நாடாளுமன்றம் இன்று கூடுகிறது… குளிர்கால தொடரில் அனலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..!

புதுடெல்லி, இந்திய நாடாளுமன்றம் சாதாரணமாக ஆண்டுக்கு 3 முறை கூட்டப்பட்டு வருகிறது. ஜனவரி – பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரும், ஜூலை-ஆகஸ்ட் மாதத்தில் மழைக்கால கூட்டத்தொடரும், நவம்பர் அல்லது டிசம்பரில் குளிர்கால கூட்டத் தொடரும் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. குறைவான நாட்கள் கூட்டத்தொடர் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த மழைக்கால கூட்டத்தொடர், பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை … Read more

முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

ராஞ்சி, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க … Read more

ஆபரேசன் சாகர்பந்து… இலங்கையில் சிக்கி தவித்த இந்திய பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

கொழும்பு, துபாயில் இருந்து 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளுடன் விமானம் ஒன்று இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. இலங்கை வழியே இந்தியா வர இருந்த விமானம், இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு தரையிறங்கியது. எனினும், வங்க கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவான டிட்வா புயல் எதிரொலியாக கனமழை பெய்தது. இதனால், இலங்கையில் விமானம் மற்றும் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், இந்தியர்களை ஏற்றி … Read more

கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: பேராசிரியர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் நாகேஷ்வர். இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்தநிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரை நாகேஷ்வர் பலாத்காரமும் செய்துள்ளார். மேலும் அதனை வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்த மாணவி, வெளியே யாரிடமும் இதுபற்றி கூறவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு கல்லூரி மாணவியை நாகேஷ்வர் தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் … Read more

ஒருநாள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரலாறு படைத்த விராட் கோலி

ராஞ்சி, இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், கே.எல்.ராகுல் 60 ரன்களும், ரோகித் 57 ரன்களும் அடித்தனர். தென் … Read more

இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 442 ஆக உயர்வு

ஜகர்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 442 ஆக அதிகரித்துள்ளது. … Read more

‘இந்தியர்கள் சிலருக்கு தங்களின் தாய் மொழியே தெரியவில்லை’ – மோகன் பகவத்

மும்பை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- “ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தகவல் தொடர்பும், அன்றாட பணிகளும், பகிர்தலும் சமஸ்கிருதத்தில் இருந்தது. தற்போது சில அமெரிக்க பேராசிரியர்கள் நமக்கு சமஸ்கிருதம் கற்று தருகிறார்கள். உண்மையில் நாம் தான் உலகிற்கு சமஸ்கிருதத்தை கற்று கொடுத்து இருக்க வேண்டும். பல குழந்தைகளுக்கு இன்று வீட்டில் பேசும் தாய் மொழியில் சாதாரண வார்த்தைகள் கூட … Read more

உணர்ச்சிவசப்படும் நபர்.. கம்பீர் பயிற்சியாளராக இருப்பது இந்திய அணிக்கு.. – டி வில்லியர்ஸ்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதில் கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான தோல்வி இதுவாகும். கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-3 என்ற கணக்கில் முதல்முறையாக பறிகொடுத்தது. உள்நாட்டில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா டெஸ்ட் தொடரை தாரைவார்த்தது கடந்த 40 … Read more

தென் ஆப்பிரிக்கா: ரஷிய ராணுவத்துக்கு ஆள்சேர்க்க முயன்ற 4 பேர் கைது

மாஸ்கோ, உக்ரைன்-ரஷியா போர் கடந்த 3½ ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனை எதிர்த்து போரிட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்களை ரஷியா ஈடுபடுத்தியது. இது தவிர தென் ஆப்பிரிக்கா உள்பட பிற நாடுகளில் இருந்தும் ரஷிய ராணுவத்தில் வீரர்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரஷியாவுக்கு ஆதரவாக போரிட சென்ற 17 தென் ஆப்பிரிக்கர்கள் உக்ரைனில் சிக்கி கொண்டனர். இதில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் மகன் ஜுமா-சம்புட்லா எம்.பி.க்கு தொடர்பு இருப்பதாக … Read more

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கி (வயது 22). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த ஒரு சிறுமியுடன் நட்பாக பழகி, பின்பு காதல் வலையில் விழவைத்தார். பின்னர் வெங்கி, சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதேபோல், அவர் பலமுறை அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உடல் … Read more