முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் வாட காங்கிரஸ் கட்சியே காரணம்; ஒவைசி குற்றச்சாட்டு

மும்பை, மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜல்னா மாநகராட்சி தேர்தலையொட்டி அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி எம்.பி. பங்கேற்று பேசியதாவது:- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கி உதவியது. பாகிஸ்தானின் 80 சதவீத ராணுவ தளவாடங்கள் சீனாவில் இருந்து பெறப்பட்டவையாகும். இருப்பினும் இந்திய அரசு சீன நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறது. மேலும், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு … Read more

விராட், கில் அபாரம்…நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

மும்பை, நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது .இதில், டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் ஹென்ரி நிக்கோலஸ், டேவன் கான்வே ஆகியோர் தொடகக் வீரர்களாக களம் … Read more

ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுங்கள்: டிரம்புக்கு முன்னாள் இளவரசர் வேண்டுகோள்

பாரீஸ் ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய மக்களின் போராட்டம், 16-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் போராட்டம் பரவியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு … Read more

காஷ்மீர்: எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பறந்த பாகிஸ்தான் டிரோன்கள் விரட்டியடிப்பு

ரஜோரி, ஜம்மு மற்றும் காஷ்மீரில், போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கூட்டாக நேற்று நடத்திய தேடுதல் வேட்டையின்போது, சம்பா மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராமத்தில் இருந்து சீன தயாரிப்பு கைத்துப்பாக்கி, வெடிக்க தயார் நிலையிலுள்ள தோட்டாக்கள், சீன தயாரிப்பு கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் நவ்ஷேரா-ரஜோரி பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்றிரவு சில டிரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பறந்தன. … Read more

மகளிர் பிரீமியர் லீக்: ஷோபி டேவின் அபாரம்… குஜராத் அணி 209 ரன்கள் குவிப்பு

நவிமும்பை, நவிமும்பை, 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இன்று நடைபெற உள்ள 3-வது லீக் ஆட்டத்தில் குஜராத் – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் குஜராத் அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி … Read more

லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு மீது இஸ்ரேல் தாக்குதல்

ஜெருசலேம், காசாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை தாக்கி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, லெபனானின் தெற்கே சமீப மாதங்களாக ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்களின் தளங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி அழித்துள்ளனர். இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு உள்ள செய்தியில், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் பல்வேறு ராணுவ தளங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. சமீப … Read more

டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர்: மக்கள் அவதி

புதுடெல்லி, டெல்​லி​யில் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று காலை குறைந்​த​பட்ச வெப்​பநிலை 4.2 டிகிரி செல்​சி​யஸாக குறைந்​தது. டெல்​லி​யில் நடப்பு குளிர்​காலத்​தில் பதி​வான மிகக் குறைந்த வெப்​பநிலை​ இதுவாகும். டெல்​லியிலும் அதன் சுற்​றுப்​புறப் பகு​தி​களிலும் மூடு​பனி​யுடன் கூடிய குளிர் அலை வீசுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். உத்​தரபிரதேசம், பஞ்​சாப், ஹரி​யானா உட்பட வட மாநிலங்​கள் முழு​வதும் அடுத்த 3 நாட்​களுக்கு கடுமை​யான குளிர் அலை வீசும் என்று வானிலை ஆய்வு … Read more

சச்சினின் சாதனையை நெருங்க கூடிய ஒரேயொரு பேட்ஸ்மேன் இவர்தான்… ஆலன் டொனால்டு புகழாரம்

ஜோகன்னெஸ்பர்க், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய வலது கை வீரரான விராட் கோலி பல சாதனைகளை படைக்க கூடிய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், தென்ஆப்பிரிக்க அணியின் பிரபல முன்னாள் வீரரான ஆலன் டொனால்டு கூறும்போது, சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கரின் 100 சதம் என்ற சாதனையை நெருங்க … Read more

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி நிலைகளை குறி வைத்து அமெரிக்கா கடுமையான தாக்குதல்

நியூயார்க், சிரியாவில் 2024-ம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நடந்து வரும் அரசானது, அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பல்மைரா நகரில் கடந்த மாதம் நடந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர் மற்றும் அமெரிக்க குடிமகன் ஒருவர் என 3 பேர் பலியானார்கள். இந்த நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி நிலைகளை … Read more

வேலை வாய்ப்பு மோசடி; மியான்மரில் சிக்கி தவித்த 27 இந்தியர்கள் மீட்பு

யாங்கோன், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருகிறோம் என கூறி இந்தியர்கள் 27 பேரை மியான்மர் நாட்டு எல்லை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். இதன்பின்னர், அவர்களை உடல்ரீதியாக துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு மிரட்டல் விடுத்து, இணையதள மோசடிகளில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். இதுபற்றி ஸ்ரீகாகுளம் எம்.பி. மற்றும் விமான போக்குவரத்து துறை மந்திரி ராம் மோகன் நாயுடு, மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, உடனடியாக அவர்களை மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி … Read more