“திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும்” – பிரதமர் மோடி

புதுடெல்லி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:- திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று … Read more

ரஞ்சி கோப்பை: கேப்டனாக முகமது சிராஜ் – காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் முனைபில் ஐதராபாத் அணி

ஐதராபாத், ரஞ்சி கோப்பை போட்டியில் காயம் காரணமாக ஐதராபாத் கேப்டன் திலக் வர்மா விளையாட முடியாத நிலையில், அவருக்கு மாற்றாக முகமது சிராஜ் அணியை வழிநடத்த உள்ளார். வரும் 22,29ம் தேதிகளில் கடைசி குரூப் போட்டிகளில் விளையாட உள்ளது ஐதராபாத் அணி. 2017-ம் ஆண்டில் இருந்து முகமது சிராஜ் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரிலும் 2017-ம் ஆண்டில்தான் அறிமுகமானார். 2015-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். முகமது சிராஜ் … Read more

இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – தூதரகம் அறிவுறுத்தல்

டெல் அவிவ், இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தற்போது இங்குள்ள அனைத்து இந்திய நாட்டினரும் விழிப்புடன் இருக்கவும், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் ஹோம் ப்ரண்ட் கமாண்ட் (https://oref.org.il/eng) வழங்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 2. இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்கவும் இந்திய நாட்டினருக்கும் அறிவுறுத்தப்படுகிறது. 3. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், இந்திய நாட்டினர் இந்திய தூதரகத்தின் 24×7 உதவி … Read more

ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விடுவிப்பு

அமராவதி, ஆந்திர முதல்-மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி இருந்த போது, சந்திரபாபு நாயுடு மீது ஆந்திர திறன் மேம்பாட்டு நிறுவன நிதி ரூ.300 கோடியை மோசடி செய்து அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 2023-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் 2024-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்-மந்திரி ஆனார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து வந்த ஆந்திர போலீசார், சந்திரபாபு நாயுடு மீது … Read more

விஜய் ஹசாரே கோப்பை : கர்நாடகாவை வீழ்த்தி விதர்பா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

பெங்களூரு, 33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா – விதர்பா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி 49.4 ஓவர்கள் முடிவில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய கருண் நாயர் 76 ரன்கள், ஸ்ரீஜித் 56 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 281 ரன்கள் இலக்குடன் விளையாடிய விதர்பா அணியில் அமன் மோகடே … Read more

குறி இந்த முறை தப்பாது; டிரம்புக்கு மிரட்டல் விடுத்த ஈரான்

தெஹ்ரான், ஈரான் நாட்டில் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களில் இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு … Read more

சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸ் கைது

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மோசடி தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முதன்மை தந்திரி, முன்னாள் எம்.எல்.ஏ., திருவிதாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினரான சங்கரதாசும் சேர்க்கப்பட்டிருந்தார். இதற்கிடையே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சங்கரதாஸ் கைது செய்யப்படாத சம்பவத்திற்கு கேரள … Read more

மகளிர் பிரீமியர் லீக்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி உ.பி. வாரியர்ஸ் வெற்றி

மும்பை, 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நவி மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளாக அமன்ஜித் கவுர், கமலினி களமிறங்கினர். கமலினி 5 … Read more

கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா

வாஷிங்டன், வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் கொண்டு … Read more

சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்

சுக்மா, சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கு எதிராக மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக வருகிற மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சபதம் ஏற்றுள்ளார். அதேநேரம் சரணடையும் நக்சலைட்டுகளுக்காக மறுவாழ்வு நடவடிக்கைகளும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதை பயன்படுத்தி ஏராளமான நக்சலைட்டுகள் சரணடைந்து வருகின்றனர். அந்தவகையில் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டு அமைப்பில் முன்னணியில் செயல்பட்டு வந்த 29 நக்சலைட்டுகள் போலீசாரிடம் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். இதில் தலைக்கு ரூ.2 … Read more