வங்காளதேச வீரர்களையும் ஐ.பி.எல். விளையாட அனுமதிக்கக்கூடாது; பாஜக

கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்திருந்த வங்காளதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு இ்ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இ்ந்நிலையில், ேமற்கு வங்காள மாநில பா.ஜனதா முன்னாள் தலைவர் திலீப் கோஷ், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை வரவேற்கிறோம். அதற்கு நன்றி.பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். பந்தயத்தில் விளையாட அனுமதிக்கப்படுவது இல்லை. அதுபோல், வங்காளதேச கிரிக்கெட் வீரர்களும் விளையாட அனுமதிக்கப்படக்கூடாது. … Read more

ஆஷஸ் டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 211/3

சிட்னி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 டெஸ்டுகளில் ஆஸ்திரேலியாவும், 4-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் 6,134 கைதிகள் விடுதலை

நேபிடாவ், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மியான்மர் 1948-ம் ஆண்டு தனிநாடாக உருவானது. இதன் 78-வது சுதந்திர தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அங்கு சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சிறையில் உள்ள 6 ஆயிரத்து 134 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி ராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லைங் உத்தரவிட்டுள்ளார். அவர்களில் 52 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் கொலை, பலாத்காரம் போன்ற கடுமையான குற்றம் … Read more

திரிபுரா, அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – மக்கள் அச்சம்

ஷில்லாங், திரிபுரா மற்றும் அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. திரிபுராவின் கோமதி பகுதியில் இன்று அதிகாலை 3.33 மணியளவில் ரிக்டர் அளவில் 3.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 54 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 23.67 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 91.50 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து, அசாமில் உள்ள மோரிகான் பகுதியில் இன்றூ காலை 4.17 மணியளவில் ரிக்டர் … Read more

விஜய் ஹசாரே கோப்பை: தேவ்தத் படிக்கல் சதம்…கர்நாடகா அசத்தல் வெற்றி

ஆமதாபாத். 33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் கர்நாடகா, திரிபுரா அணிகள் மோதின. இதில், முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் கர்நாடக அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் சதமடித்து 108 … Read more

வெனிசுலாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட ஜி7 நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயார்: ஜப்பான் பிரதமர்

டோக்கியோ, அமெரிக்காவுக்குள் வெனிசுலா அபாயகர போதை பொருட்களை கடத்துகிறது என்றும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி சிலியா புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க … Read more

மதுபானம் கொடுத்து 12 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அனில். இவர் கடந்த 29.11.2025 அன்று 12 வயது பள்ளி மாணவனை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவன், இதுபற்றி தனது நண்பனிடம் கூறியுள்ளான். அவன் தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து, இந்த சம்பவம் வெளியே தெரியவந்தது. இதுகுறித்து 12 வயது பள்ளி மாணவனின் உறவினர்கள் … Read more

வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை நீக்கியதற்கு சசி தரூர் கண்டனம்

கொல்கத்தா, 2026 ஐ.பி.எல். போட்டிக்கான மினி ஏலத்தில் 7 வங்காளதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகபந்துவீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. அந்த அணியின் உரிமையாளர் … Read more

நைஜீரியா: ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 25 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டின் யொபி மாகாணத்தில் உள்ள யொபி ஆற்றில் நேற்று இரவு படகு சென்றுகொண்டிருந்தது. கர்பி நகரில் உள்ள சந்தைக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு 52 பேர் படகில் பயணித்தனர். இரவு பயணித்தபோது எதிர்பாராத விதமாக படகு ஆற்றில் கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் மாயமாகினர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், ஆற்றில் … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 10.55 மணியளவில் ரிக்டர் அளவில் 3.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 35 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.31 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.57 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. EQ of M: 3.7, … Read more