மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் பகுதியில் அரசு உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சவனூரை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். இந்தநிலையில் அந்த மாணவிக்கு அவரது வகுப்பு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் அந்த ஆசிரியர் மாணவிக்கு மீண்டும், மீண்டும் பாலியல் தொல்லை கொடுக்கவே, ஒரு கட்டத்திற்கு மேல் அவரது தொல்லையை தாங்க முடியாத மாணவி, இதுகுறித்து நான் … Read more

2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

சண்டிகார், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகாரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. முதல் ஆட்டத்தில் இந்திய … Read more

அனில் அம்பானி நிறுவனத்தின் 13 வங்கிக்கணக்குகள் முடக்கம்

புதுடெல்லி, அனில் அம்பானிக்கு சொந்தமான ஆர்-இன்ப்ரா நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுமான திட்டங்களுக்கான பொது நிதியை மோசடி செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.மும்பையில் உள்ள போலி நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தம் வழங்குவதாக கூறி இந்த மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ஆர்-இன்ப்ரா நிறுவனத்துக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக ஆர்-இன்ப்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 13 … Read more

ஐ.பி.எல். 2026: மினி ஏலத்தில் எத்தனை தமிழக வீரர்களுக்கு இடம்..?

சென்னை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2026) மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கிறது. இதையொட்டி மொத்தம் 177 வீரர்கள் அணிகளில் தக்கவைக்கப்பட்டு, 71 பேர் விடுவிக்கப்பட்டனர். தற்போது 10 அணிகளுக்கும் சேர்த்து 31 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 77 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான ஐ.பி.எல். மினி ஏலம் அபுதாபியில் வருகிற 16-ந் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது. ஏலத்துக்கு முதலில் 1,355 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். … Read more

பாகிஸ்தான்-இந்தோனேசியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இஸ்லாமாபாத், இந்தோனேசியா அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் சென்றார். 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா அதிபர் ஒருவர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும். இஸ்லாமாபாத் சென்ற அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருநாடுகளுக்கு இடையே ராணுவம், பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பாக 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பாகிஸ்தான் நாட்டின் மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் இந்தோனேசியா சென்று பட்டப்படிப்பு படிப்பது போன்றவை இதில் … Read more

பாரதியாரின் கவிதைகள் துணிவைத் தூண்டின: பிரதமர் மோடி தமிழில் புகழாரம்

புதுடெல்லி, கவிஞர், எழுத்தாளர், விடுதலை போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 11-ம் தேதி) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.. அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை … Read more

ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை: ஜெர்மனி சாம்பியன்

சென்னை, 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 28-ந் தேதி தொடங்கிய இந்த போட்டியில் இன்று இறுதி ஆட்டம் நடைபெற்றது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ‘நம்பர் ஒன்’ அணியான ஜெர்மனி, 4-ம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி, ஸ்பெயின் அணியை 3-2 என்ற … Read more

சீனாவில் தீ விபத்து; 12 பேர் பலி

குவாங்சவ், சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டத்தின் சாந்தவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், தீ மளமளவென பரவியது. 150 சதுர மீட்டர் பரப்பளவுள்ள பகுதிகளுக்கு தீ பரவியது. இதில் சிக்கி 12 பேர் பலியானார்கள். 40 நிமிடங்களுக்கு பின்னர் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. சீனாவுக்கு உட்பட்ட ஹாங்காங் நகரில் … Read more

கேரளா உள்ளாட்சித் தேர்தல்: முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார்

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் 69.70 சதவீத வாக்குகள் பதிவானது. இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) 2-ம் கட்ட வாக்குப்பதிவு திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி … Read more

தி ஹண்ட்ரட் கிரிக்கெட்: லண்டன் ஸ்பிரிட்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் நியமனம்

லண்டன், ‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடர் என்பது இங்கிலாந்தில் நடைபெறும் ஒரு தொழில்முறை 100-பந்து போட்டியாகும். இதில் 8 அணிகள் பங்கேற்கும். இந்த தொடர் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதன் 6-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்த சீசனுக்கான லண்டன் ஸ்பிரிட்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் இந்திய முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும் … Read more