ஊடுருவல்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம் ; அசாமில் அமித்ஷா பேச்சு

கவுகாத்தி, அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா செயல்பட்டு வருகிறார். அசாமிற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். நிகழ்ச்சியில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திடப்பணிகளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அமித்ஷா கூறுகையில், வங்காளதேசத்தை … Read more

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின்

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் ராஜகோபால் (வயது 57) த/பெ.அய்யாக்கண்ணு என்பவர் நேற்று (28.12.2025) காலை சுமார் 9.00 மணியளவில் தனக்குச் சொந்தமான கிணற்றில் உள்ள விவசாய மின்மோட்டாரினை விவசாயத்திற்காக இயக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் … Read more

அசாமில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

திஸ்பூர், அசாமின் மோரிகான் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 3.49 மணியளவில் ரிக்டர் அளவில் 3.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 50 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.43 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.34 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. அசாமில் அடிக்கடி நிலநடுக்கங்கள் … Read more

கட்சி கட்டமைப்பு: திக்விஜய் சிங் கருத்துக்கு சசிதரூர் எம்.பி. ஆதரவு

புதுடெல்லி, டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அப்போது அதில் கலந்து கொண்ட கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்ததுடன் மூத்த தலைவர்களின் காலடியில் அமர்ந்த ஒரு அடிமட்டத் தொண்டர் எப்படி முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் உயர்ந்தார் என்று கூறி, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜனதாவின் அமைப்பு பலத்தைப் பாராட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறவும், அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்றவும் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை அடிமட்ட … Read more

4வது டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க … Read more

ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் புதினுடன் பேசிய டிரம்ப்

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெரும்பாலான … Read more

"நாம் விஸ்வகுருவாக மாறுவது உலகத்தின் தேவை" – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

ஐதராபாத், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பகவத், இந்தியா மீண்டும் ஒரு ‘விஸ்வகுரு’வாக மாறுவதற்கு பாடுபட வேண்டும் என்று கூறினார், இது லட்சியத்தால் அல்ல, மாறாக அது உலகின் தேவை என்பதால், சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது என்று மோகன் பகவத் கூறினார். ஐதராபாத்தில் ஒரு கூட்டத்தில் மோகன் பகவத் கூறியதாவது:- 100 ஆண்டுகளுக்கு முன்பு, யோகி அரவிந்த், சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி கடவுளின் விருப்பம் என்றும், … Read more

4வது டி20; ஸ்மிருதி , ஷபாலி அதிரடி..இந்திய அணி 221 ரன்கள் குவிப்பு

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் … Read more

இத்தாலி: தொண்டு நிறுவனம் மூலம் நிதி திரட்டல் – ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ரூ. 74 கோடி அனுப்பிய கும்பல்

ரோம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போர் மூண்டது. கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வந்தது. இந்த போரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. இதனிடையே, இந்தபோரின் போது காசா முனையில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக … Read more

தேசிய கீதத்தை தவறாக பாடிய காங்கிரசார்: சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ

திருவனந்தபுரம், காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் 140-ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று நாடெங்கிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) சார்பில் திருவனந்தபுரத்திலுள்ள மாநில கட்சித் தலைமையகத்தில் காங்கிரஸ் நிறுவன நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, தீபா தாஸ் முன்ஷி, பாலோடு ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கட்சித் தலைமையகத்தில் கொடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது, ஒலிபெருக்கியில் … Read more