அசாம்: மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக கூறி தம்பதி உயிருடன் எரித்து கொலை

திஸ்பூர், அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள பெலுகுரி முண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கார்டி பிருவா(43). இவரது மனைவி மிரா பிருவா(33). இவர்கள் இருவரும் மாந்திரீகம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தாக கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கார்டி பிருவாவின் வீட்டை அடித்து நொறுக்கினர். பின்னர் கார்டி பிருவா மற்றும் அவரது மனைவி மிரா ஆகிய இருவரையும் அவர்களின் வீட்டு வாசலில் வைத்து … Read more

கோமாவில் இருந்த கிரிக்கெட் வீரர்…8 ஆண்டுகளுக்கு பின் உயிரிழப்பு

கொழும்பு இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ(Akshu Fernando) (வயது 25) வலது கை துடுப்பாட்டக்காரரான பெர்னாண்டோ, 2008 ஆம் ஆண்டில் பாணந்துறை அணிக்காக 23 வயதுக்குட்பட்டோர் போட்டியில் விளையாடியதன் மூலம் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேலும், கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப், பாணந்துறை விளையாட்டுக் கழகம் மற்றும் சிலாவ் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கடந்த 2018 டிசம்பர் 28 அன்று, மவுண்ட் லவ்னியாவில் கடற்கரையில் பயிற்சி அமர்வின் போது, ரெயில் … Read more

வங்காளதேச முன்னாள் பிரதமர் உடல் அடக்கம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியவாத கட்சி தலைவருமானவர் கலிதா ஜியா (வயது 80). இவர் இதயம், நுரையீரல் தொற்று உள்ளிட்ட உடல்நல பிரச்சினை காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, கலிதா ஜியா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு நாடுகளில் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேவேளை கலீதா ஜியாவின் மறையை தொடர்ந்து வங்காளதேசத்தில் 3 … Read more

உலகில் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்தது

புதுடெல்லி, உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2025-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் இந்தியா ஜப்பானை முந்தி உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இந்த சீரான வளர்ச்சியில் சென்றால் 2030-ம் ஆண்டுக்குள் 7.30 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற … Read more

பெண்கள் ஆக்கி லீக்: ராஞ்சி ராயல்ஸ் அணி வெற்றி

ராஞ்சி, 4 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 2-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 3-வது லீக்கில் ராஞ்சி ராயல்ஸ் அணி, ஷிராச்சி பெங்கால் டைகர்சை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ராஞ்சி அணி 5-0 என்ற கோல் கணக்கில் பெங்கால் டைகர்ஸ் அணியை பந்தாடியது. ராஞ்சி அணியில் ஹன்னா காட்டர் (10-வது நிமிடம்), பியூட்டி டங்டங் (14-வது நிமிடம்), வான் டெர் … Read more

டிஜிட்டல் தகவல் அதிகரிப்பு: அஞ்சல் சேவையை முழுவதுமாக நிறுத்தியது டென்மார்க் அரசு

கோபன்ஹென், டென்மார்க் நாட்டின் அரசு அஞ்சல் சேவை துறை தனது அனைத்து கடித வினியோகங்களையும் இன்றுடன் நிறுத்தி உள்ளது. 400 ஆண்டுகள் பழமையான தனது பொது சேவைகளில் ஒன்றான நாட்டின் அஞ்சல் நிறுவனமான போஸ்ட் நார்ட் தனது இறுதிக்கடித்தை வழங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய கடிதம் வினியோக சேவையை முடிவுக்கு கொண்டு வந்த உலகின் முதல் நாடாக டென்மார்க் உருவெடுத்துள்ளது. நாட்டு மக்கள் டிஜிட்டல் தகவல் தொடர்புகளை அதிகளவில் நம்பியிருப்பதால் அஞ்சல் சேவைகளில் மிகப்பெரிய … Read more

சபரிமலை சன்னிதானத்தில் புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்களுக்கு தடை

சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி மண்டல பூஜை சீசனுக்காக திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சிகர நிகழ்ச்சியாக கடந்த 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. இதையடுத்து அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் … Read more

இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட்: தொடரை முழுமையாக வென்று இந்தியா அசத்தல்

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் … Read more

முற்றிய மோதல்.. வெனிசுலா துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்

வாஷிங்டன், வெனிசுலா நாட்டில், டிரென் டே அராகுவா என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்த துறைமுகப் பகுதியை அமெரிக்கப் படை வான்வழித் தாக்குதல் நடத்தி தகர்த்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “அவர்கள் (கடத்தல் கும்பல்) படகுகளில் போதைப்பொருட்களை ஏற்றினர், எனவே நாங்கள் அனைத்து படகுகளையும், அவர்கள் பயன்படுத்திய அந்தப் பகுதியையும் தாக்கி உள்ளோம். அது அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வந்த இடமாகும். அது இப்போது … Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக நிர்வாகிகளிடம் நாளை மீண்டும் சிபிஐ விசாரணை

புதுடெல்லி, கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். அப்போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையை, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு குழு கண்காணித்து வருகிறது. இந்த குழுவினரிடம் … Read more