தென் ஆப்பிரிக்காவில் பஸ்கள் மோதல்; 77 பேர் படுகாயம்

ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்க பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்குள்ள மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்தது. பல்கலைக்கழகத்தின் முன்பு வந்தபோது எதிரே வந்த மற்றொரு பஸ் இதன்மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மாணவர்கள் உள்பட 77 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை … Read more

Campaign of Indian origin contesting the presidential election | அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி பிரசாரம்

சிங்கப்பூர், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம், 66, தன் அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரத்தை நேற்று துவக்கினார். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்து வரும் ஹலிமா யாகோபின் ஆறு ஆண்டு பதவி காலம் செப்., 13ல் முடிவுக்கு வருகிறது. இதை தொடர்ந்து, செப்., மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடப் போவதாக, அந்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் கோ, முதலீட்டு மேலாளர் … Read more

ஆஸ்திரேலியா கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்… 50க்கும் மேற்பட்டவை பலி

ஆஸ்திரேலியா, டால்பின் மீன் வகைகளில் அளவில் பெரிய வகையை சேர்ந்தவை பைலட் திமிங்கலங்கள். அவை ஒரு குழுவாக நீந்தி செல்லும்போது, ஒரு திமிங்கலத்தை பின்தொடர்ந்து மற்ற அனைத்தும் ஒன்றாக செல்லும் பழக்கம் உடையவை. நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்க தொடங்கின. அவற்றில் 50-க்கும் மேற்பட்டவை நேற்று உயிரிழந்தது. இந்த திமிங்கல குழு முதல் முதலில் மேற்கு ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரமான அல்பனியின் செய்ன்ஸ் கடற்கரை … Read more

ஓட்டல் 'பாத் டப்'-இல் தலையில்லாமல் குளித்த முண்டம்.. ஜப்பானில் பயங்கரம்

டோக்கியோ: ஜப்பானில் உள்ள ஒரு ஓட்டலில் பாத் டப்பில் தலையில்லாமல் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், ஒரு சைக்கோ குடும்பத்தால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஜப்பானின் ஒக்கைடோ தீவில் உள்ள லவ் ஓட்டல் என்ற பெயரில் லாட்ஜுடன் இணைந்த உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை ஹிட்டோஷி உரா என்ற 62 வயது நபர் ஒரு பெண்ணுடன் வந்திருக்கிறார். இருவரும் அங்கு உணவருந்திவிட்டு ஓட்டல் அறைக்கு சென்றனர். … Read more

இந்தியாவின் ஏற்றுமதி தடை எதிரொலி: ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை அடித்துப்பிடித்து அரிசி வாங்கும் இந்தியர்கள்

சிட்னி, உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தடை காரணமாக அரிசி விலை உயரக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஆசிய, ஆப்பிரிக்க மக்களின் பிரதான உணவுப்பொருளாக அரிசி உள்ளது. அதிலும் இந்தியர்களுக்கு, அவர்கள் உள்நாட்டில் வசித்தாலும், வெளிநாட்டில் வசித்தாலும், அரிசி சோறு உண்டால்தான் ‘சாப்பிட்டது’ போலவே இருக்கும். … Read more

ரஷிய பாதுகாப்பு மந்திரி வடகொரியாவுக்கு திடீர் பயணம்

மாஸ்கோ, ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்கே சொய்கு மற்றும் அந்நாட்டு ராணுவ குழுவினர், வடகொரியா நாட்டுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். இதன்படி, சுனான் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று சேர்ந்த அவரை வடகொரிய பாதுகாப்பு மந்திரி காங் சுன்-னாம் வரவேற்றார். கொரிய போர் நிறைவடைந்த 70-வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ரஷிய குழு பங்கேற்க உள்ளது. இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த உதவும் என அமைச்சகம் தெரிவித்து உள்ளது. சீன … Read more

Increase in compulsory military service age limit | கட்டாய ராணுவ சேவை வயது வரம்பு அதிகரிப்பு

மாஸ்கோ : ரஷ்யாவில் கட்டாய ராணுவ சேவைக்கான வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் ஆண்கள் குறைந்தபட்சம் சில ஆண்டுகள் ராணுவத்தில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இதன்படி ரஷ்யாவில் 18 – 27 வயதுக்குள் உள்ள ஆண்கள் குறைந்தது ஒரு ஆண்டாவது கட்டாயம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். தற்போது உக்ரைனுடன் நடந்து வரும் போர் காரணமாக இந்த வயது வரம்பை அதிகரிக்க ரஷ்ய அரசு முடிவு செய்தது. இதன்படி … Read more

Britain can take part in the vote on visas until noon tomorrow | பிரிட்டன் விசா பெற வாக்கெடுப்பு நாளை மதியம் வரை பங்கேற்கலாம்

லண்டன் : பிரிட்டன் – இந்தியா இளம் வல்லுனர்கள் திட்டத்தின் கீழ் விசா பெறுவதற்கான இரண்டாவது வாக்கெடுப்பை பிரிட்டன் அரசு நேற்று துவங்கியது. ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த இளைஞர்கள் இந்தியாவுக்கும் இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் பிரிட்டனுக்கும் சென்று படிக்கவும் பணியாற்றவும் பிரிட்டன் – இந்தியா இளம் வல்லுனர்கள் திட்டம் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது. கடந்த ஆண்டு நவ., மாதம் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் நடந்த ‘ஜி – 20’ மாநாட்டின் போது பிரதமர் மோடி … Read more

“காட்டுத் தீயால் எங்கள் நாட்டில் போர்ச் சூழல்” – கிரீஸ் பிரதமர் வேதனை

ஏதென்ஸ்: தீப்பிழப்புகளுடன் எங்கள் நாடு போர்ச் சூழலில் இருப்பதாக கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கிரீஸில் கடந்த சில நாட்களாகவே காட்டுத் தீ தீவிரம் காட்டி வருகிறது. நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதால் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கிரீஸ் சென்றுள்ள சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்துள்ளன. இதுகுறித்து கிரீஸ் அரசு தரப்பில், “காட்டுத் தீ மிகவும் ஆபத்தானது. தீர்மானிக்க முடியாதது. காட்டுத் தீயால் பாதிக்கப்படக் கூடிய பகுதிக்கு நீங்கள் பயணிக்க வேண்டியிருந்தால், பயணம் … Read more

The scorching heat in Greece: the rapidly spreading forest fire: the countrys prime minister is in pain as it is a war situation | கிரீசில் தகிக்கும் வெயில்: வேகமாக பரவும் காட்டுத்தீ: நாட்டில் போர்ச் சூழல் என அந்நாட்டு பிரதமர் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரோட்ஸ்: கிரீஸ் நாட்டில், மூன்றாவது ஆண்டாக கடுமையான வெப்ப அலை மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஷியசை கடந்ததால், பெரும்பாலான தீவுகளில் காட்டுத்தீ பரவி உள்ளது. இது குறித்து, காட்டு தீ காரணமாக, எங்கள் நாட்டில் போர்ச் சூழல் நிலவுகிறது என அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் வேதனை தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீசில், கடந்த 2017 மற்றும் 2022ல் கடுமையான வெப்ப அலை ஏற்பட்டது. … Read more