திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 64 ஆயிரத்து 571 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 23 ஆயிரத்து 634 பேர் முடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 84 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். 1 More update தினத்தந்தி Related Tags : திருப்பதி … Read more

இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு இது தான் காரணம்…நியூசிலாந்து கேப்டன்

மும்பை, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 … Read more

16 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்: அமேசான் நிறுவனம் முடிவால் அதிர்ச்சி

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் அமேசான். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் உள்ளது. பொருளாதார நெருக்கடி, செயற்கை நுண்ணறிவு தாக்கம் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கு அமேசானும் தப்பவில்லை. சமீப காலமாக அமேசான் நிறுவனமும் ஆட்குறைப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு காரணங்களை கூறி சுமார் 27,000 ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2025ம் ஆண்டு … Read more

பிரிவினையை ஏற்படுத்துவதற்காகவே பிரதமர் மோடி கேரளா வருகிறார் – காங்கிரஸ் தாக்கு

புதுடெல்லி, பிரிவினையை ஏற்படுத்துவதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு வருவது வெட்கக்கேடானது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கடுமையாக சாடி உள்ளார். முன்னதாக பிரதமர் மோடி நேற்று கேரளாவில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியை, ‘முஸ்லிம் லீக் மாவோயிஸ்டு காங்கிரஸ்’ என கூறியதுடன், மக்கள் அவர்களிடம் விழிப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் கேரளாவில் பா.ஜனதாவும், பிரதமர் மோடியும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக கே.சி.வேணுகோபால் குற்றம் … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மெல்போர்ன், கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலா, ரஷிய வீராங்கனை ஒக்ஸானா செலக்மெதேவ் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜெசிகா பெகுலா 6-3,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார். 1 More update தினத்தந்தி Related Tags … Read more

நேட்டோ குறித்து சர்ச்சை பேச்சு: டிரம்ப் மன்னிப்பு கேட்க இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தல்

லண்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது அதிரடியாக வரி விதித்து வருகிறார். மேலும், டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் திட்டமிட்டுள்ளார். கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லையென்றால் சீனா, ரஷியா கைப்பற்றிவிடும் என அவர் கூறி வருகிறார். ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் உலக அமைதிக்கு கிரீன்லாந்து தங்கள் வசம் இருப்பது முக்கியம் என்று டிரம்ப் கூறி வருகிறார். மேலும், … Read more

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்

ஜம்மு, ஜம்மு காஷ்மீரில் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் மலைப்பாங்கான மாவட்டங்களில் பள்ளிகள் நேற்று மூடப்பட்டன. பனிப்பொழிவு ஏற்பட்டதால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேநேரத்தில் ஜம்மு நகரம் உள்பட சமவெளிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்த வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு பிரிவில் உள்ள பூஞ்ச் நகரம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பொழிவை சந்தித்துள்ளது, இது உள்ளூர்வாசிகளிடையே … Read more

மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணியில் 2 வீராங்கனைகள் விலகல்

மும்பை, 5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இரண்டு வீராங்கனைகள் காயத்தால் விலகியுள்ளனர்.தியா யாதவ், விக்கெட் கீப்பர் மமதா மதிவாலா ஆகியோர் காயத்தால் விலகியுள்ளனர். பிரகதி சிங் மற்றும் எட்லா ஸ்ருஜனா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.டெல்லி அணி 5 … Read more

ஜெர்மனி: கடும் பனிப்பொழிவால் சாலை விபத்து – 3 பேர் பலி

பெர்லின், ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும், பனிப்பொழிவு காரணமாக சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனி நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடும் பனிப்பொழிவின்போது அந்நாட்டின் பெடர்போர்ன் நகரில் பெலிபீல்ட் அருகே மார்ஷ்பெல் – லிட்ச்னா சாலை சந்திப்பில் நேற்று வாகன விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து கார்கள், பைக்குகள், லாரிகள் என பல்வேறு வாகனங்கள் மோதின. … Read more

குடும்ப பிரச்சினை: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற விவசாயி

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நிலிங்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயி பகிரப்பா (வயது 28). இவருக்கும் ராஜேஸ்வரி (வயது 21) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தையில்லை. இதனால் அடிக்கடி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், தனது சகோதரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை சந்திக்க ராஜேஸ்வரி நேற்று தனது தாயார் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். ஆனால், ராஜேஸ்வரி தாயார் வீட்டிற்கு செல்ல கணவர் பகிரப்பா … Read more