திமுக அரசுக்கு விடை கொடுக்க தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது – பிரதமர் மோடி

புதுடெல்லி, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, … Read more

இந்திய பேட்மிண்டனை உலக அரங்கிற்கு கொண்டு சென்றீர்கள் – சாய்னாவுக்கு சச்சின் புகழாரம்

புதுடெல்லி, முன்னாள் உலகின் நம்பர் 1 வீராங்கனையான சாய்னா நேவால் பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபனில் கடைசியாக விளையாடிய சாய்னா நேவால், மீண்டும் மைதானத்திற்குத் திரும்பப் போவதில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அறிவித்தார். இந்த நிலையில், பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெற்ற சாய்னா நேவாலுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ‘சாய்னா, நீங்கள் … Read more

ரஷியா- உக்ரைன் போர் முடிவுக்கு வருமா..? – இன்று பேச்சுவார்த்தை தொடங்குகிறது

அபுதாபி, உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரானது 3 ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் எதிரொலியாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, போர் நிறுத்தம் … Read more

பச்சிளம் குழந்தையை ரூ. 95 ஆயிரத்திற்கு விற்பனை செய்த தாய்; 24 மணிநேரத்தில் மீட்ட போலீசார்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கோசாம்பி மாவட்டம் ஹரானா கிராமத்தை சேர்ந்தவர் பிரிஜேஷ் குமார். இவரது மனைவி மம்தா தேவி. இதனிடையே, மம்தா தேவிக்கு கடந்த 6 மாதங்களுக்குமுன் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மம்தா தனது பச்சிளம் ஆண் குழந்தையை நேற்று முன் தினம் ரூ. 95 ஆயிரத்திற்கு அனிதா என்ற பெண்ணுக்கு விற்பனை செய்துள்ளார். மகனை மனைவி விற்பனை செய்தது குறித்து மம்தாவின் கணவர் பிரிஜேஷ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த … Read more

சர்வதேச செஸ் போட்டி: குகேஷ் முதல் வெற்றி

விஜ்க் ஆன் ஜீ, டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. இதில் 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ், செக் குடியரசு வீரர் தாய் டாய் வான் நுயெனை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 51-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதல் 4 ஆட்டங்களில் டிரா கண்ட குகேசுக்கு கிடைத்த முதல் வெற்றி … Read more

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிப்பு

ஜகார்த்தா உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை கண்டுபிடித்தனர். குகையின் சுவரில் காணப்படும் சிவப்பு நிற கை ஓவியம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பழமையான பாறை ஓவியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மற்ற ஓவியங்களில்பறவைகளின் தலைகள் மற்றும் பிற விலங்குகளின் அம்சங்களைக் கொண்ட மனித உருவங்கள் காணப்பட்டன. குகைச் சுவரில் கைகளை … Read more

பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை

டெல்லி, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். அந்நாட்டின் அதிபர் பிரேசில் அதிபர் லுலா டி சில்வா. இந்நிலையில், பிரேசில் அதிபர் டி சில்வா நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பவ்லேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பிரேசில் அதிபர் டி சில்வா உடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், அதிபர் டி … Read more

வங்கதேசத்திற்கு ஆதரவு – டி20 உலகக் கோப்பையில் பங்கேற்குமா பாகிஸ்தான்?

சென்னை, டி20 உலக கோப்பைக்கு தயாராகும் பணியை பாகிஸ்தான் நிறுத்தி இருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்தது. எந்தவித காரணமும் இல்லாமல் தங்கள் நாட்டு வீரரை ஐ.பி.எல். அணியில் இருந்து நீக்கியதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த வங்காளதேசம், டி20 உலகக் … Read more

குரோஷியாவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்

சாகிரேப், ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு குரோஷியா. இந்நாட்டின் தலைநகர் சாகிரேப்பில் இந்திய தூதரகம் உள்ளது. இந்நிலையில், இந்திய தூதரகத்தின்மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் இந்திய தேசிய கொடியை அகற்றியுள்ளனர். மேலும், தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காலிஸ்தான் ஆதரவு கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குரோஷியாவில் இந்திய தூதகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் … Read more

மராட்டியம்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி வேன் டிரைவர் – அதிர்ச்சி சம்பவம்

மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பத்லாபூர் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ, மாணவியரை அழைத்துச்செல்ல வேன் உள்ளது. இந்த வேனின் டிரைவராக 35 வயது நபர் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அந்த பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் நேற்று மாலை வகுப்பு முடிந்து வேனில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அனைத்து மாணவ, மாணவியரையும் இறக்கிவிட்டப்பின் கடைசியாக இருந்த மாணவிக்கு வேன் டிரைவர் வேனில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வேன் டிரைவர் … Read more