திருப்பதி பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள்: பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 24- ந் தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி திருமலையில் உள்ள அன்னமய பவனில் காவல் துறை, திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தலைமை தாங்கி பக்தர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து, வாகன நிறுத்தம், கூட்ட நெரிசல் மேலாண்மை போன்ற அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை வழங்கினார். மேலும் … Read more

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா

லாகூர், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 255 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 121 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக அயபோங்கா காக்கா 2 விக்கெட் … Read more

பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து

ரோம், பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சி சார்பில் வெவ்வேறு வகையான சேவை பணிகள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன. அவருக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இன்று தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவருடைய தலைமைத்துவம் மற்றும் உள்ளார்ந்த … Read more

கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிடவைத்தோம்; பிரதமர் மோடி

போபால், பிரதமர் மோடி இன்று மத்தியபிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அம்மாநிலத்தின் தார் மாவட்டத்தில் பிரதமர் மந்திரியின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைகள் பூங்கா அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நமது சகோதரிகள், மகள்களின் கும்குமத்தை அவமதித்தனர். நாம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாத முகாம்களை அழித்தனர். நமது பாதுகாப்புப்படை வீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் … Read more

அடுத்த சுற்றுக்கு முன்னேறப்போவது யார்..? – பாகிஸ்தான் – யுஏஇ அணிகள் இன்று மோதல்

துபாய், , 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை … Read more

காசாவில் மீண்டும் தரைவழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் கிளர்ச்சியாளர்களை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் … Read more

நீங்கள் வாங்கும் பொருட்களில் இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

போபால், பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சி சார்பில் வெவ்வேறு வகையான சேவை பணிகள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன. அவருக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டினார். இதன்பின்னர் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். … Read more

ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல்; தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி முதல் இடம் பிடித்து அசத்தல்

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவருக்கான டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (884 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் பில் சால்ட் (838 புள்ளி), ஜாஸ் பட்லர் (794 புள்ளி) தலா 1 இடங்கள் முன்னேறி 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர். இந்தியாவின் திலக் வர்மா (792 புள்ளி) 2 இடங்கள் சரிந்து 4வது இடத்திற்கு வந்துள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் … Read more

900 ஆண்டுகள் பழமையான பெண்ணின் மண்டை ஓடு மூலம் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்

லண்டன், இங்கிலாந்தின் கெண்டல் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள் தொடங்கியது. அப்போது அங்குள்ள தேவாலயம் அருகே சில எலும்பு கூடுகள் கிடைத்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய ஆய்வில் அந்த எலும்பு கூடுகள் 900 ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதியானது. இதற்கிடையே அங்கு கைப்பற்றிய ஒரு பெண்ணின் மண்டை ஓடு மறுகட்டமைப்புக்கு ஏற்ற நிலையில் இருந்தது. எனவே அந்த பெண்ணின் முகம் எப்படி இருந்திருக்கும் என்பதை கண்டறியும் … Read more

யூடியூப் சேனல்களுக்கு லைசென்ஸ் – கர்நாடக அரசு பரிசீலனை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் நடைபெற்ற மின்னணு ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் துவக்க விழாவில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அந்த சங்கத்தின் சார்பில் சித்தராமையாவிடம் வழங்கப்பட்ட பரிந்துரையில், நெறிமுறையின்றி செயல்படும் யூடியூப் செய்தி சேனல்களால் பத்திரிகை துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் யூடியூப் செய்தி சேனல்களுக்கு லைசென்ஸ் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் எனவும் மின்னணு ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று, தொலைக்காட்சி சேனல்களைப் போலவே … Read more