பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்கும் திட்டமில்லை – பிசிசிஐ துணைத்தலைவர்

டெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவரது பயிற்சியின்கீழ் டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா படுதோல்வியடைந்தது. இதனால், டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின . டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில், இந்திய … Read more

துருக்கியில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி

அங்காரா, துருக்கியின் மேற்கு யலோவா மாகாணத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட தொடங்கி உள்ளது. இதற்காக வணிக வளாகம், சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதற்கிடையே அங்குள்ள எல்மாலி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகள் பலியாகினர். … Read more

மராட்டிய மாநகராட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள்

மும்பை, மராட்டிய மாநிலத்தில் அரசியல் களம் அடிக்கடி மாறி வருகிறது. அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தில் பா.ஜ.க. மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. 2-வது கட்டமாக புனே, பிம்ப்ரிசிஞ்சவட் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று(செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். கடந்த ஒரு வாரமாக கூட்டணி பேச்சுவார்தைகள் மற்றும் வார்டு பங்கீட்டில் ஒற்றுமையின்மை உள்ளிட்ட காரணங்களால் மந்தமாக இருந்த மனு தாக்கல், … Read more

உலக ரேபிட் செஸ்: இந்தியாவுக்கு 2 பதக்கம்..குகேஷ், பிரக்ஞானந்தா ஏமாற்றம்

தோகா, உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் முதலில் ரேபிட் வடிவிலான போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். 13 சுற்றுகளை கொண்ட ஓபன் பிரிவில், நார்வே வீரர் கார்ல்சென் (9 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி) முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.ரஷிய வீரர் விளாடிஸ்லாவ் 2-வது இடம் பிடித்தார். இந்தியாவின் … Read more

இஸ்ரேல் தாக்குதலில் ஆயுதக்குழு செய்தித்தொடர்பாளர் பலி – ஒப்புக்கொண்ட ஹமாஸ்

காசா முனை, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போர் மூண்டது. கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வந்தது. இந்த போரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. இதனிடையே, ஹமாஸ் ஆயுதக்குழுவின் செய்தித்தொடர்பாளராக அபு ஒபிடா என்பவர் … Read more

மத்தியபிரதேசம்: கிராமத்திற்குள் நுழைந்த புலி – பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

போபால், மத்தியபிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் பந்தவ்கர் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு அருகே உள்ள கிராமங்களுக்குள் அவ்வப்போது வனவிலங்குகள் நுழைவது வழக்கம். இந்நிலையில், பூங்காவுக்கு அருகே உள்ள கிராமத்திற்குள் இன்று மதியம் புலி நுழைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து புலி ஊருக்குள் வருவதை கண்ட கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது, கிராமத்தை சேர்ந்த கோபால் என்ற இளைஞரை புலி தாக்கியது. இதில் இளைஞர் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்ட மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் … Read more

ஆஷஸ் 5வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்றது . இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 110 ரன்களுக்கு … Read more

ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி?

மாஸ்கோ, ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷிய வான் பாதுகாப்பு படை அழித்ததாகவும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ சேதமோ ஏறபடவில்லை என்றும் இந்த சம்பவத்தால் பேச்சுவார்த்தை நிலைப்பாடு மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் வீடு மீது டிரோன் தாக்குதல் … Read more

மராட்டிய மாநகராட்சி தேர்தல்: மீண்டும் கைகோர்த்த சரத்பவார் – அஜித் பவார்

புனே மராட்டிய மாநிலத்தில் அரசியல் களம் அடிக்கடி மாறி வருகிறது. அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தில் பா.ஜ.க. மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. 2-வது கட்டமாக புனே, பிம்ப்ரி–சிஞ்ச்வட் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால், முதல் கட்டத் தேர்தலிலேயே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பா.ஜ.க., ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.இதற்கிடையே, சரத்பவாரும் அஜித் பவாரும் … Read more

மீண்டும் களத்திற்கு திரும்பும் ஷ்ரேயாஸ் அய்யர்

புதுடெல்லி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். ‘ஸ்கேன்’ பரிசோதனை மேற்கொண்ட போது, விலா எலும்பையும் … Read more