இந்திய பயணம் நிறைவு: ரஷியா புறப்பட்டார் புதின்

டெல்லி, 2 நாட்கள் அரசு முறை பயணமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புதன்கிழமை இரவு டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து, கடந்த 2 நாட்களாக புதின் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி நேற்று 23வது இந்தியா – ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் கலந்து கொண்டனர். பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த பயணத்தின்போது இந்தியா … Read more

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: தமிழக வீரர் ‘சாம்பியன்’

சென்னை, எச்.சி.எல். இந்திய சுற்றுப்பயண சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் 4-வது சுற்று சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 46-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார் 11-7, 11-9, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் எகிப்தின் ஆடம் ஹவாலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். பெண்கள் ஒற்றையர் இறுதிசுற்றில் தரவரிசையில் 29-வது இடத்தில் இருக்கும் டெல்லியை … Read more

பான் மசாலாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதுடெல்லி, பான் மசாலா மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, அதற்கு பதிலாக கூடுதல் வரி விதிக்கும் வகையில் சுகாதாரம் மற்றும் தேச பாதுகாப்பு செஸ் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது நேற்று முன்தினம் முதல் விவாதம் நடந்தது. இந்த விவாதத்துக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒரு செஸ் வரியை விதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு … Read more

வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியாவுக்கு 16 மாதம் தடை

புது டெல்லி, இந்திய வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியா ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணை முடிவில் அவருக்கு 16 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரியானாவைச் சேர்ந்த 42 வயதான சீமா பூனியா 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் சாம்பியன் ஆவார். காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கம் வென்று இருக்கிறார். 1 More update தினத்தந்தி Related Tags : Seema Punia  NADA  fails dope test  throwball player  வட்டு எறிதல்  … Read more

ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து – திணறும் இண்டிகோ

டெல்லி, விமான விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து துறை புதிய விதிகளை வகுத்தது. அதன்படி, ஒரு விமானி தொடர்ச்சியாக 18 மணி நேரம் பறக்கலாம் என்ற விதி 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது. வாரத்திற்கு 48 மணி நேரம் கட்டாயம் விடுமுறை வழங்கப்பட வேண்டும் உள்பட பல்வேறு புதிய விதிகள் விதிக்கப்பட்டன. இந்த விதிகளை பின்பற்றாத விமான நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை … Read more

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை: தொடரை வெல்லப்போவது யார்?

விசாகப்பட்டினம், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி … Read more

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம்

லண்டன், ஐரோப்பிய ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சட்டவிதிமுறைகளை அறிமுகம் செய்தது. அதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சட்டவிதிகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டு இருந்தது. அப்போதிருந்தே உலகின் முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்கின், எக்ஸ் வலைத்தளம் அந்த புதிய விதிகளுக்கு இணங்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் விதிகளுக்கு இணங்க … Read more

2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை… தூக்கில் போடக்கோரி கிராம மக்கள் மனு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். மேலும் மஞ்சுநாத் தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடிபோதைக்கு மஞ்சுநாத் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இதற்கிடையே பள்ளிக்கூடத்திற்கு … Read more

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: வேலவன் செந்தில்குமார், அனாஹத் “சாம்பியன்”

சென்னை, எச்.சி.எல். இந்திய சுற்றுப்பயண சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் 4-வது சுற்று சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 46-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார் 11-7, 11-9, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் எகிப்தின் ஆடம் ஹவாலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். பெண்கள் ஒற்றையர் இறுதிசுற்றில் தரவரிசையில் 29-வது இடத்தில் இருக்கும் டெல்லியை … Read more

பாகிஸ்தானின் பாதுகாப்பு படைகளின் தலைவராக அசிம்முனீர் நியமனம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. இதற்காக அரசியல் சாசனத்தின் 243-வது பிரிவில் 27-வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் கடும் பின்னடைவை சந்தித்ததால் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்தது. மேலும் ராணுவ தளபதியான பீல்டு மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைவராக … Read more