மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்: அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட "உலகளாவிய எச்சரிக்கை"

வாஷிங்டன், ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களின் இருத்தலுக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது. ஈரானின் அணு திட்ட கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் ஏவுகணை திறன்களை கணிசமாக குறைத்து, அதன் அணுசக்தி செறிவூட்டல் வசதிகளை சேதப்படுத்தியது. இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு … Read more

சிரியாவில் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு

டமாஸ்கஸ்: சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை அந்நாட்டின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்நாட்டின் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட கிளர்ச்சிப் படையினர் கடந்த டிசம்பரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதன் … Read more

சர்ச்சைக்குரிய ஜப்பான் கடற்பகுதியில் சீன கப்பல்கள் 350 முறை ஊடுருவியதாக குற்றச்சாட்டு

டோக்கியோ, ஜப்பான்-சீனா எல்லையில் சென்காகு தீவு அமைந்துள்ளது. இந்த பகுதியை டயோயு என பெயரிட்டு சீனாவும் உரிமை கொண்டாடுகிறது. எனவே ஜப்பான் கடற்படையினர் சென்காகு தீவை ஒட்டிய தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் சீன கப்பல்கள் அங்கு அடிக்கடி அத்துமீறி நுழைவதாக ஜப்பான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் சென்காகு கடற்பகுதியில் சீன கப்பல்கள் சுமார் 350 முறை ஊடுருவியது கண்டறியப்பட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 216 நாட்கள் சீன … Read more

அமெரிக்க தாக்குதலால் கோபம்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் மிரட்டல்

டெஹ்ரான்: அமெரிக்க தாக்குதலால் கோபம் அடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோமுஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் ஈரான் நாட்டின் மூன்று முக்கிய அணு சக்தி தளங்களை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது. இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் … Read more

உக்ரைனின் தலைநகரில் 'பெரிய அளவிலான' டிரோன் தாக்குதல்

கீவ், உக்ரைன், ரஷியா இடையேயான போர் ஆயிரம் இருநூறு நாட்களைத் தாண்டி நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனிடையே, கடந்த 1ம் தேதி உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷிய போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. இதனால், இரு தரப்பு மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. … Read more

ஈரான் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் பி-2 போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்

வாஷிங்டன்: கடந்த 1970-களில் அதிவீன பி-2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா களமிறங்கியது. புதிய போர் விமானத்தை தயாரிக்கும் பணி அமெரிக்காவின் நார்த்ரோப் கார்ப்பரேசனிடம் அளிக்கப்பட்டது. கடந்த 1989-ம் ஆண்டில் பி-2 போர் விமானம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக பி-2 கருதப்படுகிறது. 172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட இந்த போர் விமானத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதனை ரேடாரில் கண்டறிய முடியாது. அணு … Read more

உச்சகட்ட போர்ப்பதற்றம்: ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது..? – டிரம்ப் கேள்வி

வாஷிங்டன் ஈரான் நாட்டில் உள்ள போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 முக்கிய அணு செறிவூட்டல் நிலையங்கள் மீது அமெரிக்கா நேற்று குண்டு வீசி தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பிறகு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க மக்களுக்கு விளக்கமளிக்க, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “அமெரிக்க ராணுவ தாக்குதல்களால் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் முற்றிலும் முழுமையாகவும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நமது போர் … Read more

அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு – முழு விவரம்!

டெஹ்ரான்: அமெரிக்க போர் விமானங்​கள், நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்​தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்​கள் முற்​றி​லு​மாக அழிக்​கப்​பட்​டன. ஈரானிடம் 10-க்​கும் மேற்​பட்ட அணுகுண்​டு​கள் தயாரிக்க தேவை​யான யுரேனி​யம் இருப்​ப​தாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. ஈரானிடம் உள்ள யுரேனி​யம் தற்​போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டப்​பட்டு இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. யுரேனி​யத்தை சுமார் 90 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டி​னால் அணுகுண்​டு​களை தயாரிக்க முடி​யும். இதற்​கிடையே, அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்ற பிறகு, ஈரானின் … Read more

அமெரிக்க தாக்குதலால் ஆவேசம்: இஸ்ரேலை நோக்கி சீறும் ஏவுணைகள் – ஈரானின் புது ‘வியூகம்’ என்ன?

தெஹ்ரான் / டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மீதான கடும் கோபத்தில் உள்ள ஈரான் பல்வேறு புதிய வியூகங்களை வகுத்துள்ளது. இதனிடையே, ஆவேசத்தின் உச்சமாக, இஸ்ரேல் நகரங்கள் மீது சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது ஈரான். அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையாக பதிலடி தந்து வந்ததால் இரு … Read more

''போரின் தீவிரத்தை குறைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்'' – ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, போரின் தீவிரத்தைக் குறைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியுள்ளார். ஈரான்-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், இன்று திடீரென அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ​​சமீபத்திய பதற்றங்கள் குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். … Read more