சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் தங்கத்தகடுகளை தாமிர தகடுகள் என்று சான்றிதழ் வழங்கிய … Read more

சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி

ஆமதாபாத், 18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கியது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்கும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குள் நுழையும். ‘பிளேட்’ பிரிவில் கலந்து கொண்டுள்ள 6 அணிகள் இடையிலான ஆட்டம் புனேயில் நடக்கிறது. இதில் ஆமதாபாத்தில் நடந்த … Read more

இறந்த தாய் போல் வேடமிட்டு பென்சன் தொகையை பெற்ற மகன் கைது

ரோம், இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோ நகரை சேர்ந்த 56 வயதான நபர், இறந்த தனது தாய் போல் வேடமிட்டு அவரது ஓய்வூதிய தொகையை பெற்று மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நபரின் தாய் கிராசியெல்லா டால்ஒக்லியோ கடந்த 2022-ம் ஆண்டு தனது 82-வது வயதில் மரணம் அடைந்தார். ஆனால் அவரது ஓய்வூதிய தொகையை தொடர்ந்து பெற எண்ணிய மகன் தனது தாயின் மரணத்தை அரசுக்கு தெரிவிக்காமல் உடலை பதப்படுத்தி வீட்டில் மறைத்து வைத்து உள்ளார். அதன்பின் … Read more

ஆண் நண்பர்களுடன் பேசிய தங்கை.. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள இடோரா கோட்டியா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் நைனா தேவி(வயது 22). இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர். ஆனால் திருமண வரன்களை நைனா தேவி தொடர்ந்து நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நைனா தேவியின் அண்ணன் ஷேர் சிங், தனது தங்கையின் செயல்பாடுகளை நோட்டமிட்டுள்ளார். நைனா தேவியின் செல்போனை பார்த்தபோது, அவர் பல ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்தது. … Read more

2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் இந்தியா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி, உலக அளவில் விளையாட்டு போட்டிகளின் திருவிழாவாக ஒலிம்பிக் கருதப்படுகிறது. ஒலிம்பிக்கிற்கு அடுத்தபடியாக விளையாட்டு போட்டிகளின் திருவிழாவாக காமன்வெல்த் போட்டி கருதபடுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் 70க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 2030ம் ஆண்டு நடைபெறும் காமல்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா திட்டமிட்டிருந்தது. போட்டிகளை நடத்துவதற்கு காமன்வெல்த் கூட்டமைப்பில் இந்தியா விண்ணப்பித்திருந்தது. … Read more

நடப்பாண்டில் 38 பேர் கொலை… பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து ஸ்பெயினில் பிரம்மாண்ட பேரணி

மாட்ரிட், சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25-ந்தேதி(நேற்று) அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன. ஸ்பெயினில் நடப்பாண்டில் இதுவரை 38 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில், வன்முறை சம்பவங்களால் உயிரிழந்த பெண்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி ஆயிரக்கணக்கான … Read more

பெண் டாக்டர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது

ஐதராபாத், ஆந்திர மாநிலம் குண்டூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஒன்றில் வெங்கடசாயி என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஆண் நர்சாக பணிக்கு சேர்ந்தார். இந்தநிலையில், ஆபரேஷன் தியேட்டரில் பெண் டாக்டர்கள் உடை மாற்றுவதை அவர் செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவ மாணவிகள் ஆடை மாற்றுவதையும் அவர் ரகசியமாக வீடியோ எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து வெங்கடசாயியை கைது செய்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்தனர். … Read more

உலகக் கோப்பை செஸ்: உஸ்பெகிஸ்தான் இளம் வீரர் சாம்பியன்

கோவா, 11-வது ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட்ஸ்மாஸ்டர் ஜவோகிர் சிந்தாரோவ் – சீன கிராண்ட்மாஸ்டர் வெய் யி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இறுதி சுற்றின் முதல் இரு ஆட்டங்களும் ‘டிரா’வில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க ‘டைபிரேக்கர்’ நேற்று நடந்தது. விரைவாக காய் நகர்த்தக்கூடிய டைபிரேக்கரின் முதலாவது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய ஜவோகிர் சிந்தாரோவ் 45-வது நகர்த்தலில் ‘டிரா’ செய்தார். இதைத்தொடர்ந்து நடந்த 2-வது … Read more

நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிரச்சினையால் வரலாறு காணாத உணவு பஞ்சம் – ஐ.நா. எச்சரிக்கை

அபுஜா, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள், ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் பொதுமக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக வடக்கு நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அதிகரிப்பால் அங்கு உணவு தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டிற்குள் அங்கு 3 கோடியே 50 லட்சம் மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும், இதனால் வரலாறு காணாத உணவு பஞ்சம் எற்படக்கூடும் என்றும் ஐ.நா. உலக உணவு திட்டத்திற்கான அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்குள்ள … Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து – 5 பேர் பலி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரிசா மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காரில் சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். நள்ளிரவு லக்கிம்பூர் கேரியின் சாரதா ஷிப்ஹொன் என்ற பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். கார் டிரைவர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். … Read more