ராஜஸ்தானில் நடக்கும் அமெரிக்க தொழில் அதிபர் மகளின் திருமணம்; டிரம்ப் மகன் பங்கேற்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் அமெரிக்க வாழ் இந்திய தொழில் அதிபரின் மகள் திருமணம் நடக்கிறது. இதில் டிரம்ப் மகன் மற்றும் பிரபல நடிகர், நடிகைகள் பங்கேற்க உள்ளனர். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜூ ராமலிங்கம், பிரபலமான தொழில் அதிபராக உள்ளார். அவரது மகளின் திருமணம், இந்தியாவின பூர்வீக பகுதியான ராஜஸ்தானில் நடைபெற உள்ளது. அவரது மகள் நேத்ரா மந்தேனா, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான வம்சி கதிராஜுவை கரம்பிடிக்க இருக்கிறார். இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் நேற்று முன்தினமே தொடங்கிவிட்டது. … Read more

மகளிர் உலகக்கோப்பை கபடி: இந்திய அணி அபாரம்.. தொடர்ந்து 4-வது வெற்றி

டாக்கா, டாக்காவில் நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை கபடியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில் முறையே தாய்லாந்து, வங்காளதேசம் மற்றும் ஜெர்மணி அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி கண்டிருந்தது. அத்துடன் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. இதனையடுத்து இந்தியா தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் உகாண்டா அணியுடன் இன்று மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 51-16 என்ற புள்ளி கணக்கில் உகாண்டாவை வீழ்த்தி தொடர்ந்து … Read more

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்.

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 12:59 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 170 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.40 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், இரவு 9.33 மணியளவில் ரிக்டரில் 4.1 அளவில் மீண்டும் … Read more

அக்காளுக்கு உதவியாக வந்த கொழுந்தியாளை கர்ப்பமாக்கிய வாலிபர்; ‘போக்சோ’ சட்டத்தில் கைது

பெங்களூரு, யாதகிரி மாவட்டம் கெம்பாவி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வது முறை கர்ப்பமான அந்த பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தை பெற்ற அந்த பெண்ணுக்கு உதவியாக அவரது 16 வயது தங்கை வீட்டுக்கு வந்திருந்தார். அவர், அக்காள் மற்றும் குழந்தைகளை பார்த்ததுடன், வீட்டு வேலைகளையும் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் மனைவி … Read more

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

கேப்டவுன், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த உடன் இவ்விரு அணிகள் இடையே ஒருநாள் போட்டிகளும், இறுதியாக டி20 தொடரும் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் … Read more

தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி; ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்…!

கேப்டவுன், ஜி20 அமைப்பின் 20-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் ஜோகனர்ஸ்பர்க் நகர் சென்ற பிரதமர் மோடிக்கு தென் ஆப்பிரிக்க அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி20 உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பங்கேற்கும் பிரதமர் மோடி காலநிலை … Read more

மியான்மர் அகதிகளின் பயோமெட்ரிக் பதிவு 58 சதவீதம் நிறைவு; மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

ஐஸ்வால் மியான்மரைச் சேர்ந்த 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது மிசோரமில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் 12,361 குழந்தைகள் அடங்குவர். இவர்களில் பெரும்பாலோர் மியான்மரின் சின் மாநிலத்தின் சின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மியான்மரில் நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு அகதிகள் வரத் தொடங்கினர். இதையடுத்து மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் சட்டவிரோத குடியேறிகளின் பயோமெட்ரிக் மற்றும் வாழ்க்கை வரலாற்று விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. … Read more

அயர்லாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் வங்காளதேசம்

டாக்கா, வங்காளதேசம் – அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 141.1 ஓவர்களில் 476 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 128 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 106 ரான்களும் அடித்தனர். அயர்லாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஆன்டி மெக்பிரின் 6 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை … Read more

வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ; 4 பேர் பலி

டாக்கா, இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.38 மணிக்கு அந்நாட்டின் தலைநகர் டாக்காவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கோடிக்கணக்கான புதிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் முன்னதாக ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பிறப்பித்த புதிய உத்தரவின் கீழ் ரூ.1,400 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் இதுவரை சட்டப்படி முடக்கப்பட்ட … Read more