கேரளாவில் இளம்பெண் தற்கொலை: கணவன் 5 மாதங்களுக்குமுன் உயிரிழந்த நிலையில் விபரீத முடிவு

திருவனந்தபுரம், கேரளாவின் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 38). இவருக்கும் ரேஷ்மா (வயது 32) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே, நர்சிங் படித்திருந்த சுகுமாரன் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் வேலை பார்த்து வந்தார். அவர் அங்கு 80 வயது மூதாட்டி ஒருவருக்கு கேர் கிவ்வராக (மருத்துவ பராமரிப்பாளர்) வேலை செய்து வந்தார். ஆனால், கடந்த ஜுலை மாதம் ஜெருசலேமில் தான் … Read more

2026-ம் ஆண்டு எப்படி இருக்கும்? நாஸ்டர்டாமஸ் கணிப்புகள் வெளியாகி பரபரப்பு

2025-ம் ஆண்டு முடிந்து 2026 தொடங்க உள்ளது. புதிய ஆண்டு என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதை அறிய அனைவரும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஜோதிடர்கள் 2026-ம் ஆண்டில் வரவிருக்கும் மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்கள். இந்த சூழலில் பிரபல பிரெஞ்சு ஞானி நாஸ்டர்டாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கணிப்புகள் வைரலாகி வருகின்றன. எதிர்காலத்தை கணித்த தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன … Read more

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து

புதுடெல்லி, 2024-ம் ஆண்டின் கடைசி நாளுக்கு விடை கொடுத்து, 2026 புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல்வேறு நாடுகளில் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. புத்தாண்டை வரவேற்பதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு … Read more

டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை தீப்தி சர்மா…!

திருவனந்தபுரம், இந்தியா, இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான 5வது டி20 கிரிக்கெட் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இலங்கையை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 1 விக்கெட் வீழ்த்திய இந்திய வீராங்கனை தீப்தி சர்மா வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதன்படி தீப்தி சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 133 போட்டிகளில் ஆடிய தீப்தி சர்மா … Read more

வங்காளதேசம்; மாணவர் இயக்க தலைவர் கொலையில் தேடப்படும் நபர் துபாயில் பதுங்கல்

டாக்கா வங்காளதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து போராட்டமும் வன்முறையும் வெடித்தன. இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். தொடர்ந்து இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன.இதற்கிடையே, ஷெரீப் உஸ்மான் ஹாடியை கொன்றவர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக வங்காளதேச இடைக்கால அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையில் தேடப்படும் பைசல் கரீம் … Read more

டெல்லி: தீ விபத்தில் தம்பதி பலி

டெல்லி, தலைநகர் டெல்லியின் ஷாதரா நகர் ஷிவ்புரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் தளத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பிரேம் சாஹர் (வயது 75) அவரது மனைவி ஆஷா (வயது 65) ஆகிய இருவர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், வீட்டிற்குள் தீக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த தம்பதியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more

டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

காபுல், 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான அணி வீரர்களை அந்தந்த நாடுகள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷீத் கான் அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் … Read more

2026-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் மோதல் ஏற்படலாம் – அமெரிக்கா கணிப்பு

வாஷிங்டன், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குத லையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த நிலையில் 2026-ம் ஆண்டில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் ஆயுத மோதல் ஏற்படும் என்று அமெரிக்க சிந்தனைக் குழு ஒன்று கணித்துள்ளது. க வுன்சில் ஆன் பாரின் ரிலேஷன்ஸ் அமைப்பு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அதிகரித்த பயங்கரவாதச் செயல்பாடு காரணமாக … Read more

அசாம்: மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக கூறி தம்பதி உயிருடன் எரித்து கொலை

திஸ்பூர், அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள பெலுகுரி முண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கார்டி பிருவா(43). இவரது மனைவி மிரா பிருவா(33). இவர்கள் இருவரும் மாந்திரீகம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தாக கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கார்டி பிருவாவின் வீட்டை அடித்து நொறுக்கினர். பின்னர் கார்டி பிருவா மற்றும் அவரது மனைவி மிரா ஆகிய இருவரையும் அவர்களின் வீட்டு வாசலில் வைத்து … Read more

கோமாவில் இருந்த கிரிக்கெட் வீரர்…8 ஆண்டுகளுக்கு பின் உயிரிழப்பு

கொழும்பு இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ(Akshu Fernando) (வயது 25) வலது கை துடுப்பாட்டக்காரரான பெர்னாண்டோ, 2008 ஆம் ஆண்டில் பாணந்துறை அணிக்காக 23 வயதுக்குட்பட்டோர் போட்டியில் விளையாடியதன் மூலம் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேலும், கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப், பாணந்துறை விளையாட்டுக் கழகம் மற்றும் சிலாவ் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கடந்த 2018 டிசம்பர் 28 அன்று, மவுண்ட் லவ்னியாவில் கடற்கரையில் பயிற்சி அமர்வின் போது, ரெயில் … Read more