“டிரம்ப் ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதால் மோடி பாதுகாப்பாக பங்கேற்கிறார்” காங்கிரஸ் கிண்டல்

புதுடெல்லி, தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜோக்கனஸ்பர்க்கில் நடைபெறும் ஜி.20 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவுக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக கூறி உள்ளார். இது குறித்து காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது: “தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புறக்கணிப்பதால், பிரதமர் நரேந்திரமோடி பாதுகாப்பாக கலந்து கொள்கிறார். சில நாட்களுக்கு முன்பு கோலாலம்பூரில் … Read more

ஒரே நாளில் வீழ்ந்த 19 விக்கெட்டுகள்.. இதுவே நாளை கவுகாத்தியில் நடந்தால்..? அஸ்வின் விளாசல்

சென்னை, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் … Read more

ஸ்காட்லாந்தில் கடும் பனிப்பொழிவால் 100 பள்ளிகள் மூடல்

எடின்பர்க், ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. எனவே சாலையில் முன் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக மாறின. அப்போது சாலையில் நடந்து சென்ற 2 பேர் மீது கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் அபெர்டீன்ஷையர் நகர சாலையில் சென்ற மாடி பஸ் பனிக்கட்டிகளுக்கு இடையே சிக்கி கொண்டது. மீட்பு படையினர் அந்த பனிக்கட்டிகளை அப்புறப்படுத்திய பிறகே பஸ் … Read more

பெங்களூரு டிராபிக்கை சுட்டிகாட்டிய சுபான்ஷு சுக்லா

பெங்களூரு, பெங்களூரு தகவல் தொழில்நுட்ப மாநாடு பெங்களூருவில் கடந்த 17-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் கடைசி நாள் மாநாட்டில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா கலந்து கொண்டு பேசினார். அவர் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற அனைவரும் பங்களிப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல் குறித்து பேசியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து அவர் பேசியதாவது:- “விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வதை விட … Read more

ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வங்காளதேசம்

தோகா, வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த வங்காளதேசம், இலங்கை அணியும், ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் விளையாடின. இதில் … Read more

பாகிஸ்தான்: தொழிற்சாலையில் வெடி விபத்து – 16 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரின் மாலிக்பூர் பகுதியில் பசை தயாரிப்பு தொழிற்சாலை (glue making factory) உள்ளது. இந்த தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்டோர் இன்று வழக்கமான பணியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று பாயிலர் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், போலீசார் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த … Read more

ராஜஸ்தானில் நடக்கும் அமெரிக்க தொழில் அதிபர் மகளின் திருமணம்; டிரம்ப் மகன் பங்கேற்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் அமெரிக்க வாழ் இந்திய தொழில் அதிபரின் மகள் திருமணம் நடக்கிறது. இதில் டிரம்ப் மகன் மற்றும் பிரபல நடிகர், நடிகைகள் பங்கேற்க உள்ளனர். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜூ ராமலிங்கம், பிரபலமான தொழில் அதிபராக உள்ளார். அவரது மகளின் திருமணம், இந்தியாவின பூர்வீக பகுதியான ராஜஸ்தானில் நடைபெற உள்ளது. அவரது மகள் நேத்ரா மந்தேனா, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான வம்சி கதிராஜுவை கரம்பிடிக்க இருக்கிறார். இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் நேற்று முன்தினமே தொடங்கிவிட்டது. … Read more

மகளிர் உலகக்கோப்பை கபடி: இந்திய அணி அபாரம்.. தொடர்ந்து 4-வது வெற்றி

டாக்கா, டாக்காவில் நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை கபடியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில் முறையே தாய்லாந்து, வங்காளதேசம் மற்றும் ஜெர்மணி அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி கண்டிருந்தது. அத்துடன் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. இதனையடுத்து இந்தியா தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் உகாண்டா அணியுடன் இன்று மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 51-16 என்ற புள்ளி கணக்கில் உகாண்டாவை வீழ்த்தி தொடர்ந்து … Read more

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்.

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 12:59 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 170 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.40 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், இரவு 9.33 மணியளவில் ரிக்டரில் 4.1 அளவில் மீண்டும் … Read more

அக்காளுக்கு உதவியாக வந்த கொழுந்தியாளை கர்ப்பமாக்கிய வாலிபர்; ‘போக்சோ’ சட்டத்தில் கைது

பெங்களூரு, யாதகிரி மாவட்டம் கெம்பாவி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வது முறை கர்ப்பமான அந்த பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தை பெற்ற அந்த பெண்ணுக்கு உதவியாக அவரது 16 வயது தங்கை வீட்டுக்கு வந்திருந்தார். அவர், அக்காள் மற்றும் குழந்தைகளை பார்த்ததுடன், வீட்டு வேலைகளையும் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் மனைவி … Read more