எவரெஸ்ட் சிகரம் அருகே ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி

காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரம் அருகே நேபாளத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 5 பேர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்களாவர். தனியாருக்குச் சொந்தமான 9N-AMV என்ற எண் கொண்ட இந்த ஹெலிகாப்டர் ஒன்று இன்று (ஜூலை 11) காலை சொலுகுன்வு மாவட்டத்தின் சுர்கே பகுதியில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட 15 வது நிமிடத்திலேயே இது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதும், அதில் பயணம் செய்தோர் உயிரிழந்ததும் பின்னர் … Read more

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டதாக ஐ.நா. தகவல்

நியூயார்க்: வறுமை ஒழிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச வறுமைக் குறியீட்டு அறிக்கையின் அண்மைக் குறிப்பில் இது இடம்பெற்றுள்ளது. யுஎன்டிபி எனப்படும் ஐ.நா. வளர்ச்சித் திட்டம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்தியாவில் வறுமை நிலவரம் தொடர்பாக 2005/2006 முதல் 2019/2021 வரையிலான 15 ஆண்டு காலத்தில் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் … Read more

எவரெஸ்ட் சிகரம் அருகே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்… 6 பேரின் கதி என்ன?

நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 5 பேரை ஏற்றிச் சென்ற மனாங் ஏர் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், காத்மாண்டுக்குத் இன்று காலை திரும்பிக் கொண்டிருந்தது. காலை 10 மணிக்கு புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் 10:15 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மனாங் ஏர் ஹெலிகாப்டர், 9N-AMV என்ற அந்த ஹெலிகாப்டரை கேப்டன் சேட் குருங் என்பவர் இயக்கினார். சொலுகும்புவில் உள்ள சுர்கி என்ற இடத்தில் இருந்து … Read more

பெருவை மிரட்டும் அரிய நோய்… அவசர நிலை பிரகடனம்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கோடிக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளில் பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டது. இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றது. கொரோனா தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் தற்போது தான் மீண்டு வருகின்றன. இந்நிலையில் அரிய வகை நோய் ஒன்று பெரு நாட்டை ஆட்டிப் படைத்து வருகிறது. அரிய நரம்பியல் கோளாறு நோயான Guillain-Barré Syndrome நோய் பெரு நாட்டு மக்களிடையே … Read more

Iceland, volcano erupts in Reykjavik after small earthquakes | ஐஸ்லாந்தில் நிலநடுக்கம் காரணமாக வெடித்த எரிமலை: புகை மண்டலமான பகுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரெய்க்யவிக்: கடந்த சில தினங்களாக ஐஸ்லாந்தில் ஏற்பட்டு வந்த நிலநடுக்கம் காரணமாக, எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது. நெருப்புக் குழம்பு வெளியேறியதால் புகை மண்டலமாக காட்சியளித்தது. வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தின் தலைநகரமான ரெய்க்யவிக்கை சுற்றியுள்ள பகுதிகளில், சில நாட்களுக்கு முன், 2 ஆயிரத்து 200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்து இருந்தது. எரிமலை எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கை … Read more

தென் ஆப்பிரிக்காவில் பனிப்பொழிவு: அரிதான நிகழ்வால் மக்கள் மகிழ்ச்சி

ஜோஹனெஸ்பெர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோஹனெஸ்பெர்க் நகரில் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் ஆங்காங்கே மூடப்பட்டுள்ளன. நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரமாக அறியப்படுவதால் வியாபார, வர்த்தக ரீதியாக இந்த பனிப்பொழிவால் சிரமங்கள் இருந்தாலும் இத்தகைய அரிதான நிகழ்வு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகின்றனர் ஜோஹனெஸ்பெர்க் நகரவாசிகள். ஆனால், திடீர் பனிப்பொழிவால் மிகக் கடுமையான குளிர்நிலை ஏற்படலாம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஜோஹனெஸ்பெர்க் நகரத்தில் கடந்த வாரம் தொடங்கி கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. கடந்த வார இறுதியில் இது “cut-off low” … Read more

நாயை கண்டமேனிக்கு கடித்து வைத்த நபர்… அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்!

நாய் மனிதனை கடிப்பது சகஜம். ஆனால் ஒரு மனிதனால் எப்போதாவது நாயைக் கடித்த சம்பவத்தைகேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது நம்ப முடியாத விஷயமாக தோன்றலாம், ஆனால் உண்மையில் நடந்த சம்பவம் தான். 

நைஜீரியாவில் லாரி மீது பஸ் மோதி 20 பேர் உயிரிழப்பு

அபுஜா, நைஜீரியாவின் தென்மேற்கு மாகாணமான லாகோஸ்-படக்ரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. மோவோ நகர் அருகே சென்றபோது அதன் முன்னால் சென்ற மணல் லாரியை பஸ் முந்த முயன்றது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினத்தந்தி Related Tags … Read more

காதலிக்கு ரூ.900 கோடி வழங்கிய இத்தாலி முன்னாள் பிரதமர்

ரோம்: இத்தாலி நாட்டின் பிரதமராக 4 முறை சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி வகித்தார். அவருக்கு 2 மனைவிகள். 2020-ம் ஆண்டில் மார்தா பாசினா என்ற பெண் எம்.பி.யுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. அப்போது அவருக்கு 83 வயது. மார்தாவுக்கு 33 வயது. கடந்த மாதம் 12-ம் தேதி பெர்லுஸ்கோனி உயிரிழந்தார். தனது ரூ.56,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடர்பாக அவர் உயில் எழுதி வைத்துள்ளார். இதன்படி பெர்லுஸ்கோனியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன், மகளுக்கு பினின்வெஸ்ட் ஊடக … Read more

நெதர்லாந்தில் அரசியலை விட்டு விலகும் முன்னாள் பிரதமர் ரூட்டே

ஹேக், நெதர்லாந்து நாட்டை பொறுத்தவரை அகதிகளை குடியமர்த்துவது என்பது மிகவும் தீவிர பிரச்சினையாக உள்ளது. எனவே இவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது தொடர்பான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்காததால் பிரதமர் மார்க் ரூட்டே தனது பதவியை கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அவர் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அங்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் … Read more