டைட்டன் நீர்மூழ்கி சுற்றுலா வாகனத்தின் சிதைந்த பகுதிகள் மீட்பு: மனித உடல் எச்சங்கள் ஒட்டியிருப்பதாக தகவல்

நியூஃபவுண்டலேண்ட்: பேரழுத்தத்தின் காரணமாக சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி சுற்றுலா வாகனத்தின் சிதைந்த பாகங்கள் சில மீட்கப்பட்ட நிலையில் அவற்றில் மனித உடலின் எச்சங்கள் ஒட்டிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு அட்லான்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை சுற்றிக் காண்பிக்க சுற்றுலா பயணிகளுடன் சென்ற டைட்டன் நீர்மூழ்கி வாகனம் அண்மையில் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சிக்கி வாகனத்தில் இருந்த 5 சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருமே பெரும் பணக்காரர்கள். இந்நிலையில், அந்த வாகனத்தின் சிதைந்த … Read more

டைட்டன் நீர்மூழ்கி கப்பல்: சிதறிய உடல்கள்.. மிஞ்சிய எச்சங்கள் மீட்பு.. அமெரிக்க கடலோர காவல்படை திடுக்!

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த டைட்டானிக் சொகுசு கப்பல் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. கடலுக்கு அடியில் கிடக்கும் இந்த டைட்டானிக் கப்பலை காண கடந்த 18 ஆம் தேதி 5 பேர் கொண்ட குழு ஓஷன் கேட் என்ற நீர்மூழ்கி கப்பலில் சென்றது. ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- நீர்மூழ்கி கப்பல் புறப்பட்ட சில மணி நேரங்களில் அனைத்து தொடர்புகளையும் இழந்தது. … Read more

Famous singer Madonna in the hospital | மருத்துவமனையில் பிரபல பாடகி மடோனா

நியூயார்க்: அமெரிக்க பிரபல பாடகி மடோனா, 64, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பலத்த பாக்டீரியா தொற்று இருப்பதால் ஐ.சி.யூ.,வில் சேர்க்கப்பட்டார். மேலும் இவருடைய வெளிநாட்டு கச்சேரிகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளாக பாப் பாடலில் பெரும் புகழ் பெற்றவர் மடோனா. நியூயார்க்: அமெரிக்க பிரபல பாடகி மடோனா, 64, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பலத்த பாக்டீரியா தொற்று இருப்பதால் ஐ.சி.யூ.,வில் சேர்க்கப்பட்டார். மேலும் இவருடைய புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

ஸ்லீப் அப்னியா நோய்க்கு CPAP கருவியைப் பயன்படுத்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த சில வாரங்களாக ‘ஸ்லீப் அப்னியா’ எனப்படும் உறக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் நோய்க்கு CPAP சிபேப் எனும் கருவியைப் பயன்படுத்தி சிகிச்சை பெறுகிறார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. சமீபகாலமாக பைடனின் முகத்தில் சிபேப் கருவி பொறுத்தியதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கிய நிலையில் அது பேசுபொருளானது. இது தொடர்பாக வெளியான பல்வேறு ஊகங்களை களையும் வண்ணம் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அதிபர் பைடன் … Read more

Human Remains Recovered From Wreckage Of Titanic Sub: US Coast Guard | நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறி உயிரிழந்த 5 தொழிலதிபர்கள் உடல்கள் மீட்பு: அமெரிக்க கடலோர காவல்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ‛‛டைட்டானிக்” கப்பலை பார்க்க சென்ற போது நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறி உயிரிழந்த 5 தொழிலதிபர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 1912ம் ஆண்டு பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகள், கடனா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் மூழ்கிக் கிடக்கிறது. ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற … Read more

உலகில் உள்ள தனியார் படைகள்! அரியணையையே கவிழ்க்கும் சக்தி படைத்த ’தனியார் ராணுவங்கள்’

Private Armies: ராணுவம் தொடர்பான செய்திகளை அடிக்கடி கேட்கிறோம். ஆனால், உலகில் ‘வாக்னர்’ போன்ற பல ஆபத்தான தனியார் படைகள் உள்ளன, அவற்றின் வேலை என்ன, எவ்வளவு சக்தி?

இந்தியாவால் இலங்கைக்கு ஐஎம்எப் நிதியுதவி கிடைத்தது: இந்தியாவுக்கான இலங்கை தூதர் தகவல்

புதுடெல்லி: இந்தியா இலங்கைக்கு வழங்கிய நிதியுதவியால்தான் தங்கள் நாட்டுக்கு ஐஎம்எப் நிதியுதவி கிடைத்தது என இந்தியாவுக்கான இலங்கை தூதர் தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஏப்ரல் மாதம் இலங்கையில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது. இதனால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு மிகவும் மோசமான நிதி நெருக்கடி ஏற்பட்டது. கடும் பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், பால், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்தன. … Read more

Indian-origin boy dies after consuming protein drinks | புரதசத்து பானத்தில் எச்சரிக்கை வாசகம்: 16 வயது சிறுவன் பலியானதால் உத்தரவு

லண்டன்: பிரிட்டனில் புரதசத்து பானம் குடித்து 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், அதுபோன்ற பானங்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என, அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர். ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வந்த ரோஹன் கோதானியா என்ற 16 வயது இந்திய வம்சாவளி சிறுவனுக்கு, 2020, ஆக., 15ல் அவரது தந்தை புரதசத்து நிறைந்த பானமான, ‘புரோட்டீன் ஷேக்’ வாங்கி தந்தார். அந்த சிறுவனின் உடல்வாகு வயதுக்கு ஏற்ற சதைப்பிடிப்புடன் இல்லாதததால், உடல் … Read more

9 members of the same family were shot dead in a dispute over a marriage arrangement in Pak | பாக்.,கில் திருமண ஏற்பாட்டில் தகராறு ஒரே குடும்பத்தின் 9 பேர் சுட்டுக்கொலை

பெஷாவர், பாகிஸ்தானில் திருமணத்தை ஒட்டி ஏற்பட்ட தகராறில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஒன்பது பேரை, அவர்களின் உறவினர்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பட்கேலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில், உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருமண வீட்டில் அனைவரும் உறங்கியபோது, அவர்களின் உறவினர்கள் சிலர் உள்ளே … Read more

அரசு கோப்புகளில் அழிக்கக் கூடிய மையைக் கொண்ட பேனாவில் கையொப்பம் – ரிஷி சுனக்கை சுற்றும் புது சர்ச்சை

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அரசு கோப்புகளில் கையெழுத்திட எளிதில் அழிக்கக் கூடிய மையைக் கொண்ட பேனாக்களை (Erasable ink pen) பயன்படுத்துகிறார் என்று புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தி கார்டியன் தினசரி நாளிதழ் வெளியிட்ட செய்தியில் பிரதமர் ரிஷி சுனக் இப்படியான பேனாவை பயன்படுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.495க்கும், இங்கிலாந்து மதிப்பில் 4.75 பவுண்டுக்கும் கிடைக்கும் `பைலட் வி (Pilot V)’ ஃபவுன்டைன் பேனாவைப் பயன்படுத்தி பிரதமர் ரிஷி அமைச்சரவைக் குறிப்புகள், அரசாங்க … Read more