எல்லையில் கடும் மோதல்… பாகிஸ்தான் ராணுவத்தினரை கொன்று குவிக்கும் ஆப்கான் திவீரவாதிகள்!

சித்ராலில் நடந்த பெரிய அளவிலான சண்டையில், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 40 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் TTP கூறியுள்ளது. 

பா.ஜ.,வின் செயல்பாட்டிற்கும் ஹிந்து மதத்துக்கும் தொடர்பு இல்லை: ராகுல் | BJPs activism has nothing to do with Hinduism: Rahul Gandhi

லண்டன்: “பா.ஜ., பேசும் கொள்கைகளில் ஹிந்துயிசமோ, ஹிந்து தத்துவமோ இல்லை என்பதால் அவர்களுக்கும் ஹிந்து மதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்து உள்ளார். ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்., – எம்.பி., ராகுல், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள முன்னணி சமூக அறிவியல் நிறுவனமான பாரிஸ் பல்கலையில், மாணவர்கள் மத்தியில் நேற்று முன்தினம் உரையாற்றினார். ‘இந்தியாவின் வெளியுறவு கொள்கை நிலைப்பாடு’ என்ற தலைப்பில் பேசிய அவர், மாணவர்களின் பல்வேறு … Read more

‘மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் குறித்து மோடியுடன் பேசினேன்’ – வியாட்நாமில் ஜோ பைடன் பேட்டி

ஹனோய்: இந்தோ – அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடியுடன் கணிசமான விவாதங்களை நிகழ்த்தியதாகவும், ஜி20 உச்சி மாநாட்டில் மோடியை சந்தித்தபோது மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். வியட்நாம் தலைநகரில் ஹனோயில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: “ஜி 20 உச்சி மாநாட்டை நடத்திய இந்திய பிரதமர் மோடியின் தலைமை மற்றும் விருந்தோம்பலுக்காக நான் மீண்டும் ஒருமுறை … Read more

இரட்டை கோபுர தாக்குதல் முடிந்து 22 ஆண்டு | 22 years since the Twin Towers attack

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவின் புகழ் பெற்ற உலக வர்த்தக மையம் இரட்டை கோபுர பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு 22 வது ஆண்டு நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2001 செப்-9 ல் காலை மணிக்கு இந்த பயங்கரவாத சம்பவம் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்நாளில் மொத்தம் 2,977 பேர் கொல்லப்பட்டனர். 93 நாட்டை சேர்ந்தவர்கள் பலியாகினர். 110 மாடி கொண்ட இந்த கோபுரத்தில் 47 மாடிகள் முழுமையாக சேதமுற்றன. அமெரிக்காவில் இன்று நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகிறது. … Read more

இந்தியாவின் ராஜதந்திரம்… சீனாவின் BRI திட்டத்தில் இருந்து விலகும் இத்தாலி!

Belt and Road Initiative:: ஜி-20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் இராஜதந்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இருந்து தான் விலக் போவதாக என்று சீனாவிடம் இத்தாலி சுட்டிக்காட்டியுள்ளது.

ஜி-20 உச்சி மாநாடு | சர்வதேச ஊடகங்கள் புகழாரம்

ஜி-20 உச்சி மாநாடு தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்வதேச ஊடகங்கள் இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாராட்டி செய்தி, கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. “பொதுவாக சர்வதேச மாநாடுகளில் அமெரிக்க அதிபரே ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால் ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைவிட இந்திய பிரதமர் மோடியே ஆதிக்கம் செலுத்தினார். உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன. ரஷ்யாவை தனிமைப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் … Read more

எதிர்க்கட்சிக் கூட்டணியின் பெயர் என்பதால் பாஜகவுக்கு "இந்தியா" என்ற பெயர் எரிச்சலூட்டுகிறது – ராகுல் காந்தி

பாரிஸ், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட பல நாட்டு மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது வெளிநாட்டு மற்றும் இந்திய மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதிலளித்து பேசினார். அதில் பேசிய அவர், “இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா, பாரத் ஆகிய இரண்டு சொற்களுமே உள்ளன. அதனால் எங்களுக்கு அந்த இரண்டு சொற்களின் பயன்பாட்டிலுமே எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டதால் பாஜகவுக்கு இந்தியா என்ற பெயர் … Read more

பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இருந்து விலகுகிறோம்: சீன பிரதமரிடம் தெரிவித்தார் இத்தாலி பிரதமர் மெலோனி

ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் ஆசியாவை சாலை மற்றும் கடல் மார்க்கமாக இணைக்க பெல்ட் அன்ட் ரோடு (பிஆர்ஐ) திட்டம் செயல்படுத்தப்படும் என சீனா அறிவித்தது. இந்த திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜி7 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இத்தாலி மட்டுமே கடந்த 2004-ம் ஆண்டு பிஆர்ஐ திட்டத்தில் இணைந்தது. இந்த சூழ்நிலையில், சீனாவுடனான பிஆர்ஐ ஒப்பந்தம், எங்கள் நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என இத்தாலி வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி … Read more

உக்ரைன் போர் பற்றிய ஜி-20 மாநாட்டு தீர்மானம் பைடனின் முயற்சிக்கு ஒரு பெரிய முன்னெடுப்பாக இருக்கும்: வெள்ளை மாளிகை

வாஷிங்டன், டெல்லியில் பாரத் மண்டபத்தில் நேற்றும், இன்றும் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநாட்டுக்கு அழைப்பு விடப்பட்ட மற்ற தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பல்வேறு விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. சர்வதேச விவகாரங்களில் தீர்வு காண்பதற்கான வழிகளை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர். ஜி-20 உச்சி மாநாட்டில் உக்ரைன் மற்றும் ரஷியா போர் தொடர்பாக … Read more