டெல்லி கார் வெடிப்பு; அமித்ஷாவை தொடர்பு கொண்டு விசாரித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பான பலத்த சத்தம், பல மீட்டர் தொலைவில் இருந்தவர்களுக்கும் கேட்டுள்ளன. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறி … Read more

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அமெரிக்க வீரர் வெற்றி

துரின், உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. இதன்படி 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் இன்று தொடங்கியநடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை … Read more

இனி மனிதன் 150 ஆண்டுகள் வாழலாம் – சீன ஆராய்ச்சியில் மருந்து கண்டுபிடிப்பு

பிஜீங், இந்த உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒரே கால அளவில் வாழ்வதில்லை. ஒவ்வொரு உயிரினத்தின் இதயத் துடிப்பை பொருத்து அவைகள் வாழும் கால அளவும் மாறுபடுகிறது. அதாவது, வேகமாக துடிக்கும் இதயத்தை கொண்ட உயிரினங்களுக்கு ஆயுள் குறைவு என்றும், மெதுவாக துடிக்கும் உயிரினங்களின் ஆயுள் அதிகம் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆறறிவு கொண்ட மனித இனத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், விரல் விட்டு எண்ணும் அளவிலான மனிதர்களை இத்தனை … Read more

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க. தொடர்ந்த வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதனையடுத்து வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ. ஆர்.) தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளன. எனினும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை (எஸ்.ஐ.ஆர்.) தீவிரத்துடன் மேற்கொண்டு வருகிறது. … Read more

உலகக் கோப்பை ஆக்கி போட்டியின் சின்னம் அறிமுகம்

சென்னை , இந்தியா உள்பட 24 அணிகள் பங்கேற்கும் 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடக்கிறது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த விழாவில் போட்டியின் சின்னமான ‘காங்கேயனை’ துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வெற்றிக்கோப்பையின் தமிழ்நாடு சுற்றுப்பயணத்தையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., சர்வதேச … Read more

கனத்த இதயத்தோடு பூடான் வந்துள்ளேன் – பிரதமர் மோடி

திம்பு, 2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அந்நாட்டு தலைநகர் திம்புவில் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார். இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா.நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- டெல்லியில் நேற்று நடந்த கொடூர சம்பவத்தால், … Read more

கார்த்திகை பிரம்மோற்சவம்: திருச்சானூரில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நவம்பர் 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கார்த்திகை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலை சுத்தம் செய்து புனிதப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி இன்று காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெற்றது. இதில், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டன. பின்னர், நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமப்பூ, கிச்சிலிக்கட்டு உள்ளிட்ட வாசனை … Read more

ஒருநாள் கிரிக்கெட்: அம்லா தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவன்.. 3 இந்திய வீரர்களுக்கு இடம்

கேப்டவுன், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹாஷிம் அம்லா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அவர் தேர்வு செய்த அணியில் இந்தியாவை சேர்ந்த சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி மற்றும் மகேந்திரசிங் தோனி இடம்பெற்றுள்ளனர். அதுபோக 3 தென் ஆப்பிரிக்க வீரர்களும், 2 ஆஸ்திரேலிய வீரர்களும், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் இருந்து தலா … Read more

பாகிஸ்தானில் கோர்ட்டுக்கு வெளியே குண்டுவெடிப்பு; 12 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஐகோர்ட்டுக்கு வெளியே இன்று மதியம் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், அந்த பகுதியில் இருந்த பலர் சிக்கி கொண்டனர். அவர்களில், 12 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும், போலீசார் உடனடியாக மீட்பு பணிக்கு சென்றனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பான உயிரிழப்புகளை, பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் மருத்துவமனை மையம் செய்தியாளர்களிடம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது. இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்க கூடும் … Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு: மர்ம உறுப்பில் தாக்கி… தூக்கில் தொங்க விட்டு கணவனை கொன்ற பெண்…!

பெங்களூரு, கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா இந்திராநகர் கிராமத்தை சேர்ந்தவர் வீரண்ணா (வயது 44). இவரது மனைவி சிவம்மா. இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. மேலும், 12 மற்றும் 10 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எச்.டி.கோட்டை தாலுகாவை சேர்ந்த பலராம் என்ற வாலிபருடன் சிவம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 2 பேரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இதுபற்றி வீரண்ணாவுக்கு … Read more