இந்தியாவின் வளர்ச்சி பாதையில் பெரும் பங்கு வகிக்கிறது: திரிபுரா மாநில தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா 1972-ம் ஆண்டு ஜனவரி 21-ந்தேதி தனி மாநில அந்தஸ்து பெற்றது. இதனை முன்னிட்டு திரிபுரா மாநில தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், திரிபுரா மாநில தினத்தில் மாநில மக்களுக்கு என் இனிய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் என இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து திரிபுராவின் பயணம் அமைந்துள்ளது. … Read more

சர்வதேச செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி – குகேஷ் ஆட்டம் டிரா

விஜ்க் ஆன் ஜீ, டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, சக நாட்டவரும், உலக சாம்பியனுமான குகேசை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய தமிழகத்தின் குகேஷ் 34-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா கண்டார். இதேபோல் … Read more

4-வது குழந்தைக்கு பெற்றோராகும் அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ்-உஷா தம்பதி

நியூயார்க், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசில் துணை ஜனாதிபதியாக ஜே.டி. வான்ஸ் பதவி வகித்து வருகிறார். இவருடைய மனைவி உஷா வான்ஸ். இந்த தம்பதிக்கு, இவான் (வயது 8), விவேக் (வயது 5) மற்றும் மிராபெல் (வயது 4) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், வான்ஸ்-உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறக்க உள்ளது. இதனை அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளனர். அதில், உஷாவுக்கு 4-வது ஒரு குழந்தை பிறக்க உள்ளது. … Read more

அசாமில் மீண்டும் வன்முறை: செல்போன், இணையதள சேவை துண்டிப்பு

கவுகாத்தி, அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் போடோ சமூகத்தை சேர்ந்த 3 பேர் ஒரு வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் ஆதிவாசி ஒருவர் மீது மோதியதால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வாகனத்தில் வந்தவர்களை ஆதிவாசிகள் தாக்கினர். மேலும், அவர்களது வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. சில வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஒரு கும்பல் தேசிய நெடுஞ்சாலைகளில் டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தினர். அரசு அலுவலகத்துக்கு தீ … Read more

முதல் டி20 போட்டி: இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்

மும்பை, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் … Read more

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை குறைந்துள்ளது: டாவோஸ் மாநாட்டில் மத்திய மந்திரி ஜோஷி பேச்சு

டாவோஸ், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் 56-வது உலக பொருளாதார மாநாடு 23-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து மத்திய மந்திரிகள், மராட்டியம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், டாவோஸ் மாநாட்டில் மத்திய மந்திரி ஜோஷி பேசும்போது, ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவது என்பது வளர்ச்சிக்கு ஒரு சுமையல்ல. அதுவே வளர்ச்சிக்கான இயந்திரம் என்பதே இந்தியாவின் செயல்பாட்டுக்கான திட்டம் ஆகும். அதனாலேயே இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க … Read more

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று இறுதி விசாரணை

புதுடெல்லி, கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கட்சியின் அப்போதைய பொருளாளராக இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக மு.க.ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய சைதை துரைசாமி, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி … Read more

’3வது இடத்தில் இஷான் கிஷன்’…இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ்

சென்னை, நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் டி20 தொடரில் 3வது இடத்தில் இஷான் கிஷன் களம் இறங்குவார் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். காயத்தால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளில் இருந்து திலக் விலகியதால் இஷான் கிஷனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று நாக்பூரில் தொடங்கும் நிலையில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூர்யகுமார், ”ஒரு தொடரில் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் … Read more

பாகிஸ்தான்: அடர்பனியால் வாகனங்கள் மோதல்; 5 பேர் பலி, 8 பேர் காயம்

பஞ்சாப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் சிக்கி பள்ளி குழந்தை உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் காயம் அடைந்தனர். இதில் முதல் சம்பவத்தில், நான்கானா சாகிப் பகுதியில் புச்சிகீ சாலையில் பள்ளி வேன் ஒன்றும் பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டது. அடர்ந்த பனியால் தெளிவற்ற பார்வைநிலையால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் வேன் ஓட்டுநர் அஸ்கார் (வயது 35), துராப் அலி (வயது 15) … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான புகாரை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

புதுடெல்லி, ராஜஸ்தானில், மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அம்மாநில லஞ்ச ஒழிப்புத் துறை அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட், ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விசாரணை நடத்தவும், வழக்கு பதிவு செய்யவும் முழு அதிகாரம் உள்ளது’ என தீர்ப்பளித்தது. ராஜஸ்தான் ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக, மத்திய அரசு ஊழியர் தரப்பில் … Read more