ஹமாஸ் இஸ்ரேல் போருக்கு மத்தியில், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய ஈரான்! இருவர் பலி

Missile Attack: பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஈரானின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Indian doctor hit by car fined Rs 1.41 crore in UK | காரை மோதிய இந்திய டாக்டருக்கு பிரிட்டனில் ரூ.1.41 கோடி அபராதம்

லண்டன், பிரிட்டனில், 12 வயது பள்ளி சிறுமி மீது காரில் மோதி விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி டாக்டருக்கு, 1.41 கோடி ரூபாய் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டுஷயர் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் சாந்தி சந்திரன் வசித்து வருகிறார். கடந்த 2018, ஜனவரியில், தன் சொகுசு காரை ஓட்டி சென்ற போது, போக்குவரத்து சிக்னல் பச்சை விளக்கில் இருந்ததால், டாக்டர் சாந்தி சற்று வேகமாக காரை ஓட்டினார். … Read more

Iran attack on Pakistans Baluchi military bases | பாகிஸ்தானின் பலுச்சி ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

டெஹரான்: பாகிஸ்தானின் பலுச்சி ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்- சிரியா எல்லை பகுதியில் புரட்சி படையினர் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் பாகிஸ்தானின் பலுச்சியில் உள்ள இரு ராணுவ தளங்கள் மீது ஈரான் நேற்று ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெஹரான்: பாகிஸ்தானின் பலுச்சி ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக … Read more

Lets prevent technical fraud in elections! Guaranteed by Open A.I. Company | தேர்தல்களில் தொழில்நுட்ப மோசடியை தடுப்போம்: ஓபன் ஏ.ஐ. நிறுவனம் உறுதி

புதுடில்லி : இந்தியா உட்பட, உலகெங்கும், 50 நாடுகளில் இந்தாண்டு பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ‘இந்தத் தேர்தல்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தான் உருவாக்கியுள்ள செயலிகள் உள்ளிட்டவை, பிரசாரம் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுப்போம்’ என, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஓபன் ஏ.ஐ.,’ என்ற முன்னணி நிறுவனம் உறுதி அளித்துள்ளது. தற்போது தகவல் தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு … Read more

America tops the list of most militarily powerful countries: India at fourth place | ராணுவ வலிமையுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு முதலிடம்: நான்காம் இடத்தில் இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: நாட்டின் ராணுவத்தை வலுப்படுத்துவதில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இதில் நம் நாடு நான்காம் இடத்தில் உள்ளது. குளோபல் ஃபையர் பவர் என்ற இணையதளம் , உலகளவில் நாடுகள் தங்களின் ராணுவத்தில் உள்ள வீரர்கள், ராணுவ தளவாடங்கள் இருப்பு, ராணுவத்தின் நிதி நிலைமை, புவியியல் இருப்பிடம், உள்ளிட்ட 60 காரணங்களை ஆய்வு செய்து அதிக குறியீட்டை பெற்றுள்ள நாடுகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் … Read more

ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலை: தீக்கிரையான வீடுகள்…!

ரெய்க்யவிக், ஐரோப்பாவில் அமைந்துள்ள தீவு நாடு ஐஸ்லாந்து. இந்நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு தீபகற்பம் கிராண்டாவிக் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதன் காரணமாக எரிமலையில் இருந்து லாவா குழம்பு வெளியேறியது. அது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதேவேளை, லாவா குழம்பு குடியிருப்பு பகுதிக்குள் சென்றதால் அங்கிருந்த வீடுகள், கடைகள் உள்பட பல்வேறு கட்டிடங்கள் அனைத்தும் … Read more

அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

சனா, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இதனிடையே, இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் … Read more

முட்டை விலை ரூ.400… வெங்காயம் ரூ.250… திணறும் மக்கள்!

தனது வரலாற்றில், இது வரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) உட்பட பல இடங்களிலிருந்து உதவியைப் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விவேக் ராமசாமி விலகல்: அயோவா மாகாண பின்னடைவைத் தொடர்ந்து அறிவிப்பு

வாஷிங்டன்: 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாரி இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார். இது குறித்து அவர், “நான் இன்றிரவு இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். இது கடுமையாகவே இருக்கிறது. ஆனாலும் ஏற்கிறேன். இன்று மக்களை ஆச்சர்யப்படுத்தும் முடிவை எதிர்பார்த்தோம். அது கிட்டவில்லை” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பிரதான … Read more

பிரேசிலில் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி

பிரசிலியா, தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் ரியோடி ஜெனிரோ மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் … Read more