போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரோம் செல்கிறார் டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த 21ம் தேதி காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார். போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதிச்சடங்கு 26ம் தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அதன்பின்னர், உலக நாடுகள் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கபப்ட்டு புனித மேரி மேஜர் … Read more

போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி

ரோம், உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர்(வயது 88). கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 12 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்த அவருக்கு முதுமை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. பின்னர் சுவாசக்கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14-ந் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி … Read more

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அரசே காரணம்.. எங்களுக்கு தொடர்பில்லை – பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி ஒமர் அப்துல்லா மற்றும் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது … Read more

அலுமினிய முலாம் பூசி தங்கம் கடத்தல் – 2 பேர் கைது

கொழும்பு, இலங்கையின் தலைமன்னார் உருமலையில் இருந்து தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கு தங்கம் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்தியா, இலங்கை இடையேயான சர்வதேச கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, படகில் அலுமினிய முலாம் பூசி 8 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, படகில் தங்கத்தை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த கடற்படையினர் பறிமுதல் தங்கத்தை காங்கேசன்துறை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். … Read more

‘சுற்றுலா பயணிகள் கொலை கவலையளிக்கிறது’ – பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் எதிர்வினை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டது கவலை அளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காமில் உள்ள பைசரன் அழகிய புல்வெளியின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். தங்களின் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் … Read more

சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஜெட்டா: பிரதமர் மோடியின் விமானம் நேற்று சவுதி வான் எல்லைக்குள் நுழைந்ததும், அந்நாட்டு போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து அழைத்துச் சென்றன. பிரதமர் மோடியின் வருகைக்கு அளிக்கப்பட்ட இந்த அரியவகை சிறப்பு மரியாதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பிரதமர் மோடி சவுதி, அரேபியா வரும்படி அந்நாட்டு இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார். வெளிநாட்டு தலைவர்களின் வருகையின்போது, … Read more

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தலாம்

வாடிகன் சிட்டி: மறைந்த போப் பிரான்சிஸ் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும் வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தனது 88-வது வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலமின்றி இருந்த அவர், அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் தேவாலயப் பணிகளை அவர் தொடர்ந்து செய்து வந்தார். … Read more

“பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது” – டொனால்டு ட்ரம்ப்

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் … Read more

சவுதி அரேபியா சென்றார் பிரதமர் மோடி: 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு

சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெட்டா நகரில் பிரதமர் வந்து இறங்கியதும் அங்கு கூடியிருந்த இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் ‘ மோடி, மோடி’ என கோஷம் போட்டனர். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி பிரதமர் சென்றார். அவரை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. மேலும், 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் 27 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி, சவுதி … Read more

போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு சனிக்கிழமை நடைபெறும்; வாடிகன் அறிவிப்பு

வாடிகன் சிட்டி, உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 12 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்த அவருக்கு முதுமை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. பின்னர் சுவாசக்கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14-ந் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி … Read more