சத்தீஷ்காரில் 28 நக்சலைட்டுகள் சரண்

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலம் ஆகும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்தநிலையில், அண்மைகாலமாக ஆயுதங்களை கைவிட்டு தங்களுக்கான அரசின் மறுவாழ்வு நடவடிக்கைகளை ஏற்று நக்சலைட்டுகள் சரண் அடைந்து வருகின்றனர். அந்த வரிசையில் நேற்று அந்த மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்ட போலீசில் 28 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர். அவர்களில் 19 பேர் பெண்கள் ஆவர். சரண் அடைந்த நக்சலைட்டுகளில் 22 பேரின் தலைக்கு ஒட்டுமொத்தமாக … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வரலாறு படைக்குமா இந்திய அணி..?

கவுகாத்தி, இந்தியா – தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இந்தியா … Read more

பாப் பாடகிக்கு பாலியல் தொந்தரவு: ஆஸ்திரேலியா நாட்டவர் நாடு கடத்தல்

சிங்கப்பூர், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி அரியானா கிராண்டி (வயது 32). எவ்ரிடே, பை, பிளட்லைன் போன்ற பிரபல பாடல்களை பாடியுள்ளார். தற்போது ஹாலிவுட் சினிமா ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதொடர்பான விளம்பர நிகழ்ச்சி சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்டு மேடையில் தோன்றி ரசிகர்கள் முன்னிலையில் அரியானா கிராண்டி பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் மேடையில் குதித்து பாடகி மீது பாய்ந்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்தார். உடனே … Read more

பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்: பள்ளி வளாகத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் ஜஷ்பூர் மாவட்ட பகிஷா பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக குல்திபன் டாப்னோ என்பவர் பணியாற்றி வந்தார். இதனிடையே, அந்த பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு தலைமை ஆசிரியர் குல்திபன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், தலைமை ஆசிரியர் குல்திபனின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி நேற்று முன் தினம் … Read more

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை 2026: போட்டி அட்டவணை வெளியீடு.. இந்தியா – பாக். ஆட்டம் எப்போது தெரியுமா..?

மும்பை, நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். … Read more

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம்

வாஷிங்டன், அமெரிக்கா – சீனா இடையே வரி விதிப்பு தொடர்பாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில் தென்கொரியாவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும் சீன அதிபர்ஜிஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தனர். இதை தொடர்ந்து சீன அதிபர் ஜின்பிங் தொலை பேசியில் பேசியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:- சீன அதிபர் ஜி ஜின்பிங் கிடம் இருந்து எனக்கு … Read more

தேர்தல் கமிஷன் பா.ஜனதா கமிஷனாக மாறிவிட்டது – மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று பேசியதாவது:- தேர்தல் கமிஷன் ஒரு பாரபட்சமற்ற அமைப்பாக இல்லை. அது பா.ஜனதா கமிஷனாக மாறிவிட்டது. அரசியல் ரீதியாக என்னை எதிர்த்துப் போராடி தோற்கடிக்க முடியாது என்று பா.ஜனதாவிடம் பலமுறை கூறிவிட்டேன். மேற்கு வங்கத்தில் எனக்கு அவர்கள் சவால் விடுத்தால், நாடு முழுவதும் பா.ஜனதாவின் அடித்தளத்தை ஆட்டம் காண செய்வேன். சட்டவிரோதமாக … Read more

டி20 உலகக்கோப்பை 2026: ரோகித் சர்மாவுக்கு ஐ.சி.சி. கவுரவம்

மும்பை, 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் … Read more

இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் 3-வது முறையாக தள்ளிவைப்பு

ஜெருசலேம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சுற் றுப்பயணம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் தனது இந்திய பயணத்தை அவர் மீண்டும் ஒத்தி வைத்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய பயணம் பாதுகாப்புக் காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. … Read more

தோழியின் அறைக்கு வாலிபருடன் சென்ற கல்லூரி மாணவி….அடுத்து ஏற்பட்ட சோகம்

பெங்களூரு, ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள பிக்கிம்வாரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேவிஸ்ரீ (வயது 21). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் பி.பி.எம். படித்து வந்தார். இதற்காக கல்லூரி விடுதியிலேயே தேவிஸ்ரீ தங்கியிருந்தார். நேற்று காலை தேவிஸ்ரீ தனக்கு பழக்கமான பிரேம் வர்தன் என்ற வாலிபருடன் பெங்களூரு வடக்கு தாலுகாவின் தம்மேனஹள்ளியில் தனது தோழியின் அறைக்கு சென்றார். அறையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தேவிஸ்ரீயின் தோழி வெளியே சென்றிருந்தார். … Read more