அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்திய சாதகமான சூழல் காரணமாக இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

வலுவான பொருளாதாரத்துடன், நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழல் இன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலை மேலும் வலுப்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பை பெற எதிர்பார்க்கிறோம்- ஜனாதிபதி. கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்த சரியான தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதுடன் இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் தொங்குபாலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை … Read more

தேசிய எண்ணெய் தேய்த்தல் விழா ஏப்ரல் 15 ஆம் திகதி வத்தளை ஹெந்தல புராண ரஜமஹா விகாரையில்!

ஏப்ரல் 18 ‘முருங்கை தினம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது – சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி. தமிழ், சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் சுப நிகழ்வுகளில் ஒன்றான தலைக்கு எண்ணெய் தேய்த்தல் தேசிய விழா ஏப்ரல் 15 ஆம் திகதி காலை 10.17 க்கு நடைபெறவுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்தார். … Read more

'கொரிய மற்றும் இலங்கை பிரதமர்கள் சந்திப்பில் புதிய துறைகளில் கொரிய வேலைவாய்ப்புகள்.'

கொரியப் பிரதமர் ஹான் டக் சூவுக்கும் (Han Duck Soo) இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (2024.04.04) சியோலில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கு பல புதிய தொழில் வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் என கொரிய பிரதமர் இதன்போது தெரிவித்தார். விவசாயம், நிர்மாணத்துறை மற்றும் வேறு கைத்தொழில் துறைகளில் தனது நாட்டில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டிருக்கும் தொழிற்படைக்கு மேலதிகமாக, சுகாதார சேவைகள் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி கொரியப் … Read more

திருகோணமலை குச்சவெளி பிச்சமல் விகாரையில் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம்!

திருகேகுச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று வரும் விகாரை புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்கு 1.5 மில்லியன் நிதியும், தொல்பொருள் அருங்காட்சியகத்தை ஆரம்பிப்பதற்கு 3.5 மில்லியன் நிதியும் ஒதுக்கீடு செய்தார். உள்ளூராட்சி சபைகளால் பராமரிக்கப்படாத விகாரையை சுற்றியுள்ள கடற்கரையை ஆய்வு செய்து, 24 மணி நேரத்திற்குள் கடற்கரையை சுத்தம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்தார்.

“Dunhinda Odyssey'' புதிய ரயில் சேவை இன்று முதல்…

புகையிரத சேவைக்கு 100 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று (05) முதல் “Dunhinda Odyssey” என்ற விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த சொகுசு சுற்றுலா புகையிரதம் வெள்ளிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு பதுளை நோக்கி புறப்படும் என்றும், சுற்றுலாப் … Read more

மக்கள் நலத் திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளைப் போலவே அரசாங்க அதிகாரிகளையும் சார்ந்துள்ளது 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும, உறுமய, மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட வேலைத் திட்டங்களின் பலன்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட உறுமய, அஸ்வெசும மற்றும் மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அரசியல் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினரைத் தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி … Read more

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவை

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்; அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் பணிப்புரையின் பிரகாரம், இம்முறையும் புத்தாண்டின்; இரண்டு வாரங்கள் விசேட பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை இலங்கை போக்குவரத்து சபை தயாரித்துள்ளது என்று அதன் பிரதானி எஸ்.எம்.டி.எல்.கே.டி. அல்விஸ் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்படி, இன்று (05) முதல் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் … Read more

ICCயின் மார்ச் மாதத்திற்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக கமிந்து மெண்டிஸ் பரிந்துரைக்கப்பட்டார்

மார்ச் மாதத்திற்கான ICC துடுப்பாட்ட வீரர் விருதுக்கு இலங்கை அணியின் துடுப்பாட்ட் வீரர் கமிந்து மெண்டிஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட் தொடரில் கமிதுவின் அபார துடுப்பாட்டமே அதற்கு காரணம். கமிந்து மெண்டிஸைத் தவிர, அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் அடேர் மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி ஆகியோர் மார்ச் மாதத்திற்கான துடுப்பாட்ட வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். முடிவடைந்த பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 367 ஓட்டங்களை … Read more

19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்று (05) காலியில் ஆரம்பமாகும்

இலங்கை – அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (05) ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டி இன்று (05)இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 7ஆம் திகதியும், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி 9ஆம் திகதியும் காலி சர்வதேச … Read more

ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்கு இலங்கை இராணுவக் குழு லெபனான் புறப்பட்டுச் சென்றது

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் (UNIFIL) உள்ள இலங்கை படை பாதுகாப்பு குழுவிற்கு (SLFPC) 125 பேரைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் 15வது குழு புதன்கிழமை (ஏப்ரல் 03) ஐ.நா பணிக்காக நாட்டை விட்டு வெளியேறியதாக இலங்கை இராணுவம் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் (மார்ச் 09) முதல் கட்டமாக ஐ.நா பணிக்காக சென்ற 12 இராணுவ வீரர்களை உள்ளடக்கிய 15வது SLFPC இன் முன்கூட்டிய குழுவை தொடர்ந்து இந்த குழு அங்கு சென்றுள்ளது … Read more