நெதர்லாந்தில் சரக்கு கப்பலில் தீ விபத்து: காயமடைந்த 20 இந்திய மாலுமிகள் தாயகம் திரும்பினர்

தி ஹேக், ஜெர்மனியில் இருந்து ‘பிரீமென்ட்டில் ஹைவே’ என்ற சரக்கு கப்பல் 3,800-க்கும் அதிகமான கார்களுடன் இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் முழுவதும் இந்திய மாலுமிகளால் இயக்கப்பட்டது. அந்த கப்பலில் 21 இந்திய மாலுமிகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி நெதர்லாந்து நாட்டில் உள்ள அமிலாந்து தீவுக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது ‘பிரீமென்ட்டில் ஹைவே’ சரக்கு கப்பலில் திடீரென தீப்பிடித்தது. இதில் மாலுமி ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் காயங்களுடன் உயிர் … Read more

பள்ளிகளில் சீக்கிய மாணவர்கள் ‘கிர்பான்’ குறுவாள் வைத்துக் கொள்ள அனுமதி: தடையை நீக்கியது ஆஸ்திரேலிய நீதிமன்றம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று, சீக்கிய மாணவர்கள் ‘கிர்பான்’ கத்தியை வைத்துக் கொள்ள தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்துள்ளது. சீக்கியர்கள் தங்கள் மதநம்பிக்கையின் ஓர் அங்கமாக, எப்போதும் தங்களுடன் வைத்திருக்க வேண்டிய ஐந்து மத அடையாளங்களில் ஒன்றான கிர்பான் என்னும் குறுவாளுக்கு எதிரான தடை பாரபட்சமாக இருப்பதாகக் கூறி, கமல்ஜித் கவுர் அத்வால் என்பவர் கடந்த ஆண்டு குயின்ஸ்லேண்ட் மாகாண நிர்வாகத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சீக்கியர்கள் தங்கள் மத … Read more

3 years imprisonment for Imran Khan | இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவரால் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்த போது, வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை, அரசு கருவூலத்தில் சேர்க்காமல், அவற்றை விற்று சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பரிசு … Read more

தாய்லாந்து: சரக்கு ரெயில் – கார் மோதிய விபத்தில் 8 பேர் பலி

பாங்காக், தாய்லாந்து நாட்டின் சஷொன்சொ மாகாணம் மியோங் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கார் சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியில் 8 பேர் பயணித்தனர். கார் அதிகாலை ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முற்பட்டது. அப்போது, வேகமாக வந்த சரக்கு ரெயில், கார் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த … Read more

கொரோனாவின் புதிய மாதிரி எரிஸ் வைரஸ்… ஒளிந்திருக்கும் ஆபத்து… அலறும் இங்கிலாந்து!

கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டதும் அலராத நபர்கள் யாருமே இருக்க முடியாது. 21ஆம் நூற்றாண்டில் பேரழிவை ஏற்படுத்தி சென்ற ஒரு நுண்ணுயிரி. பல கோடி பேரை வீட்டிற்குள், மருத்துவமனையில் முடக்கி போட்டது. லட்சக்கணக்கில் உயிர்களை பலி வாங்கியது. இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு லாக்டவுன் என்ற பெயரில் உலகின் வாழ்க்கை முறையே மாறிப் போனது. இன்று கூட இதன் சுவடுகள் தொடர்வதை பார்க்கலாம். கொரோனா கண்டு பதற்றம் வேண்டாம் – மா.சப்பிரமணியன் நம்பிக்கை கொரோனா வைரஸ் … Read more

'பிரேக்கிங் பேட்', 'பெட்டர் கால் சால்' தொடர்களில் நடித்த பிரபல நடிகர் மார்க் மார்கோலிஸ் காலமானார்

நியூயார்க், ‘பிரேக்கிங் பேட்’, ‘பெட்டர் கால் சால்’ தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்தித்தில் நடித்த மார்க் மார்கோலிஸ் (83) காலமானார். நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் காலமானார் என்று அவரது மகனும், நடிகரும், நிட்டிங் பேக்டரி என்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரியுமான மோர்கன் மார்கோலிஸ் தெரிவித்தார். 1970 களில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மார்கோலிஸ் அன்றிலிருந்து தற்போது வரை நடித்துவந்தார். திரைப்படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தாலும், “பிரேக்கிங் பேட்” மற்றும் “பெட்டர் … Read more

சீனாவின் ராணுவ நடவடிக்கையால் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க நியூசிலாந்து திட்டம்

சீனா தனது ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கு தொடர்ந்து அதிக முதலீடு செய்து வருகிறது. இதனால் பசிபிக் கடற்பகுதியில் உள்ள நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பசிபிக் பகுதியில் உள்ள நியூசிலாந்து தனது பாதுகாப்பு திறன்களை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரி ஆண்ட்ரூ லிட்டில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, `நாட்டின் தற்போதைய பாதுகாப்பு செலவு பொருளாதாரத்தில் 1 சதவீதமாக உள்ளது. நாடு தற்போது சைபர் தாக்குதல்கள், … Read more

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு கூடுதலாக 19 ஆண்டுகள் சிறை

மாஸ்கோ: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு 19 ஆண்டுகள் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013-ம் ஆண்டு அலெக்ஸி மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாஸ்கோ நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தொடர்ந்து மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றங்களுக்காக அலெக்ஸி நவல்னிக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை … Read more

ஸ்வீடனில் கலாசார விழாவில் வன்முறை; 50 பேர் படுகாயம்

எத்தியோப்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்து எரித்திரியா கடந்த 1991-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. தற்போது எரித்திரியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடான சுவீடனில் வசித்து வருகின்றனர். அவர்கள் ஆப்பிரிக்க கலாசாரத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கலாசார விழா கொண்டாடுகின்றனர். அதன்படி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கலாசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீசார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் … Read more

18 killed in bus overturn: What is the condition of 6 Indians? | பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி: 6 இந்தியர்கள் நிலை என்ன?

மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் ஆறு இந்தியர்கள் உட்பட, 40 பயணியருடன் சென்ற பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 18 பேர் பலியாகினர்; 22 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களின் அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், மேற்கு மெக்சிகோவில் இருந்து ஆறு இந்தியர்கள் உட்பட 40 பயணியருடன் பஸ் ஒன்று, டிஜுவானா நகரை நோக்கி நேற்று முன் தினம் சென்றது. நயாரிட் மாகாண தலைநகர் டெபிக் அருகே … Read more