ஆந்திராவில் சொகுசு பேருந்தில் தீ: 3 பேர் உயிரிழப்பு

நெல்லூர், ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். நெல்லூரில் இருந்து ஐதராபாத்திற்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிர்திசையில் வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. லாரி மீது மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்தது. அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் … Read more

2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி

புதுடெல்லி, இந்தியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடக்க இருப்பது குறித்து ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:- “2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அறிமுகம் ஆனதில் இருந்து ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன். இந்த முறை அந்த போட்டியை வீட்டில் இருந்தபடி பார்ப்பது புதுமையாக இருக்கும். உலகக் கோப்பை போட்டியை தவற விடும் போதுதான், அதன் யதார்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்வீர்கள். அப்போது தான், உலகக் கோப்பை … Read more

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா-உக்ரைன் விருப்பம்: டாவோஸ் மாநாட்டில் டிரம்ப் பேச்சு

டாவோஸ், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் 56-வது வருடாந்திர உச்சிமாநாடு 23-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து மத்திய மந்திரிகள், மராட்டியம், அசாம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் பங்கேற்று சிறப்புரையாற்றி வருகின்றனர். இந்நிலையில், டாவோஸ் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசும்போது, ரஷியா-உக்ரைன் மோதல், நேட்டோ மற்றும் போரில் அமெரிக்காவின் பங்கு … Read more

நெல்சன் மண்டேலா மனைவிக்கு இந்திரா காந்தி அமைதி விருது

புதுடெல்லி, 2025-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது, மொசாம்பிக் நாட்டு சமூக ஆர்வலரும், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவியுமான கிரகா மச்செல்லுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக அமைதி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்காக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை இந்த விருதை வழங்குகிறது. இந்திரா காந்தி அமைதி விருது ரூ.1 கோடி பரிசுத்தொகை, பாராட்டுப்பத்திரம் மற்றும் கோப்பை ஆகியவற்றை கொண்டதாகும். … Read more

சர்வதேச செஸ் போட்டி: குகேஷ்-பிரக்ஞானந்தா ஆட்டம் டிரா

விஜ்க் ஆன் ஜீ, டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. இதில் 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பிரக்ஞானந்தா – உலக சாம்பியன் குகேஷ் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 40-வது நகர்த்தலில் ‘டிரா’ செய்தார். குகேஷ் தொடர்ச்சியாக சந்தித்த 4-வது டிரா இதுவாகும். பிரக்ஞானந்தா 2 டிரா, 2 தோல்வி கண்டுள்ளார். அர்ஜூன் … Read more

ஸ்பெயினில் மற்றொரு ரெயில் தடம் புரண்டு விபத்து: டிரைவர் பலி; 37 பேர் காயம்

பார்சிலோனா, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரின் அருகே ஜெலிடா என்ற பகுதியில் பயணிகள் ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டதில் ரெயிலின் டிரைவர் பலியாகி உள்ளார். பயணிகளில் 37 பேர் காயம் அடைந்துள்ளனர். அந்த பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால், சுவர் ஒன்று இடிந்து ரெயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த வழியே சென்ற ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த தகவல் அறிந்து, 20 ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளன. தீயணைப்பு படை பிரிவின் … Read more

டெல்லி: குடியரசு தின எச்சரிக்கை போஸ்டர்களில் முதன்முறையாக அல்-கொய்தா பயங்கரவாதியின் புகைப்படம்

புதுடெல்லி, இந்தியாவின் 77-வது குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் டெல்லி கடமை பாதையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க, 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள … Read more

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, லக்சயா சென் வெற்றி

ஜகர்த்தா, இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 33-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், 22-ம் நிலை வீரரான கோகி வாடனாபியை (ஜப்பான்) எதிர்கொண்டார். 1 மணி 12 நிமிடம் நீடித்த திரில்லிங்கான ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-15, 21-23, 24-22 என்ற செட் கணக்கில் கோகி வாட்னாபியை அடக்கி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதே போல் இந்தியாவின் … Read more

பாகிஸ்தான்: வணிக வளாக தீ விபத்தில் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

கராச்சி, பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென இதில் தீ விபத்து ஏற்பட்டது. குல் பிளாசாவில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்படும் கடைகள் உள்பட கட்டிடத்தின் 3 தளங்களிலும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபற்றி கராச்சி நகர தெற்கு பகுதிக்கான காவல் துறை டி.ஐ.ஜி. சையது … Read more

முதியவர் தற்கொலை: தேர்தல் ஆணையம் மீது மே.வங்காள அரசு வழக்குப்பதிவு

கொல்கத்தா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) பணிகள் நடைபெற்று வருகின்றன. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. சவுதலா கிராமத்தைச் சேர்ந்த துார்ஜன் மாஜி (82) என்ற பழங்குடியின முதியவர், தேர்தல் ஆணையம் பிறப்பித்த நோட்டீஸின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி எஸ்.ஐ.ஆர் விசாரணைக்காக அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டிய சில மணி நேரங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார். … Read more