டெல்லியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு

புதுடெல்லி, டெல்லியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.44 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.86 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 77.06 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. EQ of M: 2.8, … Read more

நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள்…முதலிடத்தில் ‘கோலி’

சென்னை, நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 54வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரது 85-வது சதமாகும். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டேரல் மிட்செல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் … Read more

ஸ்பெயின் ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு; 100 பேர் காயம்

மாட்ரிட், ஸ்பெயின் நாட்டின் கார்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதனால், அந்த அதிவிரைவு ரெயில், அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்தில் சென்றது. அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த, அரசால் நடத்தப்படும் ரெயில் மீது மோதியது. … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாத தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் வெளியீடு

திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசிப்பதற்கான பல்வேறு சேவை டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியாக உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவா உள்ளிட்டவை இன்று (19ம் தேதி) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த சேவை டிக்கெட்டுகளை ஜனவரி 21ம்தேதி காலை 10 மணி வரை மின்னணு … Read more

சர்வதேச செஸ் போட்டி: பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார் எரிகைசி

விஜ்க் ஆன் ஜீ, டாட்டா ஸ்டீல் 88-வது சர்வதேச செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 1-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 32-வது காய் நகர்த்தலில் நடப்பு சாம்பியனான தமிழகத்தின் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய உலக … Read more

செர்பியா அரசில் ஊழல்; ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்ப்பு பேரணி

நோவி சாத், செர்பியா நாட்டில் ஜனாதிபதியாக அலெக்சாண்டர் உசிக் பதவி வகித்து வருகிறார். அவருடைய அரசில் பெரிய அளவில் ஊழல்கள் நடந்து வருகின்றன என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதில், அரசில் உள்ள ஊழல் அதிகாரிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் சொத்துகளை பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளனர். இதற்காக மாணவர்கள் ஒன்றாக கூடி, தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு … Read more

போலந்து துணை பிரதமருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்திப்பு

புதுடெல்லி, போலந்து நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு துறை மந்திரியான ரதோஸ்லாவ் சிகோர்ஸ்கி இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 17-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தந்த அவரை, டெல்லியில் கூடுதல் செயலாளர் பூஜா கபூர் வரவேற்றார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகருக்கு வருகை தந்த அவர், ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நேற்று கலந்து கொண்டார். இந்நிலையில், இன்று காலை அவர் டெல்லி சென்று சேர்ந்துள்ளார். டெல்லியில் அவர், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை இன்று … Read more

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு பதிலடி கொடுக்குமா குஜராத்? – வதோதராவில் இன்று மோதல்

வதோதரா, 5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவி மும்பையில் நடந்தன. இந்த நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 12-வது லீக்கில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்சுடன் மல்லுகட்டுகிறது. … Read more

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.27 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய … Read more

அமீரக அதிபர் இன்று இந்தியா வருகை; பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்

புதுடெல்லி, அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக இன்று (திங்கட்கிழமை) வருகிறார். சமீபத்தில் அமீரகம் சென்ற மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமிடம் பிரதமர் மோடியின் அழைப்பை வழங்கினார். அந்த அழைப்பை ஏற்று இந்த சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருடன் அமீரகத்தின் பல மந்திரிகள், மூத்த அதிகாரிகள், உயர் மட்ட வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் … Read more