கனடாவில் இந்திய நடிகரின் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: காலிஸ்தான் தீவிரவாதி பொறுப்பேற்பு

டொரண்டோ: க​ன​டா​வின் பிரிட்​டஷ் கொல்​பியா மாகாணம் சர்ரே நகரில் Kap’s Cafe என்ற உணவகம் உள்​ளது. இது பஞ்​சாபை சேர்ந்த நகைச்​சுவை நடிகர் கபில் சர்​மாவுக்கு சொந்​த​மானது என கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் இந்த உணவகத்​தில் வியாழக்கிழமை அதி​காலை 1.50 மணி​யள​வில் மர்ம நபர் ஒரு​வர் 8 முறை துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு பிறகு அங்​கிருந்து காரில் தப்பிச் சென்​றார். அதிர்​ஷ்வச​மாக இதில் எவரும் காயம் அடைய​வில்​லை. மேலும் உணவக கட்​டிடத்​தி​லும் அதிக சேதம் ஏற்​பட​வில்லை. இந்த சம்​பவம் அப்​பகு​தி​யில் … Read more

ரஷியா வெளியுறவு மந்திரி வடகொரியா பயணம்

மாஸ்கோ, உக்ரைன் நாட்டுடன் ரஷியா போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன. போர் தொடர்ந்து நீடித்து வருவதால் இருதரப்பிலும் ஏராளமான இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரஷியா தரப்பில் சண்டையிட போதுமான ஆட்கள் இல்லாமல் சிரமப்படும் நிலை உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினரை களம் … Read more

கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி

வாஷிங்டன், இ மெயில் எனப்படும் மின்னஞ்சல் பயனபடுத்தாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது இ மெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல்வேறு தளங்கள் இ மெயில் சேவை வழங்கினாலும் கூகுளின் இ மெயில் (ஜி மெயில்) தான் இதில் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 180 கோடி ஜிமெயில் கணக்குகள் உள்ளன. பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஜிமெயிலில் புதிய டூல் … Read more

பாகிஸ்தான்: பஸ்சில் சென்ற 9 பயணிகளை சுட்டுக்கொன்ற கிளர்ச்சியாளர்கள்

கராச்சி, பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய கிளர்ச்சியாளர்கள் குழு, அதில் இருந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தப்பட்டனர். அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். மாகாணத்தின் சோப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக உதவி ஆணையர் சோப் நவீத் ஆலம் தெரிவித்தார். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட ஒன்பது பேரும் பஞ்சாப் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆலம் … Read more

கடும் நிதி நெருக்கடி: பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விற்பனைக்கு வருகிறது

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கடுமையான நிதி சிக்கலில் தவித்து வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம், 7 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாதநிலையில், இச்சம்பவம் அம்பலம் ஆனது. இதற்கிடையே, பாகிஸ்தான் ஏர்லைன்சை கடந்த ஆண்டு விற்பனை செய்ய நடந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இந்நிலையில், அந்நிறுவனத்தை விற்கும் முயற்சியை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தி உள்ளது. விலைக்கு வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க 4 உள்ளூர் நிறுவனங்கள் தகுதி பெற்றிருப்பதாக தனியார்மயமாக்கல் … Read more

கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான மோதலையடுத்து எலான் மஸ்க் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அமெரிக்காவின் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு மாற்றாக அமெரிக்கா கட்சியைத் தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தார். அமெரிக்காவில் இரு கட்சி ஆட்சி முறை மட்டுமே பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது மூன்றாவது கட்சி அமெரிக்காவில் உருவாகியுள்ளது. ஆனால், எலான் மஸ்க்கின் புதிய கட்சியால் தேவையில்லாத குழப்பமே ஏற்படும் டிரம்ப் விமர்சித்து இருத்நார். இந்த நிலையில், எலான் மஸ்க் கட்சி தொடங்கியுள்ள … Read more

பள்ளி குழந்தைகளின் உணவில் பெயிண்ட் கலந்து… சீனாவில் அதிர்ச்சி சம்பவம்

ஹாங்காங், சீனாவின் வடமேற்கே தியான்ஷூய் நகரில் ஹெஷி பெய்க்சின் என்ற பெயரில் அமைந்த தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் குழந்தைகளுக்கான உணவில், உணவு பொருட்களுக்கு பதிலாக பெயிண்ட் கலந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளின் உணவு, பார்ப்பதற்கு வண்ண மயத்தில் தோன்ற வேண்டும் என்பதற்காக சமையல் பணியாளர் இதனை செய்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால், பெயிண்டில் இருந்த காரீயம் என்ற உலோகத்தின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால், ரத்தத்தில் அது கலந்து 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு … Read more

டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம்

அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இதில் கடந்த ஜூலை 4-ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 30 … Read more

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கான இறுதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

வாஷிங்டன் டி.சி., அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், தாய்லாந்து, மியான்மர், வங்காளதேசம், தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரி விதிப்புகளை அறிவித்து உள்ளது. இந்த வரி விதிப்புகள் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதற்காக அந்தந்த நாடுகளுக்கு கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசும்போது, நாடுகளுக்கு வரி விதிப்பது … Read more

அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

வாஷிங்டன், அமெரிக்காவின் கடலோர மாகாணமான டெக்சாசில் வனப்பகுதியையொட்டி மலைபிரதேசமான கெர் கவுன்டி உள்ளது. அந்த நகரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பல்வேறு சிற்றோடைகள், ஆறுகள் ஓடுகின்றன. இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி நள்ளிரவு கெர் கவுன்டியில் திடீர் மழை பெய்தது. அதிகாலை வரை கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அங்குள்ள குவாடலூப் ஆற்றின் நீர்மட்டம் ‘கிடுகிடு’வென உயர்ந்தது. சுமார் 3 மணிநேரம் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் உருவாகி பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் 1 மணி நேரத்திலேயே … Read more