்டார். திடீரென இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தையும் ஒபன்ஏஐ தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டிருந்தது. அத்துடன், ஒபன்ஏஐ நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா முராடி செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. “ஆல்ட்மேனை பதவியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவை நிர்வாக குழு பெரும் ஆலோசனைக்கு பிறகே எடுத்தது. ஆலோசனையின் போது, … Read more
எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்ரேல், காசா மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு
டெல் அவிவ், இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், 4 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வந்துள்ளது. இந்த போரில் இதுவரை 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் … Read more
I welcome ceasefire announcement in Gaza to save civilians: French President | காசாவில் போர் நிறுத்த அறிவிப்பு: பிரான்ஸ் அதிபர் வரவேற்பு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரீஸ்: காசாவில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் மனிதாபிமான போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். காசாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இஸ்ரேல் இன்று முதல்( நவ.,22) 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: … Read more
காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிப்பு – இஸ்ரேல்
காசா, ஹமாஸ்-இஸ்ரேல் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருவதால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவி கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன. குறிப்பாக அமெரிக்கா உதவியுடன் கத்தார் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது. கத்தார் இருதரப்பிலும் பிணைக்கைதிகள்- இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்துள்ள 240 பிணைக்கைதிகளில் 50 … Read more
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் பரிமாற்றம்
Israeli Hamas War: ஹமாஸுடனான போர்நிறுத்தத்திற்கு இன்று (புதன்கிழமை) இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 50 பணயக்கைதிகளுக்கு ஈடாக 4 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை பாராளுமன்றம் நிறைவேற்றி உள்ளது.