உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனம் வழங்கிய உணவை சாப்பிட்ட 200 பேர் மயக்கம்
காபூல், கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணம் சட்காய் பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. அதன் சார்பில் அங்குள்ள பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனை வாங்கி சுமார் 500 பேர் சாப்பிட்டனர். ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவர்கள் உள்பட பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன்படி சுமார் 200 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினத்தந்தி Related Tags : ஆப்கானிஸ்தான் … Read more
தினமும் ரூ.81 லட்சம் அபராதம்… META நிறுவனத்திற்கு ஏற்பட்ட சோதனை!
மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான மெட்டா நிறுவனம் மெட்டா மிக பெரிய அளவில் அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
Woman arrested over Russian plot to kill Ukrainian president Zelensky | உக்ரைன் அதிபரை கொல்ல சதி திட்டம் தீட்டிய மர்ம பெண் கைது
கீவ்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷ்யாவின் சதி திட்டத்திற்கு உதவியதாக பெண் ஒருவரை உக்ரைன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையில், உக்ரைனில் உள்ள ஆயுத கிடங்குகள் உள்ளிட்ட முக்கிய உளவு தகவல்களை ரஷ்ய ராணுவத்திற்கு தகவல் கொடுத்து வந்தது தெரியவந்தது. ஓராண்டுக்கு மேலாக! உக்ரைன் மீது ரஷ்யா, ஓராண்டுக்கு மேலாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கெர்சன், மரியுபோல் நகரங்கள் உருக்குலைந்தன. இரு நாடுகளுக்கும் இடையே, 500 … Read more
தென் சீனக்கடல் விவகாரம்: சீன தூதரிடம் எதிர்ப்பை தெரிவித்த பிலிப்பைன்ஸ்
மணிலா, உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றாக தென் சீனக்கடல் விளங்குகிறது. இங்கு சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான் மற்றும் புருனே ஆகிய நாடுகளிடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது. சர்ச்சைக்குரிய இந்த கடற்பகுதியில் அமைந்துள்ள தாமஸ் ஷோல் தீவு, பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இங்கு உணவு, நீர் மற்றும் எரிபொருள் போன்றவற்றை வழங்குவதற்காக பிலிப்பைன்ஸ் படகு சென்றது. இந்த படகை சீன ராணுவ கப்பல் மூலம் கடலோர காவல் படையினர் சேதப்படுத்தினர். சீனாவின் இந்த … Read more
Girls are not allowed to study above 3rd standard | 3ம் வகுப்புக்கு மேல் பெண் படிக்க தடை
ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் பெண் குழந்தைகள் 3ம் வகுப்பிற்கு மேல் படிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு ஒவ்வொன்றாக விதித்து வருகிறது. 10 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளியை விட்டு அனுப்புமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கு எதிராக தலிபான் அரசால் விதிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகளும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது பெண் குழந்தைகள் 3ம் … Read more
இலங்கையில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது: 2 வீரர்கள் சாவு
கொழும்பு, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று திரிகோணமலையில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலையில் வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டது. காலை 11.25 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் 2 நிமிடங்களில் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த விமானி மற்றும் விமானப்படை அதிகாரி என 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பி.டி.6 ரகத்தை சேர்ந்த இந்த விமானம் சீனாவில் இருந்து வாங்கப்பட்டது ஆகும். தினத்தந்தி Related Tags … Read more
G-20 ஆவணங்களில் 'வசுதைவ குடும்பகம்'… என்ற வார்த்தை கூடாது என எதிர்க்கும் சீனா!
இந்தியா தொடர்பாக பல விஷயங்களில் தலையிட்டு வரும் சீனா, தற்போது ‘வசுதைவ குடும்பம்’ என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய ஊடகத்துக்கு நிதியுதவி வழங்கும் சீனா: அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அதிர்ச்சி தகவல்
நியூயார்க்: இந்திய ஊடகத்துக்கு சீன தரப்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் 5 நிருபர்கள், சர்வதேச அரங்கில் சீனாவின் திரைமறைவு நடவடிக்கைகள் தொடர்பாக புலனாய்வு செய்து விரிவான செய்தியை தயார் செய்துள்ளனர். இந்த செய்தி கடந்த 5-ம் தேதி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியானது. இதில், சீனாவுக்கு சாதகமாக செயல்பட இந்திய ஊடகத்துக்கு சீன தரப்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மேலும் … Read more
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சேலை உடுத்தி வந்த 700 இந்திய வம்சாவளி பெண்கள்: ஆடல், பாடலுடன் களை கட்டிய லண்டன்
லண்டன்: கைத்தறி நெசவாளர்களை நினைவுகூர்ந்து அவர்களை கவுரவிக்கும் விதமாக, தேசிய கைத்தறி தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்ததன்படி தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்கள் 700 பேர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடினர். பல மாநிலங்களைச் சேர்ந்த அந்த பெண்கள், பல வண்ணங்களில் தங்கள் பாரம்பரிய சேலைகளை அணிந்து … Read more